Post by radha on Dec 18, 2018 1:25:00 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
மார்கழித்திங்கள் அல்லவா! இது கண்ணன் வரும் பொழுதல்லவா!
டிசம்பர் 14,2018,11:00 IST
மாதங்களில் மார்கழியாக இருப்பதாக பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளாரே! ஏன் அதற்கு மட்டும் என்ன சிறப்பு?' என மகாசுவாமிகளிடம் கேட்டார் பக்தர் ஒருவர்.
''விஷ்ணு பக்தர்கள் கொண்டாடும் வைகுண்ட ஏகாதசியும், சிவபக்தர்கள் கொண்டாடும் ஆருத்ரா தரிசனமும் வருவது மார்கழி மாதத்தில் தான். சிவனும், விஷ்ணுவும் ஒரே கடவுளின் இரண்டு வடிவங்களே. இதனடிப்படையில் 'அரியும் சிவனும் ஒண்ணு' என்ற பழமொழி கூட வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் பகவத்கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார் கிருஷ்ணர்.
உஷத்காலம் என்பது விடியல் பொழுதைக் குறிக்கும். 'வைகறை' என்றும் சொல்வர். 'நாளும் வைகறையில் துயில் எழு' என்பார்கள் பெரியவர்கள். ஒரு நாளும் தவறாமல் வைகறையில் துயிலெழுவது பறவைகள் மட்டுமே. அதிகாலை நான்கு மணிக்கு 'ஆனைச்சாத்தன்' என்னும் பறவையின் ஒலியைக் கேட்க முடியும். திருப்பாவையில், 'கீச்சுக் கீச்சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?''என்று தோழிகளை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள்.
ஆனைச்சாத்தன் முதலில் கத்த, அதை தொடர்ந்து ஒவ்வொரு பறவையாக கத்தும். அதிகாலை ஐந்தரை மணிக்கு சேவல் கூவும். பறவைகளிடம் ஒழுங்குமுறை இருப்பதால் அதிகாலையில் கத்தும் வழக்கத்தை அவை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதர்கள் வாழ்க்கைமுறை கண்டபடி மாறிக் கொண்டே இருப்பதால் அதிகாலையில் எழ முடிவதில்லை.
வைகறையில் செய்யும் நற்செயல்கள் பலமடங்கு நன்மையளிக்கும். வைகறையில் படித்தால் பாடங்கள் நன்றாக மனதில் பதியும். இதனடிப்படையில் தான் சாஸ்திரத்தில் அதிகாலை பிரார்த்தனையை விசேஷமாகச் சொல்லியிருக்கிறது.
திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதற்கும் முன்பே, மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழுந்து கடவுளைப் பூஜிப்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது. அதைப் பின்பற்றி ஆண்டாள் திருப்பாவையையும், மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும் நமக்கு அருளியிருக்கின்றனர்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வழிபட்டால் இறையருள் கிடைப்பதோடு மனமும் துாய்மை பெறும்.
தொடர்புக்கு: thiruppurkrishnan
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
மார்கழித்திங்கள் அல்லவா! இது கண்ணன் வரும் பொழுதல்லவா!
டிசம்பர் 14,2018,11:00 IST
மாதங்களில் மார்கழியாக இருப்பதாக பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளாரே! ஏன் அதற்கு மட்டும் என்ன சிறப்பு?' என மகாசுவாமிகளிடம் கேட்டார் பக்தர் ஒருவர்.
''விஷ்ணு பக்தர்கள் கொண்டாடும் வைகுண்ட ஏகாதசியும், சிவபக்தர்கள் கொண்டாடும் ஆருத்ரா தரிசனமும் வருவது மார்கழி மாதத்தில் தான். சிவனும், விஷ்ணுவும் ஒரே கடவுளின் இரண்டு வடிவங்களே. இதனடிப்படையில் 'அரியும் சிவனும் ஒண்ணு' என்ற பழமொழி கூட வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் பகவத்கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார் கிருஷ்ணர்.
உஷத்காலம் என்பது விடியல் பொழுதைக் குறிக்கும். 'வைகறை' என்றும் சொல்வர். 'நாளும் வைகறையில் துயில் எழு' என்பார்கள் பெரியவர்கள். ஒரு நாளும் தவறாமல் வைகறையில் துயிலெழுவது பறவைகள் மட்டுமே. அதிகாலை நான்கு மணிக்கு 'ஆனைச்சாத்தன்' என்னும் பறவையின் ஒலியைக் கேட்க முடியும். திருப்பாவையில், 'கீச்சுக் கீச்சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?''என்று தோழிகளை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள்.
ஆனைச்சாத்தன் முதலில் கத்த, அதை தொடர்ந்து ஒவ்வொரு பறவையாக கத்தும். அதிகாலை ஐந்தரை மணிக்கு சேவல் கூவும். பறவைகளிடம் ஒழுங்குமுறை இருப்பதால் அதிகாலையில் கத்தும் வழக்கத்தை அவை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதர்கள் வாழ்க்கைமுறை கண்டபடி மாறிக் கொண்டே இருப்பதால் அதிகாலையில் எழ முடிவதில்லை.
வைகறையில் செய்யும் நற்செயல்கள் பலமடங்கு நன்மையளிக்கும். வைகறையில் படித்தால் பாடங்கள் நன்றாக மனதில் பதியும். இதனடிப்படையில் தான் சாஸ்திரத்தில் அதிகாலை பிரார்த்தனையை விசேஷமாகச் சொல்லியிருக்கிறது.
திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதற்கும் முன்பே, மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழுந்து கடவுளைப் பூஜிப்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது. அதைப் பின்பற்றி ஆண்டாள் திருப்பாவையையும், மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும் நமக்கு அருளியிருக்கின்றனர்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வழிபட்டால் இறையருள் கிடைப்பதோடு மனமும் துாய்மை பெறும்.
தொடர்புக்கு: thiruppurkrishnan
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM