Post by radha on Aug 4, 2018 2:41:09 GMT 5.5
OM GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
வேதாந்த தேசிகரின் ஹயக்ரீவ ஸ்தோத்திரம்
தேசிகர் பல ஸ்தோத்ரங்களை செய்து இருந்தாலும் இதுவே அவர் முதன்முதலில் செய்ததாகும். திருவஹீந்த்ரபுரத்தில் தேசிகர் கருடனிடம் இருந்து ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் பெற்றார். பிறகு அவர் அங்குள்ள சிறிய குன்றின்மேல் அமர்ந்து இதை ஜபம் செய்தபோது ஹயக்ரீவர் பிரத்யக்ஷமாக அப்போது தேசிகர் இந்த ஸ்தோத்திரத்தால் அவரைத் துதித்தார்.
இப்போது இந்த ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.
1. ஞானாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஞானமாகிய ஆனந்தத்தின் உருவானவரும், நிர்மலமான ஸ்படிகம் போல் உருவம் தரித்தவரும், சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குவோமாக.
ஹயக்ரீவர் அகண்டசச்சிதானந்த பிரம்ம ஸ்வரூபம்., நிர்மலமான ஸ்படிகம் நிறமற்றது. ஸ்படிகம் என்பது தூய்மையைக் குறிக்கிறது. சுத்தப்ரம்மஸ்வரூபம். ஞானானந்தமயம் என்றால் ஞானமே உருவானவர் அதனால் ஏற்படும் இன்பத்தை ஸ்படிகம் என பிரதிபலிப்பவர்.
ஹயக்ரீவர் என்றால் குதிரை முகம் கொண்டவர் என்று பொருள். ஹயக்ரீவ வடிவத்தில் பிரம்மாவின் முன் தோன்றி வேதங்களை மறந்து துக்கித்த அவருக்கு உப்தேசம் செய்தவர்.
பிராணிகளுள் குதிரை அறிவு மிக்கது. யுத்த காலங்களில் அதன் எஜமானன் சொர்வுர்றதை கண்டால் தானாகவே யுத்தபூமியில் இருந்து அவனை வெளிக் கொணர்ந்து விடுமாம்.
இந்த குருபூர்ணிமா அன்று குரு உருவான ஹயக்ரீவரின் ஸ்தோத்திரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஸ்லோகம் பதிவிடுகிறேன், மற்றவை என் பதிவில் தொடர்ந்து வரும்.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
ஸ்லோகம் 2
2.ஸ்வதஸ்ஸித்தம் சுத்தஸ்படிக மணிபூப்ரருத்பிரதிபடம்
ஸுதாசத்க்ரீசீபி: த்யுதிபி: அவதாதத்ரிபுவனம்
அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்
ஹதாசேஷாவத்யம் ஹயவதனம் ஈடீமஹீ மஹ:
ஹயக்ரீவர் ஸ்வத:ஸித்த:, அதாவது தானாகவே தோன்றியவர். எல்லா அவதாரங்களும் அப்படியே.
பிறவி எடுத்ததாக நாம் கருதும் அவதாரங்களும் அவன் மாயையால் அப்படித் தோன்றுகின்றன. பகவானுக்கு கர்பவாசம் என்பது இல்லை.
புருஷ ஸுக்தம் கூறுகிறது, ‘அஜாயமானோ பஹுதா விஜாயதே,’ பிறவியே இல்லாதவன் பலவாகத் தோன்றுகிறான். கீதையில் கண்ணன் கூறுகிறான், ‘ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா,’ (ப.கீ. 4-3). பிரகிருதியை கைக்கொண்டு என்னுடைய மாயையால் என்னை நானே தோற்றுவிக்கிறேன்.
ஹயக்ரீவர் சுத்தஸ்படிகபூப்ருத் பிரதிபட என்று வர்ணிக்கப்படுகிறார் . பூப்ருத் என்றால் மலை. பிரதிபட என்றால் போட்டியிடுபவரைக் குறிக்கும். சுத்தஸ்படிகத்தினால் ஆன மலைக்கு போட்டியாக இருப்பவர்.
ஸுதா என்றால் அமுதம். ஸுதாஸத்ரீசீ என்றால் அமுதத்துடன் கூடிய, த்யுதிபி: , ஒளியால், அவதாத திருபுவனம் , மூன்று உலகமும் வெண்மையாக அதாவது தூய்மையாக பிரகாசிக்கிறது. அவர் அருள் அமுதம் போல் நிறைந்து உலகைத்தூய்மை ஆக்குகிறது.
அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்- குதிரை முகம் கொண்ட அவருடைய ஹலஹல என்ற ஹேஷா, கனைப்பு சப்தம், த்ரய்யந்தை: , உபநிஷத்துக்களால் ( த்ரயி என்றால் வேதம் அவற்றின் அந்தம் வேதாந்தம் அதாவது உபநிஷத்) அனுவிஹித , பின்பற்றப்படுகிறது.
ஹயக்ரீவரின் மூச்சுக்காற்றில் இருந்து பிறந்தவை வேதங்களாகும். அதனால் அவரிடம் இருந்து வரும் சப்தமே வேத கோஷம்.
ஹத அசேஷ அவத்யம் , அவர் பக்தர்களின் குறைபாடுகளை நீக்கிவிடுகிறார் .அப்பேர்ப்பட்ட மஹ:, ஒளிஸ்வரூபமான, ஹயவதனம் – ஹயக்ரீவரை , ஈடீமஹி – வணங்குவோமாக.
தேசிகரின் பதப்ரயோகங்கள் ஆச்சரியமானவை. அவருடைய ஸ்லோகங்களை கற்றாலே சம்ஸ்க்ருத ஞானம் வெகுவாக வளரும்.
ஹயக்ரீவஸ்தோத்ரம் ஸ்லோகம் 3/4
3.ஸமாஹாரஸ்ஸாம்னாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
லய: பிரத்யூஹானாம் லஹரிவிததி: போதஜலதே:
கதாதர்பக்ஷுப்யத் கதககுல கோலாஹலபவம்
ஹரது அந்தர்த்வாந்தம் ஹயவதனஹேஷாஹலரவ:
ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் , ஹேஷாஹலரவ:, சாமவேதத்தின் சேகரிப்பு.(ஸமாஹார ரிக்வேதத்தின் மறுபதம்.(பிரதிபதம்) யஜுர்வேதத்தின் இருப்பிடம்/ ஒளி. (தாம என்னும் சொல் இருப்பிடம் , ஒளி இரண்டையும் குறிக்கும். )
சாமகானம் வாகீசராகிய ஹயக்ரீவரிடம் இருந்து வருகிறது. ரிக் வேதம் மந்த்ரங்களைக் கொண்டது. அதன் மறு பொருளாக ஹயக்ரீவர் இருக்கிறார். யஜூர்வேதம் வேத கர்மாக்களை குறிப்பதால் அவைகளின் பயன் அவரை அடைவதே என்பதால் அவைகளின் இருப்பிடமும் ,ஒளியைதருபவரும் அவரே.
கற்பதில் உள்ள எல்லா இடையூறுகளையும் (ப்ரத்யூஹானாம்) அழிக்கும் (லயவல்லமை வாய்ந்தது. அறிவு எனும் கடலின்( போத ஜலதே அலைகளின் வரிசை.( லஹரிவிததி
ஊஹ என்றால் அறிவது பிரத்யூஹ என்றால் அதற்கு இடையூறு. ஹய்க்ரீவருடைய கனைப்பு சப்தப்ரம்மமே ஆதலால் கற்பதில் உள்ள இடையூறுகள் அகல்கின்றன.அது மட்டும் அல்ல. மேலும் அறிவு அலைகளை உற்பத்தி செய்யும் சமுத்திரமாகவும் இருக்கிறார்.
அவருடைய கனைப்பொலி வாதம் புரிவதால்செருக்குற்ற ( கதாதர்ப) வாதிகளின் ஆரவாரத்தால் ஏற்பட்ட (கதககுல கோலாஹலபவம் ) கலக்கத்தினால் உண்டான மன இருளை (க்ஷுப்யத் அந்தர்த்வாந்தம்) ஹரது- போக்கடிக்கட்டும்.
ஹயக்ரீவரின் அருளைப் பெற்றவர்கள் எதிர்வாதம் செய்து மக்கள மனதை மயக்குவோருக்கு சவாலாக இருக்கிறார்கள். இதற்கு கவிதார்கிக கேசரி என்று பட்டம் பெற்ற தேசிகரே ஸாக்ஷி.
அப்படிப்பட்டவர்களின் வாதத்தினால் ஏற்பட்ட ஆரவாரத்தை ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் விழுங்கி விடுகிறது.
4.ப்ராசீ ஸந்த்யா காசித் அந்தர்நிசாயா:
பிரக்ஞா த்ருஷ்டே: அஞ்சனஸ்ரீ: அபூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜிவக்த்ரா
வாகீசாக்யா வாசுதேவஸ்ய மூர்த்தி:
, குதிரை முகம் கொண்டதும், ( வாஜிவக்த்ரா- வாஜி என்றால் குதிரை ) மனஇருள் என்ற இரவின் (அந்தர்நிசாயா விடியற்காலமாகவும் , (ப்ராசீ சந்த்யா) ஞானக்கண்ணின் (பிரக்ஞா த்ருஷ்டே: ), அதிசயமான (அபூர்வா) கண் மையாகவும் (அஞ்சன ஸ்ரீ: ) வேதங்களை உபதேசிக்கின்ற : (வக்த்ரீ வேதான்) வாசுதேவரின் கல்விக்கடவுள் (வாகீசர் )என்ற ரூபம், (மூர்த்தி பாது (bAATHU) மே, என் முன்னர் பிரகாசிக்கட்டும்.
மனஇருள் அஞ்ஞாநத்தினால் வருவது. மனதில் ஹயக்ரீவரின் உருவம் த்ன்றினால் அந்த இருள் உதயசூரியன் வந்தாற்போல் மறைகிறது. மந்திர மை போட்ட கண்களுக்கு எல்லாம் தெரிவதைப்போல் ஹயகிரீவரின் உருவம் ஞானக்கண்ணின் மையாக விளங்குகிறது.
வக்த்ரீ வேதான் என்பது பகவான் வாசுதேவர் ஹயவதனராகத் தோன்றி பிரம்மாவுக்கு வேதத்தை உபதேசம் செய்ததை குறிக்கிறது.
ஹயக்ரீவஸதோத்ரம் - 5, 6
.5.விசுத்த விஞ்ஞானகனஸ்வரூபம்
விஞ்ஞான விச்ராணனபத்த தீக்ஷம்
தயாநிதிம் தேஹப்ருதாம் சரண்யம்
தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே
தூய்மையான(விசுத்த) ஞானத்தின் மொத்தவடிவமான (விஞ்ஞான கனஸ்வரூபம்), ஞானத்தை அருள்வதில் வ்ரதம் பூண்டவரும் (விஞ்ஞான விச்ராணன பத்த தீக்ஷம்) , கருணைக்கு உறைவிடமும், எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாகவும் உள்ள ஹயக்ரீவரை வணங்குகிறேன்
அடுத்துவரும் ஸ்லோகங்கள் ஹயக்ரீவர் தரிசனம் தந்தபோது அவரைப்பார்த்து இயற்றியவை என்று சொல்லப்படுகிறது. அவை ஹயக்ரீவருடன் நேரில் பேசுவது போன்று இருப்பவை.
6. அபௌருஷேயைரபி வாக்ப்ரபஞ்சை:
அத்யாபி தே பூதிம் அத்ருஷ்டபாராம்
ஸ்துவன்னஹம் முக்த இதி த்வயைவ
காருண்யதோ நாத கடாக்ஷணீய:
பிரபோ! ஒருவராலும் இயற்றபடாதவை ( அபௌருஷேயம்) எனப்படும் வேதத்தின் பிரிவுகளாலும்(வாக்ப்ரபஞ்சை இன்றளவும் (அத்யாபி) எல்லை காண முடியாத (அத்ருஷ்டபாராம் ) உன் மஹிமையை ( தே பூதிம்) துதிக்கின்ற நான் (ஸ்துவன் அஹம்) அறியாச்சிறுவன் (முக்த இதி) என்று உன்னால் (த்வயா) கருணையுடன் (காருண்யத கடாக்ஷிக்கத் தகுந்தவன் (கடாக்ஷணீய
வேதங்கள் பகவானின் மூச்சிலிருந்து தோன்றியபடியால அவை அபௌருஷேயம் , ஒருவராலும் இயற்றப்படாதவை எனப்படுகின்றன. அந்த வேதங்களாலும் அவன் பெருமையைக் கூற இயலவில்லை.
தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார், ‘யதேகைகககுணப்ராந்தே ஸ்ராந்தா: நிகமவந்தின: யதாவத் வர்ணனே அஸ்ய ,’ வேதமாகிற துதிப்பாடகர்கள் பகவானின் ஒரு குணத்தை வர்ணிப்பதற்குள் களைத்துவிடுகின்றார்களாம் . அதனால் அவரை உள்ளபடி வர்ணிக்க வேதங்களாலும் இயலவில்லை என்கிறார் .
மேலும் அவருடைய தன்னடக்கத்தையும் காண்கிறோம், முக்த: என்ற சொல்லின் மூலம்.நான் ஒரு அறியாப்பிள்ளை என்கிறார்.
ஒரு குழந்தையின் புரியாத மழலைச்சொல்லால் எவ்வாறு ஒரு தந்தை பூரிப்படைவானோ அதுபோல பகவான் நாம் துதிக்கும் சொற்களால் மகிழ்வடைகிறான்.,அதனால் நாம் சரியாக உச்சரிக்கிறோமா என்று கூட கவலைப்பட வேண்டுவதில்லை.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
வேதாந்த தேசிகரின் ஹயக்ரீவ ஸ்தோத்திரம்
தேசிகர் பல ஸ்தோத்ரங்களை செய்து இருந்தாலும் இதுவே அவர் முதன்முதலில் செய்ததாகும். திருவஹீந்த்ரபுரத்தில் தேசிகர் கருடனிடம் இருந்து ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் பெற்றார். பிறகு அவர் அங்குள்ள சிறிய குன்றின்மேல் அமர்ந்து இதை ஜபம் செய்தபோது ஹயக்ரீவர் பிரத்யக்ஷமாக அப்போது தேசிகர் இந்த ஸ்தோத்திரத்தால் அவரைத் துதித்தார்.
இப்போது இந்த ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.
1. ஞானாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஞானமாகிய ஆனந்தத்தின் உருவானவரும், நிர்மலமான ஸ்படிகம் போல் உருவம் தரித்தவரும், சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குவோமாக.
ஹயக்ரீவர் அகண்டசச்சிதானந்த பிரம்ம ஸ்வரூபம்., நிர்மலமான ஸ்படிகம் நிறமற்றது. ஸ்படிகம் என்பது தூய்மையைக் குறிக்கிறது. சுத்தப்ரம்மஸ்வரூபம். ஞானானந்தமயம் என்றால் ஞானமே உருவானவர் அதனால் ஏற்படும் இன்பத்தை ஸ்படிகம் என பிரதிபலிப்பவர்.
ஹயக்ரீவர் என்றால் குதிரை முகம் கொண்டவர் என்று பொருள். ஹயக்ரீவ வடிவத்தில் பிரம்மாவின் முன் தோன்றி வேதங்களை மறந்து துக்கித்த அவருக்கு உப்தேசம் செய்தவர்.
பிராணிகளுள் குதிரை அறிவு மிக்கது. யுத்த காலங்களில் அதன் எஜமானன் சொர்வுர்றதை கண்டால் தானாகவே யுத்தபூமியில் இருந்து அவனை வெளிக் கொணர்ந்து விடுமாம்.
இந்த குருபூர்ணிமா அன்று குரு உருவான ஹயக்ரீவரின் ஸ்தோத்திரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஸ்லோகம் பதிவிடுகிறேன், மற்றவை என் பதிவில் தொடர்ந்து வரும்.
ஹயக்ரீவஸ்தோத்ரம்
ஸ்லோகம் 2
2.ஸ்வதஸ்ஸித்தம் சுத்தஸ்படிக மணிபூப்ரருத்பிரதிபடம்
ஸுதாசத்க்ரீசீபி: த்யுதிபி: அவதாதத்ரிபுவனம்
அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்
ஹதாசேஷாவத்யம் ஹயவதனம் ஈடீமஹீ மஹ:
ஹயக்ரீவர் ஸ்வத:ஸித்த:, அதாவது தானாகவே தோன்றியவர். எல்லா அவதாரங்களும் அப்படியே.
பிறவி எடுத்ததாக நாம் கருதும் அவதாரங்களும் அவன் மாயையால் அப்படித் தோன்றுகின்றன. பகவானுக்கு கர்பவாசம் என்பது இல்லை.
புருஷ ஸுக்தம் கூறுகிறது, ‘அஜாயமானோ பஹுதா விஜாயதே,’ பிறவியே இல்லாதவன் பலவாகத் தோன்றுகிறான். கீதையில் கண்ணன் கூறுகிறான், ‘ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா,’ (ப.கீ. 4-3). பிரகிருதியை கைக்கொண்டு என்னுடைய மாயையால் என்னை நானே தோற்றுவிக்கிறேன்.
ஹயக்ரீவர் சுத்தஸ்படிகபூப்ருத் பிரதிபட என்று வர்ணிக்கப்படுகிறார் . பூப்ருத் என்றால் மலை. பிரதிபட என்றால் போட்டியிடுபவரைக் குறிக்கும். சுத்தஸ்படிகத்தினால் ஆன மலைக்கு போட்டியாக இருப்பவர்.
ஸுதா என்றால் அமுதம். ஸுதாஸத்ரீசீ என்றால் அமுதத்துடன் கூடிய, த்யுதிபி: , ஒளியால், அவதாத திருபுவனம் , மூன்று உலகமும் வெண்மையாக அதாவது தூய்மையாக பிரகாசிக்கிறது. அவர் அருள் அமுதம் போல் நிறைந்து உலகைத்தூய்மை ஆக்குகிறது.
அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்- குதிரை முகம் கொண்ட அவருடைய ஹலஹல என்ற ஹேஷா, கனைப்பு சப்தம், த்ரய்யந்தை: , உபநிஷத்துக்களால் ( த்ரயி என்றால் வேதம் அவற்றின் அந்தம் வேதாந்தம் அதாவது உபநிஷத்) அனுவிஹித , பின்பற்றப்படுகிறது.
ஹயக்ரீவரின் மூச்சுக்காற்றில் இருந்து பிறந்தவை வேதங்களாகும். அதனால் அவரிடம் இருந்து வரும் சப்தமே வேத கோஷம்.
ஹத அசேஷ அவத்யம் , அவர் பக்தர்களின் குறைபாடுகளை நீக்கிவிடுகிறார் .அப்பேர்ப்பட்ட மஹ:, ஒளிஸ்வரூபமான, ஹயவதனம் – ஹயக்ரீவரை , ஈடீமஹி – வணங்குவோமாக.
தேசிகரின் பதப்ரயோகங்கள் ஆச்சரியமானவை. அவருடைய ஸ்லோகங்களை கற்றாலே சம்ஸ்க்ருத ஞானம் வெகுவாக வளரும்.
ஹயக்ரீவஸ்தோத்ரம் ஸ்லோகம் 3/4
3.ஸமாஹாரஸ்ஸாம்னாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
லய: பிரத்யூஹானாம் லஹரிவிததி: போதஜலதே:
கதாதர்பக்ஷுப்யத் கதககுல கோலாஹலபவம்
ஹரது அந்தர்த்வாந்தம் ஹயவதனஹேஷாஹலரவ:
ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் , ஹேஷாஹலரவ:, சாமவேதத்தின் சேகரிப்பு.(ஸமாஹார ரிக்வேதத்தின் மறுபதம்.(பிரதிபதம்) யஜுர்வேதத்தின் இருப்பிடம்/ ஒளி. (தாம என்னும் சொல் இருப்பிடம் , ஒளி இரண்டையும் குறிக்கும். )
சாமகானம் வாகீசராகிய ஹயக்ரீவரிடம் இருந்து வருகிறது. ரிக் வேதம் மந்த்ரங்களைக் கொண்டது. அதன் மறு பொருளாக ஹயக்ரீவர் இருக்கிறார். யஜூர்வேதம் வேத கர்மாக்களை குறிப்பதால் அவைகளின் பயன் அவரை அடைவதே என்பதால் அவைகளின் இருப்பிடமும் ,ஒளியைதருபவரும் அவரே.
கற்பதில் உள்ள எல்லா இடையூறுகளையும் (ப்ரத்யூஹானாம்) அழிக்கும் (லயவல்லமை வாய்ந்தது. அறிவு எனும் கடலின்( போத ஜலதே அலைகளின் வரிசை.( லஹரிவிததி
ஊஹ என்றால் அறிவது பிரத்யூஹ என்றால் அதற்கு இடையூறு. ஹய்க்ரீவருடைய கனைப்பு சப்தப்ரம்மமே ஆதலால் கற்பதில் உள்ள இடையூறுகள் அகல்கின்றன.அது மட்டும் அல்ல. மேலும் அறிவு அலைகளை உற்பத்தி செய்யும் சமுத்திரமாகவும் இருக்கிறார்.
அவருடைய கனைப்பொலி வாதம் புரிவதால்செருக்குற்ற ( கதாதர்ப) வாதிகளின் ஆரவாரத்தால் ஏற்பட்ட (கதககுல கோலாஹலபவம் ) கலக்கத்தினால் உண்டான மன இருளை (க்ஷுப்யத் அந்தர்த்வாந்தம்) ஹரது- போக்கடிக்கட்டும்.
ஹயக்ரீவரின் அருளைப் பெற்றவர்கள் எதிர்வாதம் செய்து மக்கள மனதை மயக்குவோருக்கு சவாலாக இருக்கிறார்கள். இதற்கு கவிதார்கிக கேசரி என்று பட்டம் பெற்ற தேசிகரே ஸாக்ஷி.
அப்படிப்பட்டவர்களின் வாதத்தினால் ஏற்பட்ட ஆரவாரத்தை ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் விழுங்கி விடுகிறது.
4.ப்ராசீ ஸந்த்யா காசித் அந்தர்நிசாயா:
பிரக்ஞா த்ருஷ்டே: அஞ்சனஸ்ரீ: அபூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜிவக்த்ரா
வாகீசாக்யா வாசுதேவஸ்ய மூர்த்தி:
, குதிரை முகம் கொண்டதும், ( வாஜிவக்த்ரா- வாஜி என்றால் குதிரை ) மனஇருள் என்ற இரவின் (அந்தர்நிசாயா விடியற்காலமாகவும் , (ப்ராசீ சந்த்யா) ஞானக்கண்ணின் (பிரக்ஞா த்ருஷ்டே: ), அதிசயமான (அபூர்வா) கண் மையாகவும் (அஞ்சன ஸ்ரீ: ) வேதங்களை உபதேசிக்கின்ற : (வக்த்ரீ வேதான்) வாசுதேவரின் கல்விக்கடவுள் (வாகீசர் )என்ற ரூபம், (மூர்த்தி பாது (bAATHU) மே, என் முன்னர் பிரகாசிக்கட்டும்.
மனஇருள் அஞ்ஞாநத்தினால் வருவது. மனதில் ஹயக்ரீவரின் உருவம் த்ன்றினால் அந்த இருள் உதயசூரியன் வந்தாற்போல் மறைகிறது. மந்திர மை போட்ட கண்களுக்கு எல்லாம் தெரிவதைப்போல் ஹயகிரீவரின் உருவம் ஞானக்கண்ணின் மையாக விளங்குகிறது.
வக்த்ரீ வேதான் என்பது பகவான் வாசுதேவர் ஹயவதனராகத் தோன்றி பிரம்மாவுக்கு வேதத்தை உபதேசம் செய்ததை குறிக்கிறது.
ஹயக்ரீவஸதோத்ரம் - 5, 6
.5.விசுத்த விஞ்ஞானகனஸ்வரூபம்
விஞ்ஞான விச்ராணனபத்த தீக்ஷம்
தயாநிதிம் தேஹப்ருதாம் சரண்யம்
தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே
தூய்மையான(விசுத்த) ஞானத்தின் மொத்தவடிவமான (விஞ்ஞான கனஸ்வரூபம்), ஞானத்தை அருள்வதில் வ்ரதம் பூண்டவரும் (விஞ்ஞான விச்ராணன பத்த தீக்ஷம்) , கருணைக்கு உறைவிடமும், எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாகவும் உள்ள ஹயக்ரீவரை வணங்குகிறேன்
அடுத்துவரும் ஸ்லோகங்கள் ஹயக்ரீவர் தரிசனம் தந்தபோது அவரைப்பார்த்து இயற்றியவை என்று சொல்லப்படுகிறது. அவை ஹயக்ரீவருடன் நேரில் பேசுவது போன்று இருப்பவை.
6. அபௌருஷேயைரபி வாக்ப்ரபஞ்சை:
அத்யாபி தே பூதிம் அத்ருஷ்டபாராம்
ஸ்துவன்னஹம் முக்த இதி த்வயைவ
காருண்யதோ நாத கடாக்ஷணீய:
பிரபோ! ஒருவராலும் இயற்றபடாதவை ( அபௌருஷேயம்) எனப்படும் வேதத்தின் பிரிவுகளாலும்(வாக்ப்ரபஞ்சை இன்றளவும் (அத்யாபி) எல்லை காண முடியாத (அத்ருஷ்டபாராம் ) உன் மஹிமையை ( தே பூதிம்) துதிக்கின்ற நான் (ஸ்துவன் அஹம்) அறியாச்சிறுவன் (முக்த இதி) என்று உன்னால் (த்வயா) கருணையுடன் (காருண்யத கடாக்ஷிக்கத் தகுந்தவன் (கடாக்ஷணீய
வேதங்கள் பகவானின் மூச்சிலிருந்து தோன்றியபடியால அவை அபௌருஷேயம் , ஒருவராலும் இயற்றப்படாதவை எனப்படுகின்றன. அந்த வேதங்களாலும் அவன் பெருமையைக் கூற இயலவில்லை.
தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார், ‘யதேகைகககுணப்ராந்தே ஸ்ராந்தா: நிகமவந்தின: யதாவத் வர்ணனே அஸ்ய ,’ வேதமாகிற துதிப்பாடகர்கள் பகவானின் ஒரு குணத்தை வர்ணிப்பதற்குள் களைத்துவிடுகின்றார்களாம் . அதனால் அவரை உள்ளபடி வர்ணிக்க வேதங்களாலும் இயலவில்லை என்கிறார் .
மேலும் அவருடைய தன்னடக்கத்தையும் காண்கிறோம், முக்த: என்ற சொல்லின் மூலம்.நான் ஒரு அறியாப்பிள்ளை என்கிறார்.
ஒரு குழந்தையின் புரியாத மழலைச்சொல்லால் எவ்வாறு ஒரு தந்தை பூரிப்படைவானோ அதுபோல பகவான் நாம் துதிக்கும் சொற்களால் மகிழ்வடைகிறான்.,அதனால் நாம் சரியாக உச்சரிக்கிறோமா என்று கூட கவலைப்பட வேண்டுவதில்லை.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM