|
Post by hemalathak on Jul 9, 2012 18:15:36 GMT 5.5
SHRI MAHA PERIAVA THIRUVADIGAL CHARANAM காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை அகண்டமாக இருக்கிற பரமாத்மாவைக் கண்டம் கண்டமாக உருவமும் குணமும் உள்ளவனாக தியானம் பண்ணிக் கடைசி நிலையாக நிர்குணத் தியானம் செய்ய ஆரம்பித்தால், சண்டை, பூசல் ஒன்றுமே வராது. துக்கம், பயம் எதுவுமே இராது. பரம சாந்திதான் இருக்கும். இதுதான் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் உபநிஷத மரத்திலிருந்து நமக்குப் பறித்துக் கொடுத்த பழம். இந்தப் பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்ஜாக காயாக இருந்ததுதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொருமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. வெம்பி விழுந்திடுமோ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும். வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியாக தத்தத்வம் என்கிற உண்மை நிலைக்கு நாம் வரும் வரையில் அவை அப்போதுதான் வெம்பாது பழுக்கும். கடைசியில் அந்த தத்வம் - மூலம் - எங்கே இருக்கிறது. தன்னிடத்திலேயேதான் இருக்கிறது. எந்த அறிவு தத்துவத்தை ஆராய்கிறதோ, அந்த அறிவுக்குள்ளேயே இருக்கிறது என்பதை அநுபவத்தில் உணரலாம். Attachments:
|
|
|
Post by hemalathak on Jul 9, 2012 20:53:29 GMT 5.5
|
|