|
Post by saidevo on Nov 23, 2015 18:58:51 GMT 5.5
பிரதோஷத் துதி எங்களுக்கேன் அபிஷேகம் ஈசனே? (முச்சீர் சமநிலைச் சிந்து)
வானதியைத் தாங்குதலைச் செஞ்சடை - கொஞ்சம் . வாகாகச் சிலிர்த்தாயோ ஈசனே! ஊனுருக நீராடும் பொழிவிலே - கொஞ்சம் . உன்பங்காய் எங்களுக்கா ஈசனே!
ஏனிந்தப் பெருவெள்ள லீலையோ - எம்மை . ஏங்கவைத்துப் பார்ப்பதுமேன் ஈசனே! வானத்தில் சோதிநிலை யாகுமோ - இந்த . வான்மீன்கள் மூழ்கினவோ ஈசனே!
நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி . நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே! கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும் . கரமேந்த வைத்தனையே ஈசனே!
திருவாடல் போதுமையா இத்துடன் - எங்கள் . தெருவாடல் தீர்த்தருள்வாய் ஈசனே! நரியாடல் பரியாடல் போதுமே - எங்கள் . நலமீண்டும் ஆடவருள் ஈசனே!
--ரமணி, 23/11/2015, கலி.07/08/5116
*****
|
|
|
Post by venkateswaranrn on May 29, 2016 9:22:00 GMT 5.5
Whose "Sthuthi" is this? Can I have the details?
|
|