Post by saanuputhiran on Aug 27, 2016 11:01:23 GMT 5.5
பூலோகக் கைலாயனாம் ஸ்ரீமஹாஸ்வாமிக்கு பூமாலையாய் ஓர் பாமாலை
|| ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ||
தான்தோன்றி துறவுருவே !
தரணிகாக்கும் குருவுருவே !
கலவைதனில் கோலூன்றி
காமகோடீ பீடமேறி
காஞ்சிதலம் மேவிநின்ற
கருணையுரு ஜெகத்குருவே !
காலமெலாம் உனைதுதிக்க
வரமருள்வாய் சங்கரனே ! (1)
புவிமேவும் நரனார்க்கும்
மனம்\நிறையும் இருளகற்றி
மட்டில்லாப் பேரொளியாய்
மனம்நிறையும் ஜெகத்குருவே !
தூயவனார் நின்னுருவை
துதிபாடி தினம்போற்றும்
வரமருளி வாழ்வுதந்தே
காத்தருள்வாய் சங்கரனே ! (2)
பிறைசூடும் நுதலோனே !
எமையாளும் பரம்பொருளே !
சுமையிறக்கிச் சுகமளிக்கும்
ஒப்பரியப் பேரிறைவா !
சுற்றமொடு ஒன்றிவாழ
நெல்வளமும் நீர்வளமும்
நிறையபெறும் வரம்தந்தே
வாழ்வருள்வாய் சங்கரனே! (3)
தொல்பதியாம் கச்சிநகர்
ஏகாம்ரன் காமாட்சி
கருணைதனில் யாம்பெற்ற
பூரணமே ! பொக்கிஷமே !
சொல்பழமை மாறாத
சுந்தரத்தேன் தமிழினிலே
சொல்கோத்துப் போற்றுகின்றோம்
சுகமருள்வாய் சங்கரனே ! (4)
மூர்த்திதலம் தீர்த்தமெனும்
மூன்றுமுடை மூத்தவனாய்
மூஷிகனின் அன்னையவள்
அருள்பொதிந்த குருபரனே !
அறிவிழந்து யாம்செய்த
பாவமெல்லாம் பொறுத்தருளி
அற்புதங்கள் காட்டுமுந்தன்
அருள்தருவாய் சங்கரனே ! (5)
கற்சிலைக்குள் இருந்தெம்மைக்
காவல்செய் கனியுருவே !
இனியெமக்கு உன்கழலைத்
தொழுவதல்லால் ஏதுகதி ?
பண்பழியா வாழ்வுபெற
உள்ளம்அழ உனைநினைத்து
அனுதினமும் துதிசெய்ய
வழியருள்வாய் சங்கரனே ! (6)
விக்கினங்கள் வலிகொடுத்த
வேதனையைத் தீர்ப்பதற்கு
வேறுதெய்வம் யாமறியோம்
வேதவிழுப் பொருளோனே!
கொடியபுயல் இடியிடித்து
மழையடித்த வெள்ளந்தனில்
குடியிழந்த ஏழையற்கும்
வாழ்வருள்வாய் சங்கரனே ! (7)
சுடுமணலில் படுத்துருண்டு
பீடுநடை வலமும்வந்து
செல்லும்வழி வாழ்நரர்க்கும்
செரிவறிவும் தந்தோனே !
அமிர்தகழி கரம்கொண்டோய் !
அருட்கடலே ! அருங்குருவே !
அடிதொழுது துதிக்கும்எம்மை
ஆண்டருள்வாய் சங்கரனே ! (8)
துதி பலன்:
பண்புநிறை மனதோடே
சசிசேகர சங்கரனை
பத்தியொடு துதிப்போர்க்கு
அறிவோடு ஆற்றலுடன்
அழகும்ஆடை ஆபரணம்
பொருளோடு புகழணைய
பொக்கிஷமாய் வாழ்வமையும்
சத்தியமாய் நித்தம்சுபம்! (9)
பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹா பெரியவா அபயம்!!
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை!
- சாணு புத்திரன்.
|| ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ||
தான்தோன்றி துறவுருவே !
தரணிகாக்கும் குருவுருவே !
கலவைதனில் கோலூன்றி
காமகோடீ பீடமேறி
காஞ்சிதலம் மேவிநின்ற
கருணையுரு ஜெகத்குருவே !
காலமெலாம் உனைதுதிக்க
வரமருள்வாய் சங்கரனே ! (1)
புவிமேவும் நரனார்க்கும்
மனம்\நிறையும் இருளகற்றி
மட்டில்லாப் பேரொளியாய்
மனம்நிறையும் ஜெகத்குருவே !
தூயவனார் நின்னுருவை
துதிபாடி தினம்போற்றும்
வரமருளி வாழ்வுதந்தே
காத்தருள்வாய் சங்கரனே ! (2)
பிறைசூடும் நுதலோனே !
எமையாளும் பரம்பொருளே !
சுமையிறக்கிச் சுகமளிக்கும்
ஒப்பரியப் பேரிறைவா !
சுற்றமொடு ஒன்றிவாழ
நெல்வளமும் நீர்வளமும்
நிறையபெறும் வரம்தந்தே
வாழ்வருள்வாய் சங்கரனே! (3)
தொல்பதியாம் கச்சிநகர்
ஏகாம்ரன் காமாட்சி
கருணைதனில் யாம்பெற்ற
பூரணமே ! பொக்கிஷமே !
சொல்பழமை மாறாத
சுந்தரத்தேன் தமிழினிலே
சொல்கோத்துப் போற்றுகின்றோம்
சுகமருள்வாய் சங்கரனே ! (4)
மூர்த்திதலம் தீர்த்தமெனும்
மூன்றுமுடை மூத்தவனாய்
மூஷிகனின் அன்னையவள்
அருள்பொதிந்த குருபரனே !
அறிவிழந்து யாம்செய்த
பாவமெல்லாம் பொறுத்தருளி
அற்புதங்கள் காட்டுமுந்தன்
அருள்தருவாய் சங்கரனே ! (5)
கற்சிலைக்குள் இருந்தெம்மைக்
காவல்செய் கனியுருவே !
இனியெமக்கு உன்கழலைத்
தொழுவதல்லால் ஏதுகதி ?
பண்பழியா வாழ்வுபெற
உள்ளம்அழ உனைநினைத்து
அனுதினமும் துதிசெய்ய
வழியருள்வாய் சங்கரனே ! (6)
விக்கினங்கள் வலிகொடுத்த
வேதனையைத் தீர்ப்பதற்கு
வேறுதெய்வம் யாமறியோம்
வேதவிழுப் பொருளோனே!
கொடியபுயல் இடியிடித்து
மழையடித்த வெள்ளந்தனில்
குடியிழந்த ஏழையற்கும்
வாழ்வருள்வாய் சங்கரனே ! (7)
சுடுமணலில் படுத்துருண்டு
பீடுநடை வலமும்வந்து
செல்லும்வழி வாழ்நரர்க்கும்
செரிவறிவும் தந்தோனே !
அமிர்தகழி கரம்கொண்டோய் !
அருட்கடலே ! அருங்குருவே !
அடிதொழுது துதிக்கும்எம்மை
ஆண்டருள்வாய் சங்கரனே ! (8)
துதி பலன்:
பண்புநிறை மனதோடே
சசிசேகர சங்கரனை
பத்தியொடு துதிப்போர்க்கு
அறிவோடு ஆற்றலுடன்
அழகும்ஆடை ஆபரணம்
பொருளோடு புகழணைய
பொக்கிஷமாய் வாழ்வமையும்
சத்தியமாய் நித்தம்சுபம்! (9)
பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹா பெரியவா அபயம்!!
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை!
- சாணு புத்திரன்.