Post by radha on Feb 22, 2018 12:43:54 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
கவலை தீர்ப்பான் கார்த்திகேயன்! கார்த்திகை நாளில் வழிபடுவோம்!
Published : 22 Feb 2018
வி.ராம்ஜி
கந்தனுக்கு உரிய கார்த்திகை நட்சத்திர நன்னாளில், கார்த்திகேயனை வணங்கி வழிபடுவோம். நம் கவலையெல்லாம் தீர்த்துவைப்பான் ஞானகுருவான முருகப்பெருமான்!
திதியில் சஷ்டி திதி, முருகனுக்கு உகந்தது என்றும் நட்சத்திரத்தில் கார்த்திகை நட்சத்திரம் உகந்தது என்றும் சொல்லுவார்கள்.
நேற்று 21ம் தேதி சஷ்டி நன்னாள். முருகனுக்கு உகந்தவை. அதேபோல், இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாள். எனவே இதுவும் கந்தனுக்கு உகந்த அற்புதமான நாள்.
முருகப்பெருமான், சஷ்டி நாயகன். கார்த்திகேயன். அதுமட்டுமா. தகப்பனுக்கே பாடம் சொன்ன ஞானகுரு. வியாழன் என்பது குருவுக்கு உரிய, குருவை வணங்கவேண்டிய அற்புதமான நாள். எனவே ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, வணங்கி வழிபடுவோம்.
அழகன் முருகனை ஆலயத்துக்குச் சென்று தரிசிப்போம். கந்தகுமாரனை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். நம் கவலையெல்லாம் தீர்த்துவைப்பான் கந்தவேலன். சோகத்தையெல்லாம் துரத்தி சந்தோஷத்தைப் பெருக்குவான் வடிவேலன்!
குரு வார நன்னாளில், கார்த்திகை நட்சத்திரம் கூடிய விசேஷமான நாளில், சிவமைந்தனை வேண்டுவோம். சிக்கல்களையெல்லாம் களைந்து, வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் சக்தியின் மைந்தன்!
Keywords
கந்தன் குமரன் கார்த்திகேய வழிபாடு கார்த்திகை நட்சத்திரம் முருகன் வழிபாடு ஞானகுரு முருகன் சிவமைந்தன் சக்திகுமாரன் சிக்கல் தீர்ப்பான் வேலவன்
2.
சஷ்டியில் வேலனை வணங்கினால் சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்!
உரிய சஷ்டி நாளில், முருகப்பெருமானை வணங்குவோம். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்துவைத்து அருள்வான் என்கின்றனர் பக்தர்கள்.
முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டியில் விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள். அதேபோல் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் கந்த வழிபாடு கவலைகள் தீர்க்கும் மாமருந்து என்று போற்றுகின்றனர்.
இன்று 21ம் தேதி சஷ்டி. இந்த நன்னாளில், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத அற்புதமான நாளில், சஷ்டியின் நாயகனை, முருகப்பனை தரிசனம் செய்யுங்கள்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள். கந்தவேலனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, வேலவனை வழிபடுங்கள். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான். சங்கடங்களையெல்லாம் காணடித்து, சந்தோஷத்தைப் பெருக்கி அருள்வான் சக்திகுமரன்!
சஷ்டியில் முருகனைத் தரிசித்து, சந்துஷ்டியுடன், சந்ததி சிறக்க வாழ்வோம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
Keywords
சஷ்டி தரிசனம் முருக வழிபாடு முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை மாத சஷ்டி சங்கடம் தீர்க்கும் சஷ்டி வினை தீர்ப்பான் வேலவன்
SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
கவலை தீர்ப்பான் கார்த்திகேயன்! கார்த்திகை நாளில் வழிபடுவோம்!
Published : 22 Feb 2018
வி.ராம்ஜி
கந்தனுக்கு உரிய கார்த்திகை நட்சத்திர நன்னாளில், கார்த்திகேயனை வணங்கி வழிபடுவோம். நம் கவலையெல்லாம் தீர்த்துவைப்பான் ஞானகுருவான முருகப்பெருமான்!
திதியில் சஷ்டி திதி, முருகனுக்கு உகந்தது என்றும் நட்சத்திரத்தில் கார்த்திகை நட்சத்திரம் உகந்தது என்றும் சொல்லுவார்கள்.
நேற்று 21ம் தேதி சஷ்டி நன்னாள். முருகனுக்கு உகந்தவை. அதேபோல், இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாள். எனவே இதுவும் கந்தனுக்கு உகந்த அற்புதமான நாள்.
முருகப்பெருமான், சஷ்டி நாயகன். கார்த்திகேயன். அதுமட்டுமா. தகப்பனுக்கே பாடம் சொன்ன ஞானகுரு. வியாழன் என்பது குருவுக்கு உரிய, குருவை வணங்கவேண்டிய அற்புதமான நாள். எனவே ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, வணங்கி வழிபடுவோம்.
அழகன் முருகனை ஆலயத்துக்குச் சென்று தரிசிப்போம். கந்தகுமாரனை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். நம் கவலையெல்லாம் தீர்த்துவைப்பான் கந்தவேலன். சோகத்தையெல்லாம் துரத்தி சந்தோஷத்தைப் பெருக்குவான் வடிவேலன்!
குரு வார நன்னாளில், கார்த்திகை நட்சத்திரம் கூடிய விசேஷமான நாளில், சிவமைந்தனை வேண்டுவோம். சிக்கல்களையெல்லாம் களைந்து, வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் சக்தியின் மைந்தன்!
Keywords
கந்தன் குமரன் கார்த்திகேய வழிபாடு கார்த்திகை நட்சத்திரம் முருகன் வழிபாடு ஞானகுரு முருகன் சிவமைந்தன் சக்திகுமாரன் சிக்கல் தீர்ப்பான் வேலவன்
2.
சஷ்டியில் வேலனை வணங்கினால் சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்!
உரிய சஷ்டி நாளில், முருகப்பெருமானை வணங்குவோம். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்துவைத்து அருள்வான் என்கின்றனர் பக்தர்கள்.
முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டியில் விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள். அதேபோல் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் கந்த வழிபாடு கவலைகள் தீர்க்கும் மாமருந்து என்று போற்றுகின்றனர்.
இன்று 21ம் தேதி சஷ்டி. இந்த நன்னாளில், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத அற்புதமான நாளில், சஷ்டியின் நாயகனை, முருகப்பனை தரிசனம் செய்யுங்கள்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள். கந்தவேலனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, வேலவனை வழிபடுங்கள். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான். சங்கடங்களையெல்லாம் காணடித்து, சந்தோஷத்தைப் பெருக்கி அருள்வான் சக்திகுமரன்!
சஷ்டியில் முருகனைத் தரிசித்து, சந்துஷ்டியுடன், சந்ததி சிறக்க வாழ்வோம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
Keywords
சஷ்டி தரிசனம் முருக வழிபாடு முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை மாத சஷ்டி சங்கடம் தீர்க்கும் சஷ்டி வினை தீர்ப்பான் வேலவன்
SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA