Post by radha on Nov 12, 2018 15:05:46 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRIMKANCHI MAHA PERIVA
Halasya Sundaram Iyer in face book
நாணல்காட்டில் இன்று அம்பாளை தரிசனம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அம்பாளின் அழகை எப்படி வர்ணிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கபாலத்தில் எனக்கு ஒன்றும் இல்லாத காரணத்தால் தெய்வத்தின் குரலில் தேடினேன். அந்த அழகை வர்ணிக்க இதற்கு மேல் வார்த்தைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஸாக்ஷாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது? பச்சையாயிருப்பாளா, சிகப்பாயிருப்பாளா, கறுப்பாயிருப்பாளா? இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. பிரம்மாவுக்கு நாலு தலை, சிவனுக்கு ஐந்து தலை, ஸுப்ரஹ்மண்யருக்கு ஆறு தலை என்கிற மாதிரி அவளுக்கு எத்தனை தலை என்று வைத்துக்கொள்வது? விச்வரூபத்தில், விராட் ரூபத்தில் ஆயிரம் தலை – ”ஸஹஸ்ர சீர்ஷம்” – என்று வேதம் சொல்கிறதென்றால் அந்த மாதிரிக் கணக்குப் போட்டுக் கண்ணுக்குள் கொள்கிற விதத்தில் நினைக்கவே முடியவில்லையே! இரண்டு கை மீநாக்ஷியிலிருந்து பதினெட்டுக்கை மஹிஷாஸுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம், அந்தந்த ரிஷிகள் கண்ட விதத்தில், சொல்லியிருப்பதால் எத்தனை கை என்று கல்பித்துப் பார்ப்பது? சடைவிரி கோலமாக இருக்கிறாள் – அழகாகக் கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிறாள்; ஸர்வாபரண பூஷிதையாக இருக்கிறாள் – துணியே கட்டிக்கொள்ளாமல் ரத்தத்தைப் பூசிக்கொண்டு கபாலமாலையோடு திரிகிறாள் என்றெல்லாம் வித்யாஸமாகச் சொன்னால் எப்படி அவள் ரூபத்தை பாவிப்பது?
இப்படிக் கேட்டால்-
“எந்த ரூபமானாலும் அன்புதான் அப்பா, முக்கியம். அதனால் பரம அன்புருவாகக் கல்பித்துப் பார்”.
”பரம அன்பு என்றால் எப்படியிருக்கும், தெரியல்லியே!”
“எங்கேயாவது ஒரு நல்ல ஆத்மா ஒரு பிரதிப் பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் மனஸார அன்னதானம் பண்ணினால் அங்கே போய் நின்று அவன் முகத்தைப் பார். தானம் வாங்கிக் கொள்கிறவர்களைவிட, போடுகிற அவனுக்கு எத்தனை ஆனந்தம் உண்டாகிறது, பார்! அதைப் பார்த்தால் உன் மனஸ்கூடக் கொஞ்சம் உருகுகிறதல்லவா? இப்படி ஒரு வேளை, இரண்டு வேளை நூறுபேருக்கு, ஆயிரம் பேருக்குப் போடுகிறவன் முகத்தில் இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதென்றால் லோகத்திலுள்ள கோடாநுகோடி ஜீவன்களுக்கும் – மஹாபாவங்களைச் செய்கிற – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினாலாவது நினைக்கிற – நம் அத்தனை பேருக்கும் கல்பகோடி காலமாக வேளாவேளை சோறு போடுகிறவளின் அன்பும் ஆனந்தமும் எப்படியிருக்கும் என்று multiply பண்ணி (பெருக்கி)ப் பார்த்துக்கொள்! அதுதான் அப்பா, அம்பாள் ரூபம்!
காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு. ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக] உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா! அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Halasya Sundaram Iyer in face book
நாணல்காட்டில் இன்று அம்பாளை தரிசனம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அம்பாளின் அழகை எப்படி வர்ணிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கபாலத்தில் எனக்கு ஒன்றும் இல்லாத காரணத்தால் தெய்வத்தின் குரலில் தேடினேன். அந்த அழகை வர்ணிக்க இதற்கு மேல் வார்த்தைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஸாக்ஷாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது? பச்சையாயிருப்பாளா, சிகப்பாயிருப்பாளா, கறுப்பாயிருப்பாளா? இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. பிரம்மாவுக்கு நாலு தலை, சிவனுக்கு ஐந்து தலை, ஸுப்ரஹ்மண்யருக்கு ஆறு தலை என்கிற மாதிரி அவளுக்கு எத்தனை தலை என்று வைத்துக்கொள்வது? விச்வரூபத்தில், விராட் ரூபத்தில் ஆயிரம் தலை – ”ஸஹஸ்ர சீர்ஷம்” – என்று வேதம் சொல்கிறதென்றால் அந்த மாதிரிக் கணக்குப் போட்டுக் கண்ணுக்குள் கொள்கிற விதத்தில் நினைக்கவே முடியவில்லையே! இரண்டு கை மீநாக்ஷியிலிருந்து பதினெட்டுக்கை மஹிஷாஸுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம், அந்தந்த ரிஷிகள் கண்ட விதத்தில், சொல்லியிருப்பதால் எத்தனை கை என்று கல்பித்துப் பார்ப்பது? சடைவிரி கோலமாக இருக்கிறாள் – அழகாகக் கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிறாள்; ஸர்வாபரண பூஷிதையாக இருக்கிறாள் – துணியே கட்டிக்கொள்ளாமல் ரத்தத்தைப் பூசிக்கொண்டு கபாலமாலையோடு திரிகிறாள் என்றெல்லாம் வித்யாஸமாகச் சொன்னால் எப்படி அவள் ரூபத்தை பாவிப்பது?
இப்படிக் கேட்டால்-
“எந்த ரூபமானாலும் அன்புதான் அப்பா, முக்கியம். அதனால் பரம அன்புருவாகக் கல்பித்துப் பார்”.
”பரம அன்பு என்றால் எப்படியிருக்கும், தெரியல்லியே!”
“எங்கேயாவது ஒரு நல்ல ஆத்மா ஒரு பிரதிப் பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் மனஸார அன்னதானம் பண்ணினால் அங்கே போய் நின்று அவன் முகத்தைப் பார். தானம் வாங்கிக் கொள்கிறவர்களைவிட, போடுகிற அவனுக்கு எத்தனை ஆனந்தம் உண்டாகிறது, பார்! அதைப் பார்த்தால் உன் மனஸ்கூடக் கொஞ்சம் உருகுகிறதல்லவா? இப்படி ஒரு வேளை, இரண்டு வேளை நூறுபேருக்கு, ஆயிரம் பேருக்குப் போடுகிறவன் முகத்தில் இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதென்றால் லோகத்திலுள்ள கோடாநுகோடி ஜீவன்களுக்கும் – மஹாபாவங்களைச் செய்கிற – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினாலாவது நினைக்கிற – நம் அத்தனை பேருக்கும் கல்பகோடி காலமாக வேளாவேளை சோறு போடுகிறவளின் அன்பும் ஆனந்தமும் எப்படியிருக்கும் என்று multiply பண்ணி (பெருக்கி)ப் பார்த்துக்கொள்! அதுதான் அப்பா, அம்பாள் ரூபம்!
காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு. ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக] உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா! அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM