|
Post by kgopalan90 on Nov 30, 2017 23:18:56 GMT 5.5
03-12-2017.
ஸர்ப்ப பலி ஆவணி அவிட்டம் அன்று ஆரம்பித்தது இன்றுடன் முடிவு அடைகிறது. தினசரி உத்தேசமாக நான்கு மாத காலம் தினம் அரிசி மாவு நல்ல பாம்புகளுக்கு பலி போட்டது இன்று முடிவடைகிறது. இன்று மாலை
ஆவணி அவிட்டத்தன்று செய்தது போல பலாச பூக்கலாளும், சரக்கொன்றை சமித்துகளாலும் ஹோமம் செய்து ஸர்ப்பபலி கர்மாவை பூர்த்தி செய்ய வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 30, 2017 23:16:33 GMT 5.5
03-12-2017 அன்று உப்பு தானம் செய்வது சால சிறந்தது .நித்ய கர்மாக்கள் முடித்து விட்டு நம் வீட்டு ஸ்வாமி சன்னதியில் ஒரு அரை கிலோ அல்லது ஒரு கிலோ நாம் சாப்பிடும் கல் உப்பு வாங்கி ரஸாநாம் அக்ரஜம்
சிரேஷ்டம் லவணம் பல வர்த்தநம் தஸ்மாதஸ்ய ப்ரதாநேன அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே மார்க சீர்ஷ பூர்ணிமா புண்ணிய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் இதம் லவணம் ஸ
பாத்ரஸ்ய தானம் கரிஷ்யே என்று சொல்லி இத்துடன் தக்ஷிணை, துளசியும் சேர்த்து , நமஸ்காரம் செய்து அதை யாராவது ஒருவரிடம் தானம் கொடுக்க வேண்டும். இம்மாதிரி கொடுப்பதால் பிறர் பார்வைக்கு
அழகாகவே தோன்றுவார்கள் அவரும் அவரது குடும்பதினர்களும். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் இம்மாதிரி வாங்கி கொடுக்கலாம்.நிர்ணய ஸிந்து இம்மாதிரி பகர்கிறது.
|
|
|
Post by kgopalan90 on Nov 30, 2017 21:12:24 GMT 5.5
வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம் 586 ல் உபவாஸோ யதா நித்யஹ சிராத்தம் நைமிதிகம் பவேத் உபவாஸம் ததா குர்யாத் ஆக்ராய பித்ரு ஸேவிதம் கர்த்தா நோபவஸேத் சிராத்தே பித்ர்யேப் ஏகாதசி தினே தயோரப்திகம் கம்ப்ருய்டு: பித்ருசேஷம் மஹர்ஷிய: என்ற வாக்கியபடி கர்த்தா ஏகாதசி விரதத்தை தவராது கடைபிடிப்பவராக இருந்தாலும் சிராத்தன்று கட்டாயம் பித்ரு சேஷம் சாப்பிட வேண்டும். நித்யமான ஏகாதசி விரதத்தை விட நைமித்திகமான சிராத்த சேஷ போஜனம் அதிக புண்ணியத்தை தரும். ஆகவே கர்த்தா சிராத்த செஷ போஜனம் சாப்பிட வேண்டும். உறவினர்கள் முகர்ந்து பார்த்தாலே போதும்.
பித்ருக்களை ஆவாஹனம் செய்து விட்டு சாப்பிட சொல்வதால் பித்ருக்கள் தான் சாப்பிடுகிறார்கள். சாஸ்திரிகள் சாப்பிடவில்லை. ஆதலால் அரிசி சாதம் வடித்து பிராமணர்களுக்கு போடலாம். அவர்களும் சாப்பிடலாம். மாம்னார் சிராத்ததில் நீங்களும் பித்ரு சேஷம் சாப்பிட வேண்டும். தகப்ப்னார் சிராத்ததில் முகர்ந்து பார்த்தால் போதும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 11, 2017 14:52:30 GMT 5.5
Grihastha must do oupaasanam daily morning and evening. from their marriage day. you have to pour one hand full of rice in the morning and in the evening with chanting mantras.only in the marriage oupaasana agni. this agni must burn all the twenty four hours on all the days till the death of one life partner. Now a days it is not possible in cities. In remote villages only brahmins can do it. The mantras upto the age of 25 and after the age of 25 are different according to the age. elementary school study---high school studies --and college studies are there. grown up people must do auopasanam and children must do samith aadhaanam.
|
|
|
Post by kgopalan90 on Oct 19, 2017 20:01:38 GMT 5.5
21-10-2017---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .
தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தனது ஸஹோதரன் யமனை தனது
வீட்டிற்கு வரச்சொன்னாள்.. யமனும் தனது ஸஹோதரியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு
நிறைய ஆபரணங்களுடநும், ஜவுளி, சீர்களுடன் யமுனையின் இல்லத்திற்கு சென்றார்.
யமுனையும் தனது கையாலேயே பல விதமான ஆஹாரங்கள் தயார் செய்து யமனை சாப்பிடச்செய்து உபசரித்தாள். யமனும் யமுனைக்கு கொண்டு சென்ற பரிசுகளை தந்தார்.
அந்த திருநாள் தான் யம த்வீதீயை எனப்பெயர் பெற்றது. “”ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம் தாநாதி ச ப்ரதேயாநி பகினீப் யோ விசேஷத:
யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்னுயாத்.
எந்த பெண் தனது ஸஹோதரரை த்வீதீயை அன்று சாப்பாடு முதலியவைகளால் சந்தோஷ படுத்துகிறாளோ அவள் ஒரு போதும் விதவை ஆக மாட்டாள்.
தனது ஸஹோதரி வீட்டிற்கு போக முடியாதவர்கள் தனது ஸஹோதரிக்கு பணம் , பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம்.
உடன் பிறந்த சஹோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா, பெரியப்பா பெண், மாமா பெண் முதலியவர்களை உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.
இதற்கு உபவாசம், பூஜை மந்திரம் இல்லை. இதனால் ஒற்றுமை, அன்பு வளரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வலிமை ஐஸ்வரியம் கிடைக்கும்.
|
|
|
Post by kgopalan90 on Oct 19, 2017 19:23:43 GMT 5.5
ஆகாச தீபம் கடனை போக்கும்: 20-10-2017 முதல் 18-11-2017 முடிய.
கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸ மேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).
சாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில்
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.
20-10-2017 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்
ஸங்கல்பம் செய்துகொண்டு பெரிய , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்திலோ அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்
லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .
எல்லா கடன்களும் அடைப்பீர்கள்.. லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.
எல்லா தினங்களும் முடியாவிட்டாலும் முடிந்த தினங்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .
தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.எட்டு திக்குகளுக்கும் ஒவ்வொரு திரியாக போட வேண்டும்.
ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..
|
|
|
Post by kgopalan90 on Oct 19, 2017 17:44:21 GMT 5.5
கார்த்திகை ஸ்நானம் 20-10-2017 முதல் 18-11-2017 முடிய.
ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாகதினமும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.
இதற்கு கார்த்திகை ஸ்நானம் எனப்பெயர் .இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகி மனதில் சுத்தமான எண்ணங்கள் உன்டாகும். இன வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.
ஸ்நானம் செய்யும் போது கூற வேண்டிய மந்திரம்.
கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராதஸ் ஸ்நானம் ஜநார்தன: ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.
ஸ்நானம் செய்துவிட்டு காய்ந்த ஆடைகள் உடுத்திகொண்டு நெற்றிக்கு இட்டுகொண்டு மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்கிய
ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்துகொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு அர்க்கியம் விடவும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி.
வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதிவன் மம க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தநுஜேந்திர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
நித்ய நைமித்திகே க்ருஷ்ண கார்திகே பாபநாசனே க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ராதயா ஸஹிதோ ஹரே ; ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
அநேன அர்க்கிய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம் எனச்சொல்லி கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய முடியா விட்டலும் முடிந்த நாட்களில் செய்யலாம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 17, 2017 17:22:56 GMT 5.5
தீபாவளி ஸ்நானம் 18-10-2017 இரவு 19-10-2017 விடியற் காலை 4-30 மணி முதல் 6 மணிக்குள் நல்ல எண்ணைய் தேய்த்து கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். முதலில் அபாமார்க்கம் என்னும் நாயுருவி செடியை அபாமார்க்கம் அதோ தும்பீம் ப்ரபுன்னாட மதாபராம் ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
என்றபடி ஸ்நானம் செய்யுமுன்பு நாயுருவி செடியை கையில் எடுத்து கொண்டு அபாமார்க லதே தேவி அபவர்க ப்ரதே சுபே அலக்ஷ்மீம் நாசய மே கேஹே ம்ருத்யும் வாரய வாரய போ ---ஸீதா லோஷ்ட ஸமாயுக்த
ஸ கண்டக தளான்வித ஹர பாபம் அபாமார்க்கம் ப்ராம்யமாணஹ புந;புநஹ என்று சொல்லி நாயுருவி செடி இருக்கும் வலது கையினால் தலையை மூன்று முறை சுற்றி வாசலில் தூக்கி போடவும்.
பிறகு நல்ல எண்ணய் தேய்த்து கொண்டு சுடு தண்ணீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
நெற்றிக்கு இட்டுக்கொண்டு புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி இனிப்புகள் உண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு ஸந்தியா வந்தனம் காயத்திரி ஜபம் செய்து விட்டு யம தர்ப்பணம் செய்யவேண்டும்.
கிழக்கு பக்கம் பார்த்து உட்காரவும். ஆசமனம் செய்யவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம்;
மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத் வாரா ஸ்ரீ் பரமேஸ்வர ப்ரீத் யர்த்தம் ஆஸ்வயுஜ க்ருஷ்ண பக்ஷ சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே. என்று சொல்லி கைகளை துடைத்து க்கொண்டு
பூணல் வலம்.( உபவீதி ) கையில் மஞ்சள் கலந்த அக்ஷதை வைத்து கொண்டு கிழக்கு நோக்கி நுனி விரல்கள் மூலம் ( தேவ தர்ப்பணம் ) ஜலத்தால் அர்க்கியம் விடவும். தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யலாம்.
