Post by saanuputhiran on Aug 27, 2016 11:47:53 GMT 5.5
ஸ்ரீமஹாஸ்வாமி துதி மாலை
பெரியவா சரணம்
மிகவும் புண்ணியமான நற்பொழுதான இன்றைய தினம் ஐயனின் அருள்பொங்கும் தரிசனங்களை அன்பர்கள் ஆங்காங்கேயிருந்து அடியேனுக்கு அருளினராம்…. அனைத்தும் அவரருளாலே!
இருந்த இடத்தினின்று அனுஷ மூர்த்தி ஐயனுடைய பற்பல அற்புத தரிசங்களைக் காணுற்று அருள்பெறும் பாக்கியம் கிட்டியது கண்டு மனம் வெகுவாக ஆனந்திப்பதோடு, அவருடைய அருட்திண்ணத்தின் அலகிலமுடியாத பேரருளை அன்பர்க்குச் சொல்வது போலே ஓர் பாமாலையும் வந்தனமே!
சங்கரா!
ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர…
#ஸ்ரீகுருதுதி
நடன எழில் ஜீவனவன் அவதாரச் செம்மலென
நன்னயமுந் தந்தருளும் நாயகனார் சங்கரனை
சீரோங்கும் காஞ்சியிலே சன்னதியில் காண்கையிலே
திருவோங்கும் தரிசனமும் மங்களமும் நிறைத்திடுமே!
வேதநிறை பீடந்தனில் கருணைமிகு மும்மகளாய்
பரதம்நிறை பொக்கிஷமாய் திறனோங்கும் குருவருளும்
வெவ்வினையை வேரறுத்து வித்தகாரம் சீரோங்க
நவமான ஓங்காரம் நன்னிலையை நல்கிடுமே!
கலைமகளாம் வாணியுமாய் கருணைமிகு மலைமகளாய்
திருமகளாய் திருமகனார் திவ்வியமாய் நல்கியதோர்
ஞானவழி தாமொழுகும் நல்மனத்து மாண்புடையோர்
செம்மையுள வாழ்விபெற செவ்வருளும் பொழிந்திடுமே!
சித்தியொடு முக்திதரு திருவுருவாய் குருவடிவை
பத்தியொடு சிந்தையுளே நித்தமுணர் மாந்தருக்கு
அத்திகுரு அருள்கூட்டி அகம்நிறைய மகிழ்வதனை
சத்திசிவ ஞானகுரு திருவருளும் தந்திடுமே!
வேதமறை நாதவொலி வேண்டுவன தந்தருளும்
நேயமுற சந்தவொலி நல்கியசீர் குருவாக்கும்
தேகமுறு நன்னிலையும் தேடிவரு செல்வங்களும்
சேருதிரு புண்ணியத்தால் சென்மமிதும் சீர்பெறுமே!
தவமோங்கும் கச்சிமட உச்சிபதம் பணிந்திடவே
கருணைமிகு காமாக்ஷி கனியருளும் வாழ்வுதரும்
அகிலாண்ட ஈஸ்வரனை அற்புதங்கள் கடந்தவரை
அனுதினமும் சரண்புகவே அவனியரின் வாழ்வுயரும்!
பெரியவா சரணம்!
பெரியவா சரணம்!
ஸ்ரீமஹா பெரியவா அபயம்!
கருணாகரா! கற்பகமே! அற்புதங்கடந்த அருட்பெருஞ் சோதியனே! அன்பர்கள் அனைவருடைய ஆழ்மனத்து பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் தர்மமான பிரார்த்தனையை எல்லாம் நிறைவேற்றி அருள்வாயாக, அப்பனே!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
பெரியவா சரணம்
மிகவும் புண்ணியமான நற்பொழுதான இன்றைய தினம் ஐயனின் அருள்பொங்கும் தரிசனங்களை அன்பர்கள் ஆங்காங்கேயிருந்து அடியேனுக்கு அருளினராம்…. அனைத்தும் அவரருளாலே!
இருந்த இடத்தினின்று அனுஷ மூர்த்தி ஐயனுடைய பற்பல அற்புத தரிசங்களைக் காணுற்று அருள்பெறும் பாக்கியம் கிட்டியது கண்டு மனம் வெகுவாக ஆனந்திப்பதோடு, அவருடைய அருட்திண்ணத்தின் அலகிலமுடியாத பேரருளை அன்பர்க்குச் சொல்வது போலே ஓர் பாமாலையும் வந்தனமே!
சங்கரா!
ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர…
#ஸ்ரீகுருதுதி
நடன எழில் ஜீவனவன் அவதாரச் செம்மலென
நன்னயமுந் தந்தருளும் நாயகனார் சங்கரனை
சீரோங்கும் காஞ்சியிலே சன்னதியில் காண்கையிலே
திருவோங்கும் தரிசனமும் மங்களமும் நிறைத்திடுமே!
வேதநிறை பீடந்தனில் கருணைமிகு மும்மகளாய்
பரதம்நிறை பொக்கிஷமாய் திறனோங்கும் குருவருளும்
வெவ்வினையை வேரறுத்து வித்தகாரம் சீரோங்க
நவமான ஓங்காரம் நன்னிலையை நல்கிடுமே!
கலைமகளாம் வாணியுமாய் கருணைமிகு மலைமகளாய்
திருமகளாய் திருமகனார் திவ்வியமாய் நல்கியதோர்
ஞானவழி தாமொழுகும் நல்மனத்து மாண்புடையோர்
செம்மையுள வாழ்விபெற செவ்வருளும் பொழிந்திடுமே!
சித்தியொடு முக்திதரு திருவுருவாய் குருவடிவை
பத்தியொடு சிந்தையுளே நித்தமுணர் மாந்தருக்கு
அத்திகுரு அருள்கூட்டி அகம்நிறைய மகிழ்வதனை
சத்திசிவ ஞானகுரு திருவருளும் தந்திடுமே!
வேதமறை நாதவொலி வேண்டுவன தந்தருளும்
நேயமுற சந்தவொலி நல்கியசீர் குருவாக்கும்
தேகமுறு நன்னிலையும் தேடிவரு செல்வங்களும்
சேருதிரு புண்ணியத்தால் சென்மமிதும் சீர்பெறுமே!
தவமோங்கும் கச்சிமட உச்சிபதம் பணிந்திடவே
கருணைமிகு காமாக்ஷி கனியருளும் வாழ்வுதரும்
அகிலாண்ட ஈஸ்வரனை அற்புதங்கள் கடந்தவரை
அனுதினமும் சரண்புகவே அவனியரின் வாழ்வுயரும்!
பெரியவா சரணம்!
பெரியவா சரணம்!
ஸ்ரீமஹா பெரியவா அபயம்!
கருணாகரா! கற்பகமே! அற்புதங்கடந்த அருட்பெருஞ் சோதியனே! அன்பர்கள் அனைவருடைய ஆழ்மனத்து பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் தர்மமான பிரார்த்தனையை எல்லாம் நிறைவேற்றி அருள்வாயாக, அப்பனே!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.