Post by radha on Jul 17, 2012 9:38:25 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஆடியும் அம்பாள் வழிபாட்டின் சிறப்பும்!
ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள். அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான். சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது. தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே ஆடி என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டைமேற்கொண்டால்அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.
இவளுக்கு ஆயிரம் கண்ணாமே!
தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் சகஸ்ராக்ஷி என்ற திருநாமம் உண்டு. இதற்கு ஆயிரம் கண் கொண்டவள் என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள் என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான். சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகியாக அருள்புரிகிறாள். உலகம் முழுவதும் நடக்கும் அத்தனை நிகழ்வுக்கும் ஒரே சாட்சியாக இருப்பவள் அம்பிகை என்பதை இப்பெயர் உணர்த்துகிறது. ஞானிகளுக்கு மூளையின் அனைத்து கண்ணறைகளும் திறந்திருப்பதாலே முக்காலமும் அறியும் சக்தி உண்டாகிறது. சகஸ்ராக்ஷியாக இருக்கும் அம்பிகையே குண்டலினி சக்தியாக இருந்து, மூலக்கனலை எழுப்பி ஞானத்தை வழங்குகிறாள்.
அம்பாளுக்கு தனி விழா: சக்தி தலங்களில் முதன்மையானதாகத் திகழ்வது மதுரை. இங்கு சித்திரை தொடங்கி ஆடிவரை நான்கு மாதம் அம்பிகை பட்டத்தரசியாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம். ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா பத்துநாட்கள் நடக்கும். கோயிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்குச் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.
பிடிச்ச மாப்பிள்ளை வருவார்: கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்துவேப்பிலை, புளிய இலை, புங்கஇலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இந்த வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச்செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி என்று சொல்வர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம். ஆண்களுக்கு இந்த விரதத்தில் பங்கேற்க அனுமதியில்லை. கொழுக்கட்டை பிரசாதம் கூட தருவதில்லை.
அம்மனுக்கு ஆறுமாதம்: ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வதை தட்சிணாயன காலம் என்பர். தட்சிணம் என்றால் தெற்கு. (இதனால் தான் தெற்குமுக கடவுளை தட்சிணாமூர்த்தி என்றும், தென்னக ரயில்வேயை தட்சிண ரயில்வே என்றும் சொல்வர்) இந்த ஆறுமாதமும் தேவலோகத்தில் இரவாக இருக்கும். இந்த மாதங்களில் பூலோகத்திலும் இரவுநேரம் கூடுதலாக இருக்கும். பகல் பொழுதைக் குறிக்கும் தைமுதல் ஆனி வரையான உத்ராயணத்தில் சிவனையும், இரவுப்பொழுதைக் குறிக்கும் தட்சிணாயனத்தில் அம்பிகையையும் வழிபடுவர். இதன் அடிப்படையில் ஆடியில் மாரியம்மன் வழிபாடு குறிப்பாக மாரி, காளி போன்ற தனி பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. கூழ்வார்த்தல், பொங்கல் இடுதல், மாவிளக்கு வைத்தல் போன்ற நேர்த்திகடன்களை ஆடியில் பக்தர்கள் நிறைவேற்றுவர். அம்மனும், சுவாமியும் வீற்றிருக்கும் கோயில்களில் அம்மனுக்கு தனிவிழாவாக முளைக்கொட்டு விழா ஆடியில் நடத்துவர். மேலும் புரட்டாசியில் நவராத்திரி, மார்கழி பாவைநோன்பு ஆகியவை நடக்கிறது. பாவை நோன்பு கார்த்தியாயினி தேவிக்குரிய விரதமாக அக்காலத்தில் இருந்தது. ஆண்டாள், மாணிக்கவாசகர் காலத்திற்குப்பின் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பாக மாறி விட்டது.
தோஷம் போக்கும் ஆடிவெள்ளி: ஆடிவெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனையும், முருகனையும் வேண்டி சுக்கிரவார விரதம் மேற்கொள்வர். நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி அம்மன், முருகனை வழிபடவேண்டும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் மேற்கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும். சுக்கிரதோஷம் காரணமாக பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,மீண்டும் சேர்வர்.
ஆடியில் சூரிய பூஜை: திருச்சி அருகிலுள்ள நெடுங்களநாதர் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும். இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமரிசையாக நடைபெறும்.
துளசி வழிபாடு: ஆடி மாதம் வளர்பிறை துவாதசி தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசியை வழிபட நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.
ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி: ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் விசேஷமானவை. அன்றைய தினம் இல்லத்தின் வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் குத்து விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடி தேவியை வணங்குவது நன்மை தரும். பால் பாயசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவளித்து, அவர்களுக்கு மங்களப் பொருட்களைக் கொடுத்து சிறப்பிக்க, தேவியின் அருள் கிடைக்கும்.
வாராஹி நவராத்திரி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரிக்கு வித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீ சக்கரமே தாடங்கமாக உள்ளது. ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். வாராஹியின் அம்சமான திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை இக்கால கட்டத்தில் தரிசிப்பது சிறப்பானது. தகடூரிலுள்ள கோட்டை கல்யாண காமாட்சி கோயிலில் அருள்பாலிக்கும் சூலினி துர்க்கையின் முழு உருவத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே!
நாகபூஜை: ஆடி வெள்ளியில், புற்றுள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று நாக தேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வது தோஷங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை. நவசக்தி அர்ச்சனை, சண்டி ஹோமம் போன்றவையும் செய்வார்கள்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
ஆடியும் அம்பாள் வழிபாட்டின் சிறப்பும்!
ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள். அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான். சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது. தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே ஆடி என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டைமேற்கொண்டால்அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.
இவளுக்கு ஆயிரம் கண்ணாமே!
தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் சகஸ்ராக்ஷி என்ற திருநாமம் உண்டு. இதற்கு ஆயிரம் கண் கொண்டவள் என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள் என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான். சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகியாக அருள்புரிகிறாள். உலகம் முழுவதும் நடக்கும் அத்தனை நிகழ்வுக்கும் ஒரே சாட்சியாக இருப்பவள் அம்பிகை என்பதை இப்பெயர் உணர்த்துகிறது. ஞானிகளுக்கு மூளையின் அனைத்து கண்ணறைகளும் திறந்திருப்பதாலே முக்காலமும் அறியும் சக்தி உண்டாகிறது. சகஸ்ராக்ஷியாக இருக்கும் அம்பிகையே குண்டலினி சக்தியாக இருந்து, மூலக்கனலை எழுப்பி ஞானத்தை வழங்குகிறாள்.
அம்பாளுக்கு தனி விழா: சக்தி தலங்களில் முதன்மையானதாகத் திகழ்வது மதுரை. இங்கு சித்திரை தொடங்கி ஆடிவரை நான்கு மாதம் அம்பிகை பட்டத்தரசியாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம். ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா பத்துநாட்கள் நடக்கும். கோயிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்குச் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.
பிடிச்ச மாப்பிள்ளை வருவார்: கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்துவேப்பிலை, புளிய இலை, புங்கஇலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இந்த வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச்செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி என்று சொல்வர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம். ஆண்களுக்கு இந்த விரதத்தில் பங்கேற்க அனுமதியில்லை. கொழுக்கட்டை பிரசாதம் கூட தருவதில்லை.
அம்மனுக்கு ஆறுமாதம்: ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வதை தட்சிணாயன காலம் என்பர். தட்சிணம் என்றால் தெற்கு. (இதனால் தான் தெற்குமுக கடவுளை தட்சிணாமூர்த்தி என்றும், தென்னக ரயில்வேயை தட்சிண ரயில்வே என்றும் சொல்வர்) இந்த ஆறுமாதமும் தேவலோகத்தில் இரவாக இருக்கும். இந்த மாதங்களில் பூலோகத்திலும் இரவுநேரம் கூடுதலாக இருக்கும். பகல் பொழுதைக் குறிக்கும் தைமுதல் ஆனி வரையான உத்ராயணத்தில் சிவனையும், இரவுப்பொழுதைக் குறிக்கும் தட்சிணாயனத்தில் அம்பிகையையும் வழிபடுவர். இதன் அடிப்படையில் ஆடியில் மாரியம்மன் வழிபாடு குறிப்பாக மாரி, காளி போன்ற தனி பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. கூழ்வார்த்தல், பொங்கல் இடுதல், மாவிளக்கு வைத்தல் போன்ற நேர்த்திகடன்களை ஆடியில் பக்தர்கள் நிறைவேற்றுவர். அம்மனும், சுவாமியும் வீற்றிருக்கும் கோயில்களில் அம்மனுக்கு தனிவிழாவாக முளைக்கொட்டு விழா ஆடியில் நடத்துவர். மேலும் புரட்டாசியில் நவராத்திரி, மார்கழி பாவைநோன்பு ஆகியவை நடக்கிறது. பாவை நோன்பு கார்த்தியாயினி தேவிக்குரிய விரதமாக அக்காலத்தில் இருந்தது. ஆண்டாள், மாணிக்கவாசகர் காலத்திற்குப்பின் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பாக மாறி விட்டது.
தோஷம் போக்கும் ஆடிவெள்ளி: ஆடிவெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனையும், முருகனையும் வேண்டி சுக்கிரவார விரதம் மேற்கொள்வர். நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி அம்மன், முருகனை வழிபடவேண்டும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் மேற்கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும். சுக்கிரதோஷம் காரணமாக பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,மீண்டும் சேர்வர்.
ஆடியில் சூரிய பூஜை: திருச்சி அருகிலுள்ள நெடுங்களநாதர் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும். இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமரிசையாக நடைபெறும்.
துளசி வழிபாடு: ஆடி மாதம் வளர்பிறை துவாதசி தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசியை வழிபட நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.
ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி: ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் விசேஷமானவை. அன்றைய தினம் இல்லத்தின் வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் குத்து விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடி தேவியை வணங்குவது நன்மை தரும். பால் பாயசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவளித்து, அவர்களுக்கு மங்களப் பொருட்களைக் கொடுத்து சிறப்பிக்க, தேவியின் அருள் கிடைக்கும்.
வாராஹி நவராத்திரி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரிக்கு வித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீ சக்கரமே தாடங்கமாக உள்ளது. ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். வாராஹியின் அம்சமான திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை இக்கால கட்டத்தில் தரிசிப்பது சிறப்பானது. தகடூரிலுள்ள கோட்டை கல்யாண காமாட்சி கோயிலில் அருள்பாலிக்கும் சூலினி துர்க்கையின் முழு உருவத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே!
நாகபூஜை: ஆடி வெள்ளியில், புற்றுள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று நாக தேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வது தோஷங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை. நவசக்தி அர்ச்சனை, சண்டி ஹோமம் போன்றவையும் செய்வார்கள்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam