Post by radha on Oct 26, 2018 0:49:51 GMT 5.5
OM SRINGURUP NAMAHA RESPECTFULRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தெய்வத்தின் குரல்: திருமாலின் இதயத்தில் சிவன் ஆடுகிறான்
Published : 25 Oct 2018
பதினேழாம் நூற்றாண்டுக் கடைசியில் தஞ்சாவூர் ராஜா ஷாஹஜி, வித்வான் களுக்கென்றே தன்னுடைய ராஜ்யத்தில் ஒரு ஊர் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, திருவிசநல்லூரில் அநேக பண்டிதர்களையும் கவிகளையும் குடியேற்றி யதேஷ்டமாக மானியங்கள் கொடுத்தான். அப்படி மொத்தம் 46 பேருக்கு அந்தக் கிராமம் ஸர்வ மான்யமாகத் தரப்பட்டு வித்யா ராஜதானியாக இருந்தது.
அவர்களில் ராமபத்ர தீக்ஷிதர் என்பவர் ஒருவர், கவி. பெரியவர். நல்ல ரசிகர். சாதாரணமாக இலக்கணப் புலமையும் இலக்கியத் திறமையும் ஒன்றோடொன்று சேராது என்பார்கள். ஆனால், இவரோ இரண்டிலும் சேர்ந்தவராயிருந்தார். வ்யாகரணத்தில் (இலக்கணத்தில்) பெற்றிருந்த தேர்ச்சியால் ‘பிரத்யக்ர பதஞ்ஜலி’ என்று பெயர் பெற்றிருந்தார்.
பதஞ்சலிதான் வ்யாகரண மஹாபாஷ்யம் எழுதியவர். அவர் கதையும் கௌடபாதர் கதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. ‘பதஞ்ஜலி சரிதம்’ என்பது ராமபத்ர தீக்ஷிதர் எழுதியதுதான். ‘பதஞ்ஜலி சரிதம்’ எழுதியவருக்கே ‘நிகழ்காலப் பதஞ்ஜலி’ என்று பொருள்படும் ‘ப்ரத்யாக்ர பதஞ்ஜலி’ என்று பட்டம் இருந்தது.
கவி என்ற முறையில் சிருங்கார நாடகாதிகள் அவர் எழுதியிருந்தாலும் உயர்ந்த பக்தியுள்ளம் படைத்தவராயிருந்தார். குறிப்பாக, ராமச்சந்திர மூர்த்தியிடம் அவருக்குப் பரம பக்தி. ‘ஜானகி பரிணயம்’ என்று அவர் எழுதியிருக்கும் நாடகம் பிரசித்தி வாய்ந்தது. ’ராம ஸ்தவ கர்ண ரஸாயணம்’, ’ராம சித்ரா ஸ்தவம்’. என்றெல்லாமும் அநேக ஸ்தோத்ரங்கள் எந்த ராமாயணத்திலும் இல்லாத நூதன கற்பனைகளோடு எழுதியிருக்கிறார்.
தக்ஷிணத்தில் விசேஷமாக நாடக க்ரந்தம் எழுதுபவர்கள் கிடையாது என்று வடக்கத்தி வித்வான்கள் சொல்லிவந்த அபக்யாதியைத் துடைக்கவே ‘ஜானகி பரிணயம்’ எழுதி நம்முடைய தென்தேசத்தின் பெருமையை நிலை நாட்டினாரென்று சொல்லப்படுகிறது. நமக்கு விஷயம் அவருடைய ‘பதஞ்ஜலி சரிதம்’. எட்டு ஸர்கங்கள் கொண்ட புத்தகம் அது.
புலிக் கால்காரர் பாம்புக் கால்காரர்
ராமர் என்று சொன்னவுடன் அவருடன் இணைபிரியா பக்த சிரோண்மணியான ஆஞ்சநேய ஸ்வாமியை நினைப்பதுபோல நடராஜா என்றவுடன் இரண்டு பேர் நினைவு வரும். நடராஜாவின் பிம்பமானாலும், சித்ரமானாலும் எதிலும் அவருக்கு இரண்டு பக்கங்களில் இந்த இரண்டு பேரும் இருப்பார்கள். கேட்பதற்குப் பயமாக ‘பாம்பும் புலியும் இருபக்கமும்’ என்று இவர்களைத்தான் பாட்டுக்களில் சொல்லியிருக்கிறது!
படங்களில் பார்த்தாலும் ஒருத்தருக்கு இடுப்புக்குக் கீழே பாதி உடம்பு பாம்பாக இருக்கும். இன்னொருத்தருக்குப் புலியாக இருக்கும். ஆனால், அந்த இருவரும் யாருக்கும் எந்த இம்சையும் பண்ணாமல் ஸ்வாமியின் நர்த்தனத்திலேயே ஸதாகாலமும் நேத்ரத்தையும் ஹ்ருதயத்தையும் அர்ப்பணம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புலிக் கால்காரர் ‘வ்யாக்ரபாதர்’ என்பவர். அந்தப் பேருக்கே அப்படித்தான் அர்த்தம். பாம்புக் கால்காரர்தான் நம்முடைய உபகதையின் நாயகரான பதஞ்ஜலி.
சிதம்பர மகிமையையும், ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மகிமையையும் விளக்குவதாக அந்தத் திருவிசநல்லூர் பண்டிதக் கவிகளில் இன்னொருத்தரான வேங்கடக்ருஷ்ண தீக்ஷிதர் என்பவர் ‘நடேச விஜயம்’ என்று காவ்யம் எழுதியிருக்கிறார். அதிலும் பதஞ்சலியை பற்றி ஓரளவு வருகிறது. பதஞ்ஜலியையே மையமான பாத்திரமாக வைத்து ராமபத்ர தீக்ஷிதர் எழுதியுள்ள ‘பதஞ்ஜலி சரித’மும் ‘நடேச விஜய’மும் அநேக விவரங்களில் ஒத்துப்போகின்றன.
பதஞ்ஜலி ஆதிசேஷனின் அவதாரமென்று அந்தப் புத்தகங்களில் இருக்கிறது. ஆதிசேஷன் மஹாவிஷ்ணுவைச் சேர்ந்தவர். திருப்பாற்கடலில் பகவானுக்குப் படுக்கையாக இருப்பவர். அந்தப் பரம வைஷ்ணவர் எப்படிப் பரம சைவராகி நடராஜாவின் இணைபிரியாத பக்தரானார்? திருப்பாற்கடலிலிருந்தவர், ஏன் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தார்?
அதற்குக் காரணம் நடேச விஜயத்தில் சுருக்கமாகவும் பதஞ்ஜலி சரிதத்தில் விரிவாகவும் வருகிறது. மஹாவிஷ்ணுவேதான் ஆதிசேஷன் அப்படி அனுப்பி வைத்தது என்று வருகிறது.
அப்படியானால் மஹாவிஷ்ணுவுக்கும் நடராஜாவுக்கும் என்ன சம்பந்தம்?
சம்பந்தமிருப்பது நிச்சயம் என்று சிதம்பரம் கோயிலைப் பார்த்தாலே தெரிகிறது. அங்கு நடராஜாவின் தரிசன மண்டபத்துக்குப் பக்கவாட்டிலேயே பெரிசாகப் பெருமாள் சன்னிதி இருக்கிறது. கோவிந்தராஜா என்ற பேரில் அவர் ஆதிசேஷ பர்யங்கத்தில் படுத்துக்கொண்டிருக்கிறார். ஒரே இடத்தில் நின்றபடி சிவ-விஷ்ணுக்கள் இருவரையும் தரிசித்துக்கொண்டு இரட்டிப்பு சந்தோஷத்துடன் அப்பைய தீக்ஷிதர் ‘மாரமணம், உமாரமணம்’ என்று ஸ்தோத்ரித்திருக்கிறார். ‘மாரமண’ என்றால் லக்ஷ்மிபதி. ‘உமாரமண’ என்றால் உமாபதி என்று புரியும்.
விஷ்ணுவின் இருதயத்தில் சிவநடனம் ஆக இரண்டு பேருக்கும் சம்பந்த மிருப்பது தெரிகிறது. என்ன சம்பந்தம்?
எப்படியென்றால், நடராஜர் மஹாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்தி லேயே நாட்டியம் செய்கிறார்!
திருவாரூரை எடுத்துக்கொண்டால் அந்தக் கோயில் விஷ்ணுவின் ஸ்வரூபமாகவே கட்டப்பட்டிருப்பது. அந்த ஸ்வரூபத்திலே ஹ்ருதய ஸ்தானம் எங்கே இருக்குமோ அங்கேதான் தியாகராஜ மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
நடராஜர் போலவே தியாகராஜாவும் நடனமூர்த்திதான். ஆனால், அது நமக்குத் தெரியாமல் அவருடைய பிம்பத்தில் முகம் தவிர பாக்கி எல்லா பாகமும் மூடி வைத்திருக்கிறது.
ஆனால், நடராஜாவின் நடனத்திற்கும் தியாகராஜாவின் நடனத்திற்கும் வித்தியாசமுண்டு. நடராஜா அவராகவே இடது காலைத் தூக்கி ஆனந்த நடனம் செய்கிறார். தியாகராஜா தாமாக நடனம் ஆட வில்லை. விஷ்ணுமூர்த்தியின் ஹ்ருதயத்தில் இருப்பவரல்லவா அவர்? அதனால் மஹாவிஷ்ணு சுவாசிக்கும்போது அவருடைய வாசஸ்தலம் ஏறியிறங்குவதற்கேற்ப த்யாகராஜா அசைவதில் தானாக ஒரு நடனம் அமைந்துவிடுகிறது.
மகாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்தில் சிவன் நடனமாடுகிறார் என்பதைக் குறிப்பதாக ச்ருதியிலேயே ‘நாராயாணோபநிஷத்’தில் மந்திரங்கள் இருக்கின்றன. முதலில் நாராயணனே விராட் ஸ்வரூபம், விச்வத்திலுள்ள அத்தனை சிரஸுகளும், அத்தனை கண்களும் அவருடையதுதான் என்று ஆரம்பித்து அத்ந விராட்டின் ஜீவரூபத்தில் தலைகீழான பத்மகோசம் (தாமரை மொக்கு) மாதிரி ஹ்ருதயம் இருப்பதைச் சொல்லி, அதன் மேல் பாகத்தில் உள்ள தஹராகாசம் என்பதில் பரமாத்ம ஸ்வரூபம் விளங்குவதாக வர்ணித்திருக்கிறது-வெளியிலே நாம் பார்க்கும் விசாலமான ஆகாசம் ‘பேரம்பலம்’ என்பது.
அதுவே உள்ளே சின்ன ஆகாசமாக இருப்பதைத்தான் ‘தஹராகாசம்’ என்றும் ‘சிற்றம்பலம்’ என்றும் சொல்வது. ‘ஞான ஆகாச’மான ‘சித் அம்பரம்’, ஆகாச க்ஷேத்ரம் சிற்றம்பலம் என்கிற சித்ஸபை, தாண்ட மூர்த்தியான நடராஜ சிவன் என்றிப்படி எல்லாம் சிதம்பரத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தருடைய ஆத்மா தத்துவங்களாக இருக்கின்றன.
( தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
தெய்வத்தின் குரல்: திருமாலின் இதயத்தில் சிவன் ஆடுகிறான்
Published : 25 Oct 2018
பதினேழாம் நூற்றாண்டுக் கடைசியில் தஞ்சாவூர் ராஜா ஷாஹஜி, வித்வான் களுக்கென்றே தன்னுடைய ராஜ்யத்தில் ஒரு ஊர் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, திருவிசநல்லூரில் அநேக பண்டிதர்களையும் கவிகளையும் குடியேற்றி யதேஷ்டமாக மானியங்கள் கொடுத்தான். அப்படி மொத்தம் 46 பேருக்கு அந்தக் கிராமம் ஸர்வ மான்யமாகத் தரப்பட்டு வித்யா ராஜதானியாக இருந்தது.
அவர்களில் ராமபத்ர தீக்ஷிதர் என்பவர் ஒருவர், கவி. பெரியவர். நல்ல ரசிகர். சாதாரணமாக இலக்கணப் புலமையும் இலக்கியத் திறமையும் ஒன்றோடொன்று சேராது என்பார்கள். ஆனால், இவரோ இரண்டிலும் சேர்ந்தவராயிருந்தார். வ்யாகரணத்தில் (இலக்கணத்தில்) பெற்றிருந்த தேர்ச்சியால் ‘பிரத்யக்ர பதஞ்ஜலி’ என்று பெயர் பெற்றிருந்தார்.
பதஞ்சலிதான் வ்யாகரண மஹாபாஷ்யம் எழுதியவர். அவர் கதையும் கௌடபாதர் கதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. ‘பதஞ்ஜலி சரிதம்’ என்பது ராமபத்ர தீக்ஷிதர் எழுதியதுதான். ‘பதஞ்ஜலி சரிதம்’ எழுதியவருக்கே ‘நிகழ்காலப் பதஞ்ஜலி’ என்று பொருள்படும் ‘ப்ரத்யாக்ர பதஞ்ஜலி’ என்று பட்டம் இருந்தது.
கவி என்ற முறையில் சிருங்கார நாடகாதிகள் அவர் எழுதியிருந்தாலும் உயர்ந்த பக்தியுள்ளம் படைத்தவராயிருந்தார். குறிப்பாக, ராமச்சந்திர மூர்த்தியிடம் அவருக்குப் பரம பக்தி. ‘ஜானகி பரிணயம்’ என்று அவர் எழுதியிருக்கும் நாடகம் பிரசித்தி வாய்ந்தது. ’ராம ஸ்தவ கர்ண ரஸாயணம்’, ’ராம சித்ரா ஸ்தவம்’. என்றெல்லாமும் அநேக ஸ்தோத்ரங்கள் எந்த ராமாயணத்திலும் இல்லாத நூதன கற்பனைகளோடு எழுதியிருக்கிறார்.
தக்ஷிணத்தில் விசேஷமாக நாடக க்ரந்தம் எழுதுபவர்கள் கிடையாது என்று வடக்கத்தி வித்வான்கள் சொல்லிவந்த அபக்யாதியைத் துடைக்கவே ‘ஜானகி பரிணயம்’ எழுதி நம்முடைய தென்தேசத்தின் பெருமையை நிலை நாட்டினாரென்று சொல்லப்படுகிறது. நமக்கு விஷயம் அவருடைய ‘பதஞ்ஜலி சரிதம்’. எட்டு ஸர்கங்கள் கொண்ட புத்தகம் அது.
புலிக் கால்காரர் பாம்புக் கால்காரர்
ராமர் என்று சொன்னவுடன் அவருடன் இணைபிரியா பக்த சிரோண்மணியான ஆஞ்சநேய ஸ்வாமியை நினைப்பதுபோல நடராஜா என்றவுடன் இரண்டு பேர் நினைவு வரும். நடராஜாவின் பிம்பமானாலும், சித்ரமானாலும் எதிலும் அவருக்கு இரண்டு பக்கங்களில் இந்த இரண்டு பேரும் இருப்பார்கள். கேட்பதற்குப் பயமாக ‘பாம்பும் புலியும் இருபக்கமும்’ என்று இவர்களைத்தான் பாட்டுக்களில் சொல்லியிருக்கிறது!
படங்களில் பார்த்தாலும் ஒருத்தருக்கு இடுப்புக்குக் கீழே பாதி உடம்பு பாம்பாக இருக்கும். இன்னொருத்தருக்குப் புலியாக இருக்கும். ஆனால், அந்த இருவரும் யாருக்கும் எந்த இம்சையும் பண்ணாமல் ஸ்வாமியின் நர்த்தனத்திலேயே ஸதாகாலமும் நேத்ரத்தையும் ஹ்ருதயத்தையும் அர்ப்பணம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புலிக் கால்காரர் ‘வ்யாக்ரபாதர்’ என்பவர். அந்தப் பேருக்கே அப்படித்தான் அர்த்தம். பாம்புக் கால்காரர்தான் நம்முடைய உபகதையின் நாயகரான பதஞ்ஜலி.
சிதம்பர மகிமையையும், ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மகிமையையும் விளக்குவதாக அந்தத் திருவிசநல்லூர் பண்டிதக் கவிகளில் இன்னொருத்தரான வேங்கடக்ருஷ்ண தீக்ஷிதர் என்பவர் ‘நடேச விஜயம்’ என்று காவ்யம் எழுதியிருக்கிறார். அதிலும் பதஞ்சலியை பற்றி ஓரளவு வருகிறது. பதஞ்ஜலியையே மையமான பாத்திரமாக வைத்து ராமபத்ர தீக்ஷிதர் எழுதியுள்ள ‘பதஞ்ஜலி சரித’மும் ‘நடேச விஜய’மும் அநேக விவரங்களில் ஒத்துப்போகின்றன.
பதஞ்ஜலி ஆதிசேஷனின் அவதாரமென்று அந்தப் புத்தகங்களில் இருக்கிறது. ஆதிசேஷன் மஹாவிஷ்ணுவைச் சேர்ந்தவர். திருப்பாற்கடலில் பகவானுக்குப் படுக்கையாக இருப்பவர். அந்தப் பரம வைஷ்ணவர் எப்படிப் பரம சைவராகி நடராஜாவின் இணைபிரியாத பக்தரானார்? திருப்பாற்கடலிலிருந்தவர், ஏன் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தார்?
அதற்குக் காரணம் நடேச விஜயத்தில் சுருக்கமாகவும் பதஞ்ஜலி சரிதத்தில் விரிவாகவும் வருகிறது. மஹாவிஷ்ணுவேதான் ஆதிசேஷன் அப்படி அனுப்பி வைத்தது என்று வருகிறது.
அப்படியானால் மஹாவிஷ்ணுவுக்கும் நடராஜாவுக்கும் என்ன சம்பந்தம்?
சம்பந்தமிருப்பது நிச்சயம் என்று சிதம்பரம் கோயிலைப் பார்த்தாலே தெரிகிறது. அங்கு நடராஜாவின் தரிசன மண்டபத்துக்குப் பக்கவாட்டிலேயே பெரிசாகப் பெருமாள் சன்னிதி இருக்கிறது. கோவிந்தராஜா என்ற பேரில் அவர் ஆதிசேஷ பர்யங்கத்தில் படுத்துக்கொண்டிருக்கிறார். ஒரே இடத்தில் நின்றபடி சிவ-விஷ்ணுக்கள் இருவரையும் தரிசித்துக்கொண்டு இரட்டிப்பு சந்தோஷத்துடன் அப்பைய தீக்ஷிதர் ‘மாரமணம், உமாரமணம்’ என்று ஸ்தோத்ரித்திருக்கிறார். ‘மாரமண’ என்றால் லக்ஷ்மிபதி. ‘உமாரமண’ என்றால் உமாபதி என்று புரியும்.
விஷ்ணுவின் இருதயத்தில் சிவநடனம் ஆக இரண்டு பேருக்கும் சம்பந்த மிருப்பது தெரிகிறது. என்ன சம்பந்தம்?
எப்படியென்றால், நடராஜர் மஹாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்தி லேயே நாட்டியம் செய்கிறார்!
திருவாரூரை எடுத்துக்கொண்டால் அந்தக் கோயில் விஷ்ணுவின் ஸ்வரூபமாகவே கட்டப்பட்டிருப்பது. அந்த ஸ்வரூபத்திலே ஹ்ருதய ஸ்தானம் எங்கே இருக்குமோ அங்கேதான் தியாகராஜ மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
நடராஜர் போலவே தியாகராஜாவும் நடனமூர்த்திதான். ஆனால், அது நமக்குத் தெரியாமல் அவருடைய பிம்பத்தில் முகம் தவிர பாக்கி எல்லா பாகமும் மூடி வைத்திருக்கிறது.
ஆனால், நடராஜாவின் நடனத்திற்கும் தியாகராஜாவின் நடனத்திற்கும் வித்தியாசமுண்டு. நடராஜா அவராகவே இடது காலைத் தூக்கி ஆனந்த நடனம் செய்கிறார். தியாகராஜா தாமாக நடனம் ஆட வில்லை. விஷ்ணுமூர்த்தியின் ஹ்ருதயத்தில் இருப்பவரல்லவா அவர்? அதனால் மஹாவிஷ்ணு சுவாசிக்கும்போது அவருடைய வாசஸ்தலம் ஏறியிறங்குவதற்கேற்ப த்யாகராஜா அசைவதில் தானாக ஒரு நடனம் அமைந்துவிடுகிறது.
மகாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்தில் சிவன் நடனமாடுகிறார் என்பதைக் குறிப்பதாக ச்ருதியிலேயே ‘நாராயாணோபநிஷத்’தில் மந்திரங்கள் இருக்கின்றன. முதலில் நாராயணனே விராட் ஸ்வரூபம், விச்வத்திலுள்ள அத்தனை சிரஸுகளும், அத்தனை கண்களும் அவருடையதுதான் என்று ஆரம்பித்து அத்ந விராட்டின் ஜீவரூபத்தில் தலைகீழான பத்மகோசம் (தாமரை மொக்கு) மாதிரி ஹ்ருதயம் இருப்பதைச் சொல்லி, அதன் மேல் பாகத்தில் உள்ள தஹராகாசம் என்பதில் பரமாத்ம ஸ்வரூபம் விளங்குவதாக வர்ணித்திருக்கிறது-வெளியிலே நாம் பார்க்கும் விசாலமான ஆகாசம் ‘பேரம்பலம்’ என்பது.
அதுவே உள்ளே சின்ன ஆகாசமாக இருப்பதைத்தான் ‘தஹராகாசம்’ என்றும் ‘சிற்றம்பலம்’ என்றும் சொல்வது. ‘ஞான ஆகாச’மான ‘சித் அம்பரம்’, ஆகாச க்ஷேத்ரம் சிற்றம்பலம் என்கிற சித்ஸபை, தாண்ட மூர்த்தியான நடராஜ சிவன் என்றிப்படி எல்லாம் சிதம்பரத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தருடைய ஆத்மா தத்துவங்களாக இருக்கின்றன.
( தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM