Post by radha on Jan 21, 2019 6:22:44 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தைப்பூசமான இன்று இந்த வழிபாட்டை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* குன்றுதோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் பயம், துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகப்பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள் உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
காவடி சுமந்த முதல் பக்தர்
பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் கைலாயத்திலுள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைத் தன் வழிபாட்டுக்காக கொண்டு வர விரும்பினார். தன் சீடரான இடும்பாசுரனிடம் இப்பணியை ஒப்படைத்தார். இடும்பனும், தன் மனைவி இடும்பியுடன் புறப்பட்டான். இரு சிகரங்களையும் காவடியாகக் கட்டி தோளில் சுமந்து வந்தான். அதை தன் இருப்பிடமாக்கிக் கொள்ள விரும்பிய முருகன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் பழநியை வந்தடைந்ததும், அந்த மலைகளை கீழே வைத்து விட்டு இளைப்பாறத் தொடங்கினான். அப்போது முருகன் சிறுவன் வடிவில் சிவகிரியான பழநி மலைக்குன்றின் மீதேறி தனக்கே உரியது என்று கூறினார். வெகுண்டு எழுந்த இடும்பாசுரன் சிறுவனைத் தாக்க முயன்று இறந்தான். இடும்பி குருநாதரான அகத்தியரின் உதவியை நாடினாள்.
சிவகிரியில் வீற்றிருக்கும் சிறுவன் முருகப்பெருமான் என்பதை உணர்ந்த அகத்தியர், தன் சீடருக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டினார். முருகனும் இடும்பனுக்கு உயிர் கொடுத்ததோடு பழநிமலையின் காவலனாகவும் நியமித்தார். இதன் பின்னரே, இடும்பன் போல முருகன் அடியார்களும் காவடி சுமக்கும் வழிபாடு இங்கு ஏற்பட்டது.
அழகெல்லாம் முருகனே!
அழகை விரும்பாதவர்கள் யாருமில்லை. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழாக சேர்க்கிறது. அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலங்கும் வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கின்றன. இப்படி இயற்கை அழகு எல்லாம் ஒன்று திரண்ட பேரழகன் மன்மதன். இவனுக்கு 'மாரன்' என்ற பெயருண்டு.
இந்த மன்மதனை போல ஆயிரம் மடங்கு அழகு மிக்கவன் முருகன். முருகனின் அழகின் முன் மன்மதனின் அழகு ஏளனப் பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயர் உண்டானது. 'கு' என்பது 'அதிகப்படியான' என்ற பொருளில் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாரன் (மன்மதன்) கருணை நிறம் கொண்டவன். அதனால் மன்மதனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதனின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
தைப்பூசமான இன்று இந்த வழிபாட்டை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* குன்றுதோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் பயம், துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகப்பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள் உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
காவடி சுமந்த முதல் பக்தர்
பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் கைலாயத்திலுள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைத் தன் வழிபாட்டுக்காக கொண்டு வர விரும்பினார். தன் சீடரான இடும்பாசுரனிடம் இப்பணியை ஒப்படைத்தார். இடும்பனும், தன் மனைவி இடும்பியுடன் புறப்பட்டான். இரு சிகரங்களையும் காவடியாகக் கட்டி தோளில் சுமந்து வந்தான். அதை தன் இருப்பிடமாக்கிக் கொள்ள விரும்பிய முருகன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் பழநியை வந்தடைந்ததும், அந்த மலைகளை கீழே வைத்து விட்டு இளைப்பாறத் தொடங்கினான். அப்போது முருகன் சிறுவன் வடிவில் சிவகிரியான பழநி மலைக்குன்றின் மீதேறி தனக்கே உரியது என்று கூறினார். வெகுண்டு எழுந்த இடும்பாசுரன் சிறுவனைத் தாக்க முயன்று இறந்தான். இடும்பி குருநாதரான அகத்தியரின் உதவியை நாடினாள்.
சிவகிரியில் வீற்றிருக்கும் சிறுவன் முருகப்பெருமான் என்பதை உணர்ந்த அகத்தியர், தன் சீடருக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டினார். முருகனும் இடும்பனுக்கு உயிர் கொடுத்ததோடு பழநிமலையின் காவலனாகவும் நியமித்தார். இதன் பின்னரே, இடும்பன் போல முருகன் அடியார்களும் காவடி சுமக்கும் வழிபாடு இங்கு ஏற்பட்டது.
அழகெல்லாம் முருகனே!
அழகை விரும்பாதவர்கள் யாருமில்லை. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழாக சேர்க்கிறது. அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலங்கும் வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கின்றன. இப்படி இயற்கை அழகு எல்லாம் ஒன்று திரண்ட பேரழகன் மன்மதன். இவனுக்கு 'மாரன்' என்ற பெயருண்டு.
இந்த மன்மதனை போல ஆயிரம் மடங்கு அழகு மிக்கவன் முருகன். முருகனின் அழகின் முன் மன்மதனின் அழகு ஏளனப் பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயர் உண்டானது. 'கு' என்பது 'அதிகப்படியான' என்ற பொருளில் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாரன் (மன்மதன்) கருணை நிறம் கொண்டவன். அதனால் மன்மதனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதனின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM