Post by Kanchi Periva on Apr 25, 2019 16:37:39 GMT 5.5
பெரியவா சரணம்
சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வர அவதாரமான ஸ்ரீ ஆதி சங்கரர் நிறுவிய மடங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கி வரும் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக அருள் பாலித்த அவதார புருஷர், “கலியுகக் கடவுள்”, “நடமாடும் தெய்வம்”, “பரமாச்சார்யாள்”, “மஹா ஸ்வாமி” என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். எத்தனையோ பெயர்கள் கொண்டு நாம் இவரை அழைத்தாலும், “மஹா பெரியவா” என்று சொன்னால் சின்னஞ்சிறு குழந்தைகளும் கூட எளிதில் அடையாளம் காட்டக்கூடிய “உம்மாச்சி தாத்தா”-வாக இன்றும் நம் நெஞ்சங்களில் குடி கொண்டு இருக்கிறார் நம்முடைய ஸ்ரீ சரணர்.
எப்படி வைகாசி விசாகம் என்றவுடன் நமக்கு முருகப்பெருமான் நினைவு வந்துவிடுகிறதோ, அப்படியே வைகாசி அனுஷம் என்றவுடன் நமக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் அவதார தினம் நினைவுக்கு வந்துவிடுகிறது. பூர்வாஸ்ரமத்தில் "ஸ்வாமிநாதன்" என்ற முருகப்பெருமானின் திருப்பெயருடன் 13 ஆண்டுகள் வலம் வந்த பின், "ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்" என்ற திருநாமம் கொண்டு இந்த கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக, தன் வாழ்க்கையையே நமக்கு ஒரு பாடமாக வடித்துக் கொடுத்த கருணாமூர்த்தி நம்முடைய ஸ்ரீ மஹா பெரியவா.
ஒரு நூறு ஆண்டுகள் நம்மிடையே மானுட வடிவில், சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனே வாழ்ந்தது இந்த பூவுலகின் பெரும் பாக்கியம். இவ்வாறு நாம் பெற்ற பெரும் பேற்றினை எண்ணி மகிழும் விதமாக நாம் ஒவ்வொரு வருடமும் வைகாசி அனுஷம் அன்று ஸ்ரீ மஹா பெரியவாளின் ஜயந்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நிகழும் விகாரி வருடம், ஸ்ரீ மஹா பெரியவாளின் 126-வது அவதார தினத்தை மே மாதம் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை, கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
இந்த திருநாளை கொண்டாடும் விதமாக உங்கள் காஞ்சி பெரியவா ஃபோரம், குஹானந்தா சாரிட்டபிள் டிரஸ்ட், ஸ்ரீ சங்கர குருகுலம், திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அடையாறு தர்ம பரிபாலன சபா உடன் இணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அடுத்த பக்கங்களில் முழுமையாக தரப்பட்டுள்ளன.
இத்தகைய அருமையான சந்தர்ப்பத்தை பக்தகோடிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மஹா பெரியவாளின் ஜயந்தி வைபவத்தில் கலந்துகொண்டு, ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாகும்படி பேரன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: நம் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடக்க உள்ளதால் பக்தர்கள் ஒவ்வொரு நாளின் இட விவரங்களை தெளிவாக குறித்துக்கொண்டு வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நமஸ்காரங்களுடன்,
காஞ்சி பெரியவா ஃபோரம்
Download the full invitation with program details by clicking here
சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வர அவதாரமான ஸ்ரீ ஆதி சங்கரர் நிறுவிய மடங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கி வரும் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக அருள் பாலித்த அவதார புருஷர், “கலியுகக் கடவுள்”, “நடமாடும் தெய்வம்”, “பரமாச்சார்யாள்”, “மஹா ஸ்வாமி” என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். எத்தனையோ பெயர்கள் கொண்டு நாம் இவரை அழைத்தாலும், “மஹா பெரியவா” என்று சொன்னால் சின்னஞ்சிறு குழந்தைகளும் கூட எளிதில் அடையாளம் காட்டக்கூடிய “உம்மாச்சி தாத்தா”-வாக இன்றும் நம் நெஞ்சங்களில் குடி கொண்டு இருக்கிறார் நம்முடைய ஸ்ரீ சரணர்.
எப்படி வைகாசி விசாகம் என்றவுடன் நமக்கு முருகப்பெருமான் நினைவு வந்துவிடுகிறதோ, அப்படியே வைகாசி அனுஷம் என்றவுடன் நமக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் அவதார தினம் நினைவுக்கு வந்துவிடுகிறது. பூர்வாஸ்ரமத்தில் "ஸ்வாமிநாதன்" என்ற முருகப்பெருமானின் திருப்பெயருடன் 13 ஆண்டுகள் வலம் வந்த பின், "ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்" என்ற திருநாமம் கொண்டு இந்த கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக, தன் வாழ்க்கையையே நமக்கு ஒரு பாடமாக வடித்துக் கொடுத்த கருணாமூர்த்தி நம்முடைய ஸ்ரீ மஹா பெரியவா.
ஒரு நூறு ஆண்டுகள் நம்மிடையே மானுட வடிவில், சாக்ஷாத் அந்த பரமேஸ்வரனே வாழ்ந்தது இந்த பூவுலகின் பெரும் பாக்கியம். இவ்வாறு நாம் பெற்ற பெரும் பேற்றினை எண்ணி மகிழும் விதமாக நாம் ஒவ்வொரு வருடமும் வைகாசி அனுஷம் அன்று ஸ்ரீ மஹா பெரியவாளின் ஜயந்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நிகழும் விகாரி வருடம், ஸ்ரீ மஹா பெரியவாளின் 126-வது அவதார தினத்தை மே மாதம் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை, கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
இந்த திருநாளை கொண்டாடும் விதமாக உங்கள் காஞ்சி பெரியவா ஃபோரம், குஹானந்தா சாரிட்டபிள் டிரஸ்ட், ஸ்ரீ சங்கர குருகுலம், திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அடையாறு தர்ம பரிபாலன சபா உடன் இணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அடுத்த பக்கங்களில் முழுமையாக தரப்பட்டுள்ளன.
இத்தகைய அருமையான சந்தர்ப்பத்தை பக்தகோடிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மஹா பெரியவாளின் ஜயந்தி வைபவத்தில் கலந்துகொண்டு, ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாகும்படி பேரன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: நம் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடக்க உள்ளதால் பக்தர்கள் ஒவ்வொரு நாளின் இட விவரங்களை தெளிவாக குறித்துக்கொண்டு வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நமஸ்காரங்களுடன்,
காஞ்சி பெரியவா ஃபோரம்
Download the full invitation with program details by clicking here