|
Post by premnath5552 on Apr 18, 2017 18:24:30 GMT 5.5
The following verses were composed by P.Premnath
ஞாலம் போற்றும் பெருந்தவச்சீலனே ஞாயிறும் திங்களும் தொழுதெழும் குணாளனே
பக்தி தழைத்தோங்க சங்கரரின் அவதாரமாய் பாரினிலே அவதரித்த பரம்பொருளே
வாழையடி வாழையாய் மனிதகுலம் தழைத்தோங்க, விழிவழியாய் அருளமுதம் தந்த பெரும்வள்ளலே
இன்பம் எங்கும் பொங்க (அக்ஞான) இருள்தனை நீக்கி, இனிதாய் தருமங்களை எளிதாய் புகட்டிய பெருமாளே
கனவினிலே தோன்றி கஷ்டங்களைக் களைந்தெறிந்து காத்தருளும் கருணைக்கடலே
கடலெனத் தோன்றும் கவலைகள்தனைக் கணப்போதில் கரையேற்றும் கட்டுமரமே நொந்துடலும் கிழமாகி நோயில் தளர்ந்திடும் போதும் வந்தெமதூதர் பாசக்கயிற்றால் பிணைத்திடும்போதும்
பெற்றவரும் உற்றவரும் சுற்றமும் விலகிச்சென்றிடினும் பெற்ற புகழும் சேமித்த பெருந்தனமும் கடைவழிக்கு வாராத போதும் சரணாகதி உன் பாதமே என்றுணர்ந்து பற்றிடும்போது யாமிருக்க பயமேன் என்றென்னை ஆட்கொள்வாய் ஸ்ரீகுருநாதா !
அஞ்சேல் என்றெனை அணைத்தருள்வாய் ஸ்ரீகுருநாதா ! நீயன்றி யாரென்னைக் காத்தருள்வார் குலநாதா!
குருநாதன் சரணமே கதி நமக்கு அனுதினமே குறை களையும் அவன்பாத சேவனம் நல்கும் நமக்கு சுபதினமே
சஞ்சலம் நீக்கி சன்மார்கம் காட்டும் ஸத்குருபாதம் பவ பயம்போக்கி பவித்திரனாக்கும் பாவன பாதம் பரமபதம் கொடுத்தருளும் பத்மபாதம் பக்தர்தம் ஸிரசிலே என்றும் நீங்காக் கமலபாதம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
|
|
|
Post by Kanchi Periva on Apr 19, 2017 7:22:16 GMT 5.5
|
|
|
Post by Sumi on Apr 19, 2017 10:04:08 GMT 5.5
Thank you very much sir, for sharing this wonderful poem.
|
|