Post by varagooran on Nov 30, 2018 6:37:48 GMT 5.5
" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?"
(மடத்து மளிகைக் கடை பாக்கியை அசலும் வட்டியுமாக செட்டியார் பேரனிடம் பைசல்பண்ணிய மகா பெரியவா)
நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம்
கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணா
நன்றி-சக்தி விகடன்-
முன்பொரு முறை. மாலை வேளை. காஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை.நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ‘இன்னும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ள, தலையைச் சற்றுச் சாய்த்து நோட்டம் விட்ட ஸ்வாமிகளின் பார்வையில் இருபது வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞன் தென்பட்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவா, தனக்குப் பணிவிடை செய்யும் ராமு என்ற இளைஞனை அருகே அழைத்தார். அருகில் வந்து வாய் பொத்தி நின்றான்!
‘‘ராமு… ‘க்யூ’விலே பதினஞ்சாவது ஆசாமியா, குள்ளமா, கொஞ்சம் கறுப்பா நின்னுண்டிருக்கானே ஒரு பையன்… அவன் ‘சைஸு’க்கு சரியா இருக் காப்லே ஒரு சட்டை- பேண்ட் துணி நீ வாங்கிண்டு வரணும். ஆபீசிலே பணத்தை வாங்கிக்கோ. மடத்துக்குப் பக்கத்துலே இருக்கிற முதலியார் ஜவுளிக் கடைல நல்ல துணியா வாங்கி எடுத்துண்டு வா!’’ என்று கட்டளையிட்டார் பெரியவா.
ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை, குழம்பினான். ‘ஏன்? எதற்கு?’ என்று பெரியவாளைக் கேட்க முடியுமா! மௌனமாகப் புறப்பட முற்பட்டான்.
‘‘ராமு இங்கே வா! இப்போ நூதனமா துணிக்குப் பேரெல்லாம் சொல்றாளே ,நோக்குத் தெரியுமோ?’’ என்று பெரியவா கேட்டார்.
‘‘தெரியும் பெரியவா…’’
‘‘எங்கே… அந்தப் பேரைச் சொல்லு, பார்ப்போம்!’’
‘‘டெரிகாட்டன்னு பேரு பெரியவா…’’
‘‘ம்… அதான்… அந்தத் துணியிலேயே ‘ஒஸ்தி’யா பார்த்து வாங்கிக்கோ. புரியறதா?’’ என்று சொன்னார் பெரியவா.
பதினைந்து நிமிடங்களில் ஆசார்யாள் சொன்ன படி ஷர்ட்- பேண்ட் துணிகளோடு அவர் முன் வந்து நின்றான் ராமு. துணிகளைத் தூர இருந்தே பார்த்த ஸ்வாமிகளுக்கு சந்தோஷம்!
‘‘பேஷ்… பேஷ்… ரொம்ப நன்னாருக்குடா’’ என்று ராமுவைப் பாராட்டிய மகா ஸ்வாமிகள், ‘‘நீ ஒரு கார்யம் பண்ணு. ஒரு மூங்கில் தட்டு நெறய பழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வெச்சுண்டு, இந்தத் துணிமணிகளையும் அது மேல வை. நா சொன்னேன்னு மடத்து மானேஜர்கிட்டே சொல்லி ஆறாயிரத்து எறநூத்தம்பது ரூவாய ஒரு கவர்ல போட்டு எடுத்துண்டு வரச் சொல்லு. அந்த ரூவா கவரையும், தட்டுல துணிமணிக்கு மேல வெச்சுடு. என்ன பண்ணணும்கிறத அப்புறம் சொல்றேன்!’’ என்று சொல்லிவிட்டுத் தனக்கு முன்னால் இருந்த பக்தரோடு பேச ஆரம்பித்து விட்டார்.
பெரியவா உத்தரவுப்படியே ஆறாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் ரொக்கம் ஒரு கவரில் போடப்பட்டு வந்து சேர்ந்தது. ஜாடையிலேயே, அதை தட்டின் மேல் வைத்துவிட்டுப் போகுமாறு உத்தரவிட்டார் பெரியவா.
இப்போது, அந்த இருபது வயது இளைஞன், ஸ்வாமிகளுக்கு முன் நின்றிருந்தான். ஆசார்யாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார். அப்படியே கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்.
ஸ்வாமிகள், ராமுவைத் திரும்பிப் பார்த்தார். அருகில் ஓடி வந்தான் ராமு.
‘‘ராமு, அந்த மூங்கில் தட்டை கைலே எடுத்துக்கோ!’’ எடுத்துக் கொண்டான் ராமு.
உடனே ஸ்வாமிகள், ‘‘அந்தப் பையனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நா பூர்ண ஆசீர்வாதம் பண்றதா சொல்லி, அந்தத் தட்டை அவன் கைலே குடு!’’ என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.
தட்டை இளைஞனிடம் ஒப் படைத்தான் ராமு.இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தான். அக்கம் பக்கம் பார்த்தான். செய்வது அறியாது நின்றான்.
அவனுடைய தவிப்பைப் புரிந்து கொண்ட ஆசார்யாள், ‘‘ராமு, அவனை ஒண்ணும் குழம்ப வேண்டாம்னு சொல்லு. அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மடத்தோட அனுக்கிரகம் இதுனு சொல்லு. கவர்லே ரூவா இருக்கு. பத்ரமா வீட்ல ஒப்படைக்கணும்னு சொல்லு’’ என்றார்.
ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினான் இளைஞன். குழப்பம் தீராமல் தட்டை வாங்கிக் கொண்டு ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு நகர்ந்தான்.
பதினைந்து நிமிடம் கழிந்தது. எல்லோரும் தரிசித்துச் சென்று விட்டனர். தனது அறைக்குள் வந்து அமர்ந்தார் ஆசார்யாள். ராமுவை அருகில் கூப்பிட்டார்.
‘‘ஏண்டா ராமு, அந்தப் பையனுக்கு அப்டி உபசாரம் பண்ணி, அதையெல்லாம் வெச்சு கொடுக்கச் சொன்னேனே… ஏன், எதுக்குனு நீ கேட்கவே இல்லியே!’’ என்றார்.
ராமு தயங்கியபடியே, ‘‘பெரிய வாளைப் போய் நா எப்டி கேள்வி கேக்கறது? ஒங்க கட்டளையை நிறைவேத்தத்தானே நா இருக்கேன்’’ என்று பதில் சொன்னான்.
‘‘சரி… நீ கேக்க வேண்டாம்! நானே சொல்றேன்’’ என்று கூறிவிட்டுப் பேச ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.
‘‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ நம்ம மடத்துக்குக் கொஞ்சம் சிரமமான காலம். அப்போ ஒரு ஆறு மாச காலம், பரிவாரங்களோட வடதேச யாத்திரை போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணி பொறப்பட் டேன். நல்ல வேளை பார்த்து யாத்திரை கிளம்பினோம். மடத்து வாசலுக்கு வந்தேன். மடத்துக்கு எதுத்தாப்லே ஒரு சின்ன மளிகைக் கடை உண்டு. அது ஒரு செட்டியாருக்குச் சொந்தம். மடத்துக்கும் அங்கதான் மளிகைச் சாமான்கள் பற்று வரவுக் கணக்கு.
மடத்து வாசல்ல என்னைப் பார்த்ததும் மளிகைக் கடை செட்டியார் வேகமா ஓடி வந்தார். தன் மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.
நா யாத்திரை போறது தெரிஞ்சு நமஸ்காரம் பண்ணிட்டுப் போக வந்திருப்பார்னு நெனச்சேன்.
‘என்ன செட்டியார்வாள்… சௌக்யமா? மளிகை வியாபாரம் எல்லாம் எப்டி போறது?’னு விசாரிச் சேன்.
அதுக்கு அவர், வாயைப் பொத்திண்டு பவ்யமா, ‘சுமாரா போறது ஸ்வாமி. கஷ்டமாத்தான் இருக்கு. பெரியவா வடதேச யாத்திரை போவதாகவும், திரும்பி வர்றதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க’ என்று மென்னு விழுங்கினார்.
‘ஆமாம் செட்டியார்வாள். அஞ்சாறு மாசம் ஆகலாம்’ என்றேன். ஒடன ரொம்ப யோஜனை பண்ணி, தயங்கித் தயங்கி, ‘அதுக்கில்லே சாமி. மடத்துக்கும் நம்ம மளிகைக் கடைலேதான் பற்று வரவுக் கணக்கு. சாமிக்கே தெரியும். நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு. எனக்கும் கஷ்டம். நாலு மாச கடை வாடகை பாக்கி. கஷ்டமா இருக்கிறதாலேதான் ஒங்க கிட்டே குறையைச் சொல்லிக்கி றேன்… நீங்க யாத்திரையை நல்லபடியா முடிச்சுக்கிட்டு வாங்க’னு சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணினார்.
‘செட்டியார்வாள்! யாத்திரை போயிட்டு வந்த ஒடனேயே ஒங்க மளிகைக் கடை பாக்கியை பைசல் பண்ணச் சொல்றேன்’னு கிளம்பினேன்.
ஆறு மாச வடதேச யாத்திரை முடிஞ்சு திரும்பினேன். மடத்துக்கு எதிர்ச்சாரியிலே பாத்தேன். செட்டியார் மளிகைக் கடை பூட்டியிருந்தது. அப்புறமா விஜாரிச்சுப் பார்த்ததுலே மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த செட்டியார் வெளி யூருக்குப் போயிருந்தபோது திடீர்னு காலகதி’ அடைஞ்சுட்டதா சொன்னா. அவரோட மனுஷாள் எல்லாம் எங்கே இருக்கான்னும் தெரியலே! அப்பறமா, செட்டியார் மளிகைக்கு மடத்து பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வெச்சுண்டேன். எண்ணூத்தி எழுபத்தஞ்சே முக்கால் ரூவா. அந்த பாக்கியை இன்னிக்குத்தான் வட்டியும் அசலுமா அவரோட பேரன்ட்டே தீர்த்து வெச்சேன்! என்ன புரியறதா. பையங்கிட்டே எல்லாத்தையும் வெச்சு ஒன்னை கொடுக்கச் சொன்னேனே, அவன் வேற யாருமில்லே. மளிகைக் கடை செட்டியாரோட பிள்ளை வயித்துப் பேரன். தாத்தாவுக்குச் சேர வேண்டியதை அசலும் வட்டியுமா பேரங்கிட்ட சேர்ப்பிச்சாச்சு. இனிமே கவலை இல்லே!’’ -மகா ஸ்வாமிகள் சொல்லி முடித்தார்.
ராமுவுக்குக் கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதற்குள், வேறு ஒரு பையன் ஆசார் யாளின் உதவிக்காக அங்கு வரவே, பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தான் ராமு. வந்தவன், மடத்து வாசலை நோக்கி விரைந்தான்.
அங்கே, அந்த இருபது வயது இளைஞன் ஆசார்யாளால் அனுக்கிரகிக்கப்பட்ட வஸ்துக்கள் நிரம்பிய மூங்கில் தட்டுடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் ராமுவுக்குப் பரம சந்தோஷம். அவனை நெருங்கினான். விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.
அதற்கு அந்த இளைஞன், ‘‘ஆமாம்ங்க! ரொம்ப வருசத்துக்கு முந்தி எங்க தாத்தா இங்கே மடத்துக்கு எதுத்தாப்லே மளிகைக் கடை வெச்சிருந்ததா எங்க பாட்டி, அப்பாவெல்லாம் சொல்லுவாங்க. என் தாத்தா திடீரென்று காலமானதும் நிறைய கடன் ஏற்பட்டுட்டதாலே கடையை மூடிட்டு கிருஷ்ண கிரிக்கு வந்துட்டாங்களாம்.
இப்போ அங்கேதான் எங்கப்பா மளிகைக் கடை வெச்சு நடத்திக்கிட்டு இருக்காரு. நான் எங்க ஊர் தெரிஞ்சவங்களோடு ‘டூர்’ வந்தேன். வந்த எடத்துலே பெரியவங்க இதெல்லாம் எனக்கு ஏன் பண்ணாங்கன்னு தெரியலே. ஒரே ஆச்சரியமா இருக்கு!’’ என்று தெரிவித்தான்.
ராமுவுக்கு இதைக் கேட்டவுடன் கையும் காலும் ஓடவில்லை! பெரியவாளின் – அந்த நடமாடும் தெய்வத்தின்- தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்த படியே மடத்துக்குள் சென்றான். அப்போது இரவு மணி ஏழு. தனி அறையில் ஏகாந்தமாக வீற்றிருந்தார் ஆசார்யாள்.
ராமுவைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார் ஸ்வாமிகள். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை அழைத்த ஆசார்யாள், ‘‘நா சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லியானு நோக்கு சந்தேகம் வந்துடுத்து. மடத்து வாசலுக்குப் போய், அந்த செட்டியார் பேரனையே நேரடியா பார்த்து, ஊர்ஜிதப்படுத்திண்டு வந்துட்டியோல்லியோ!’’ என்று சொல்லி இடிஇடியென்று சிரித்தார்.
உடனே ராமு, ‘‘பெரியவா… என்னை மன்னிக்கணும். ஒரு ஆர்வத்துல அப்படிப் பண்ணிட்டேன். வேற ஒண்ணுமில்லே. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ’’ என்று கதறி அழுதான்!
அந்த தெய்வம் சிரித்துக் கொண்டே கை தூக்கி ராமுவை ஆசீர்வதித்தது
(மடத்து மளிகைக் கடை பாக்கியை அசலும் வட்டியுமாக செட்டியார் பேரனிடம் பைசல்பண்ணிய மகா பெரியவா)
நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம்
கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணா
நன்றி-சக்தி விகடன்-
முன்பொரு முறை. மாலை வேளை. காஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை.நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ‘இன்னும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ள, தலையைச் சற்றுச் சாய்த்து நோட்டம் விட்ட ஸ்வாமிகளின் பார்வையில் இருபது வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞன் தென்பட்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவா, தனக்குப் பணிவிடை செய்யும் ராமு என்ற இளைஞனை அருகே அழைத்தார். அருகில் வந்து வாய் பொத்தி நின்றான்!
‘‘ராமு… ‘க்யூ’விலே பதினஞ்சாவது ஆசாமியா, குள்ளமா, கொஞ்சம் கறுப்பா நின்னுண்டிருக்கானே ஒரு பையன்… அவன் ‘சைஸு’க்கு சரியா இருக் காப்லே ஒரு சட்டை- பேண்ட் துணி நீ வாங்கிண்டு வரணும். ஆபீசிலே பணத்தை வாங்கிக்கோ. மடத்துக்குப் பக்கத்துலே இருக்கிற முதலியார் ஜவுளிக் கடைல நல்ல துணியா வாங்கி எடுத்துண்டு வா!’’ என்று கட்டளையிட்டார் பெரியவா.
ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை, குழம்பினான். ‘ஏன்? எதற்கு?’ என்று பெரியவாளைக் கேட்க முடியுமா! மௌனமாகப் புறப்பட முற்பட்டான்.
‘‘ராமு இங்கே வா! இப்போ நூதனமா துணிக்குப் பேரெல்லாம் சொல்றாளே ,நோக்குத் தெரியுமோ?’’ என்று பெரியவா கேட்டார்.
‘‘தெரியும் பெரியவா…’’
‘‘எங்கே… அந்தப் பேரைச் சொல்லு, பார்ப்போம்!’’
‘‘டெரிகாட்டன்னு பேரு பெரியவா…’’
‘‘ம்… அதான்… அந்தத் துணியிலேயே ‘ஒஸ்தி’யா பார்த்து வாங்கிக்கோ. புரியறதா?’’ என்று சொன்னார் பெரியவா.
பதினைந்து நிமிடங்களில் ஆசார்யாள் சொன்ன படி ஷர்ட்- பேண்ட் துணிகளோடு அவர் முன் வந்து நின்றான் ராமு. துணிகளைத் தூர இருந்தே பார்த்த ஸ்வாமிகளுக்கு சந்தோஷம்!
‘‘பேஷ்… பேஷ்… ரொம்ப நன்னாருக்குடா’’ என்று ராமுவைப் பாராட்டிய மகா ஸ்வாமிகள், ‘‘நீ ஒரு கார்யம் பண்ணு. ஒரு மூங்கில் தட்டு நெறய பழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வெச்சுண்டு, இந்தத் துணிமணிகளையும் அது மேல வை. நா சொன்னேன்னு மடத்து மானேஜர்கிட்டே சொல்லி ஆறாயிரத்து எறநூத்தம்பது ரூவாய ஒரு கவர்ல போட்டு எடுத்துண்டு வரச் சொல்லு. அந்த ரூவா கவரையும், தட்டுல துணிமணிக்கு மேல வெச்சுடு. என்ன பண்ணணும்கிறத அப்புறம் சொல்றேன்!’’ என்று சொல்லிவிட்டுத் தனக்கு முன்னால் இருந்த பக்தரோடு பேச ஆரம்பித்து விட்டார்.
பெரியவா உத்தரவுப்படியே ஆறாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் ரொக்கம் ஒரு கவரில் போடப்பட்டு வந்து சேர்ந்தது. ஜாடையிலேயே, அதை தட்டின் மேல் வைத்துவிட்டுப் போகுமாறு உத்தரவிட்டார் பெரியவா.
இப்போது, அந்த இருபது வயது இளைஞன், ஸ்வாமிகளுக்கு முன் நின்றிருந்தான். ஆசார்யாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார். அப்படியே கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்.
ஸ்வாமிகள், ராமுவைத் திரும்பிப் பார்த்தார். அருகில் ஓடி வந்தான் ராமு.
‘‘ராமு, அந்த மூங்கில் தட்டை கைலே எடுத்துக்கோ!’’ எடுத்துக் கொண்டான் ராமு.
உடனே ஸ்வாமிகள், ‘‘அந்தப் பையனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நா பூர்ண ஆசீர்வாதம் பண்றதா சொல்லி, அந்தத் தட்டை அவன் கைலே குடு!’’ என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.
தட்டை இளைஞனிடம் ஒப் படைத்தான் ராமு.இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தான். அக்கம் பக்கம் பார்த்தான். செய்வது அறியாது நின்றான்.
அவனுடைய தவிப்பைப் புரிந்து கொண்ட ஆசார்யாள், ‘‘ராமு, அவனை ஒண்ணும் குழம்ப வேண்டாம்னு சொல்லு. அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மடத்தோட அனுக்கிரகம் இதுனு சொல்லு. கவர்லே ரூவா இருக்கு. பத்ரமா வீட்ல ஒப்படைக்கணும்னு சொல்லு’’ என்றார்.
ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினான் இளைஞன். குழப்பம் தீராமல் தட்டை வாங்கிக் கொண்டு ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு நகர்ந்தான்.
பதினைந்து நிமிடம் கழிந்தது. எல்லோரும் தரிசித்துச் சென்று விட்டனர். தனது அறைக்குள் வந்து அமர்ந்தார் ஆசார்யாள். ராமுவை அருகில் கூப்பிட்டார்.
‘‘ஏண்டா ராமு, அந்தப் பையனுக்கு அப்டி உபசாரம் பண்ணி, அதையெல்லாம் வெச்சு கொடுக்கச் சொன்னேனே… ஏன், எதுக்குனு நீ கேட்கவே இல்லியே!’’ என்றார்.
ராமு தயங்கியபடியே, ‘‘பெரிய வாளைப் போய் நா எப்டி கேள்வி கேக்கறது? ஒங்க கட்டளையை நிறைவேத்தத்தானே நா இருக்கேன்’’ என்று பதில் சொன்னான்.
‘‘சரி… நீ கேக்க வேண்டாம்! நானே சொல்றேன்’’ என்று கூறிவிட்டுப் பேச ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.
‘‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ நம்ம மடத்துக்குக் கொஞ்சம் சிரமமான காலம். அப்போ ஒரு ஆறு மாச காலம், பரிவாரங்களோட வடதேச யாத்திரை போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணி பொறப்பட் டேன். நல்ல வேளை பார்த்து யாத்திரை கிளம்பினோம். மடத்து வாசலுக்கு வந்தேன். மடத்துக்கு எதுத்தாப்லே ஒரு சின்ன மளிகைக் கடை உண்டு. அது ஒரு செட்டியாருக்குச் சொந்தம். மடத்துக்கும் அங்கதான் மளிகைச் சாமான்கள் பற்று வரவுக் கணக்கு.
மடத்து வாசல்ல என்னைப் பார்த்ததும் மளிகைக் கடை செட்டியார் வேகமா ஓடி வந்தார். தன் மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.
நா யாத்திரை போறது தெரிஞ்சு நமஸ்காரம் பண்ணிட்டுப் போக வந்திருப்பார்னு நெனச்சேன்.
‘என்ன செட்டியார்வாள்… சௌக்யமா? மளிகை வியாபாரம் எல்லாம் எப்டி போறது?’னு விசாரிச் சேன்.
அதுக்கு அவர், வாயைப் பொத்திண்டு பவ்யமா, ‘சுமாரா போறது ஸ்வாமி. கஷ்டமாத்தான் இருக்கு. பெரியவா வடதேச யாத்திரை போவதாகவும், திரும்பி வர்றதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க’ என்று மென்னு விழுங்கினார்.
‘ஆமாம் செட்டியார்வாள். அஞ்சாறு மாசம் ஆகலாம்’ என்றேன். ஒடன ரொம்ப யோஜனை பண்ணி, தயங்கித் தயங்கி, ‘அதுக்கில்லே சாமி. மடத்துக்கும் நம்ம மளிகைக் கடைலேதான் பற்று வரவுக் கணக்கு. சாமிக்கே தெரியும். நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு. எனக்கும் கஷ்டம். நாலு மாச கடை வாடகை பாக்கி. கஷ்டமா இருக்கிறதாலேதான் ஒங்க கிட்டே குறையைச் சொல்லிக்கி றேன்… நீங்க யாத்திரையை நல்லபடியா முடிச்சுக்கிட்டு வாங்க’னு சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணினார்.
‘செட்டியார்வாள்! யாத்திரை போயிட்டு வந்த ஒடனேயே ஒங்க மளிகைக் கடை பாக்கியை பைசல் பண்ணச் சொல்றேன்’னு கிளம்பினேன்.
ஆறு மாச வடதேச யாத்திரை முடிஞ்சு திரும்பினேன். மடத்துக்கு எதிர்ச்சாரியிலே பாத்தேன். செட்டியார் மளிகைக் கடை பூட்டியிருந்தது. அப்புறமா விஜாரிச்சுப் பார்த்ததுலே மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த செட்டியார் வெளி யூருக்குப் போயிருந்தபோது திடீர்னு காலகதி’ அடைஞ்சுட்டதா சொன்னா. அவரோட மனுஷாள் எல்லாம் எங்கே இருக்கான்னும் தெரியலே! அப்பறமா, செட்டியார் மளிகைக்கு மடத்து பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வெச்சுண்டேன். எண்ணூத்தி எழுபத்தஞ்சே முக்கால் ரூவா. அந்த பாக்கியை இன்னிக்குத்தான் வட்டியும் அசலுமா அவரோட பேரன்ட்டே தீர்த்து வெச்சேன்! என்ன புரியறதா. பையங்கிட்டே எல்லாத்தையும் வெச்சு ஒன்னை கொடுக்கச் சொன்னேனே, அவன் வேற யாருமில்லே. மளிகைக் கடை செட்டியாரோட பிள்ளை வயித்துப் பேரன். தாத்தாவுக்குச் சேர வேண்டியதை அசலும் வட்டியுமா பேரங்கிட்ட சேர்ப்பிச்சாச்சு. இனிமே கவலை இல்லே!’’ -மகா ஸ்வாமிகள் சொல்லி முடித்தார்.
ராமுவுக்குக் கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதற்குள், வேறு ஒரு பையன் ஆசார் யாளின் உதவிக்காக அங்கு வரவே, பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தான் ராமு. வந்தவன், மடத்து வாசலை நோக்கி விரைந்தான்.
அங்கே, அந்த இருபது வயது இளைஞன் ஆசார்யாளால் அனுக்கிரகிக்கப்பட்ட வஸ்துக்கள் நிரம்பிய மூங்கில் தட்டுடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் ராமுவுக்குப் பரம சந்தோஷம். அவனை நெருங்கினான். விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.
அதற்கு அந்த இளைஞன், ‘‘ஆமாம்ங்க! ரொம்ப வருசத்துக்கு முந்தி எங்க தாத்தா இங்கே மடத்துக்கு எதுத்தாப்லே மளிகைக் கடை வெச்சிருந்ததா எங்க பாட்டி, அப்பாவெல்லாம் சொல்லுவாங்க. என் தாத்தா திடீரென்று காலமானதும் நிறைய கடன் ஏற்பட்டுட்டதாலே கடையை மூடிட்டு கிருஷ்ண கிரிக்கு வந்துட்டாங்களாம்.
இப்போ அங்கேதான் எங்கப்பா மளிகைக் கடை வெச்சு நடத்திக்கிட்டு இருக்காரு. நான் எங்க ஊர் தெரிஞ்சவங்களோடு ‘டூர்’ வந்தேன். வந்த எடத்துலே பெரியவங்க இதெல்லாம் எனக்கு ஏன் பண்ணாங்கன்னு தெரியலே. ஒரே ஆச்சரியமா இருக்கு!’’ என்று தெரிவித்தான்.
ராமுவுக்கு இதைக் கேட்டவுடன் கையும் காலும் ஓடவில்லை! பெரியவாளின் – அந்த நடமாடும் தெய்வத்தின்- தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்த படியே மடத்துக்குள் சென்றான். அப்போது இரவு மணி ஏழு. தனி அறையில் ஏகாந்தமாக வீற்றிருந்தார் ஆசார்யாள்.
ராமுவைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார் ஸ்வாமிகள். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை அழைத்த ஆசார்யாள், ‘‘நா சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லியானு நோக்கு சந்தேகம் வந்துடுத்து. மடத்து வாசலுக்குப் போய், அந்த செட்டியார் பேரனையே நேரடியா பார்த்து, ஊர்ஜிதப்படுத்திண்டு வந்துட்டியோல்லியோ!’’ என்று சொல்லி இடிஇடியென்று சிரித்தார்.
உடனே ராமு, ‘‘பெரியவா… என்னை மன்னிக்கணும். ஒரு ஆர்வத்துல அப்படிப் பண்ணிட்டேன். வேற ஒண்ணுமில்லே. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ’’ என்று கதறி அழுதான்!
அந்த தெய்வம் சிரித்துக் கொண்டே கை தூக்கி ராமுவை ஆசீர்வதித்தது