யமாயதர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாயச,வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாயவை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.
1.யமாயநம:யமம்தர்பயாமி. 2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி 3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி. 4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.
5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி 6.காலாயநம:காலம்தர்பயாமி.
7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி. 8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.
9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி 10.நீலாயநம:நீலம்தர்பயாமி 11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி. 13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி
14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..
தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
யமோ நிஹந்தாபித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி. ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே. ஆசமனம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 16, 2017 23:53:09 GMT 5.5
தந்வந்திரி பூஜை.17-10-2017.
பாற்கடலில் இருந்து தந்வந்திரி அவதரித்த நாள். ஆதலால் இன்று தந்வந்திரி பகவானுக்கு 16 உபசார பூஜை செய்வதால் வியாதிகள் குணமாகும். வியாதிகள் வராமலும் இருக்கும். ஆயுர்வேத மருத்துவ
ம் இயற்றியவர்.
|
|
|
Post by kgopalan90 on Oct 16, 2017 23:22:27 GMT 5.5
யம தீபம்:-- 17-10-2017 அன்று
ஆஸ்விநஸ்யா சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி. ----சிதே பக்ஷம்=க்ருஷ்ண பக்ஷம். ஆஸ்விநம்= சாந்திர மான மாதம்.
தீபாவளிக்கு முதல் நாள் வரும் த்ரயோதசி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வீட்டு வாசலில் அல்லது கோவிலில் மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் வசிக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவரும் தனி தனியே ஒவ்வொரு மண் அகல் விளக்கு அவரவர்களே ஏற்றி ஸ்லோகம் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்கின உப சாந்தயே. ப்ராணா யாமம்.
மமோ பாத்த ஸமஸ்த துருதய க்ஷயத் வார ஸ்ரீ் பர மேஸ்வர ப்ரீத்யர் த்தம் மம ஸர்வாரிஷ்ட நிவிருத்தி பூர்வகம் அப ம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே.
ஒவ்வொருவரும் அவரவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை நோக்கி ம்ருத்யாநா பாச தண்டாப்ப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தானாத் ஸூர்யஜ; ப்ரீயதாம் மம. என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்.
ஆக்ஸிடெண்ட் -வியாதி இவற்றால் அகால மரணம் ஏற்படாமல் பாது காக்கும். கந்த புரணம்..இம்மாதிரி இயம்புகிறது.
|
|
|
Post by kgopalan90 on Oct 16, 2017 22:17:17 GMT 5.5
கோவத்ச துவாதசி;_--
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்ய வேண்டும்.
ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி. 16-10-2017. இன்று பசும்பால்; பசும் தயிர். பசு மோர், பசு வெண்ணை, பசு நெய் சாப்பிட கூடாது.
பசும் பால் இன்று கறக்காமல் கன்றுக்குட்டி குடிப்பதற்கே விட்டு விட வேண்டும்.நிர்ணய சிந்து 147. இம்மாதிரி பகர்கிறது.
அகத்தி கீரை, புல் பசு மாட்டிற்கு தர வேண்டும். இந்த ஸ்லோகம் சொல்லி கொடுக்கவும்.
ஸுரபி த்வம் ஜகன் மாதர் தேவி விஷ்ணு பதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் கிரஸ:.
இன்று பசு மாட்டை நமஸ்காரமாவது செய்ய வேண்டும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டை வணங்கவும். ஸர்வ தேவ மயே தேவி; ஸர்வ தேவைஸ்ச ஸத் க்ருதா மாதர் மமா அபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி
.
பாற் கடலை கடைந்த போது காமதேனு வந்தது. காமதேனுவின் மகள் நந்தினி ஆவாள். வட இந்தியாவில் தீபாவளியின் முதல் நாளாக இதை தான் கொண்டாடு கிறார்கள்.
|
|
|
Post by kgopalan90 on Oct 16, 2017 17:27:25 GMT 5.5
கார்த்திகை சுக்ல பக்ஷ த்ருதியை திதி த்ரீலோசன ஜீரக கெளரி வ்ரதம். 22-10-2017.சிவனின் இடபாகம் பாதி பெற்ற தேவிக்கும் மூன்று கண்கள் உண்டு. உமா மஹேஸ்வரியை மூன்று கண்களுடன் படமும் வரையலாம். இல்லாவிட்டால் அரிசி மாவினால் மூன்று கண் உள்ளவளாககோலம் போட்டும். 16 உபசார பூஜை செய்தாலும் போதும். சாதத்தில் சீரக பொடி போட்டு உப்பு போட்டு நிவேதன ம் செய்யவும்.சீர்+ அகம் ( உடலை சீராக வைக்கும் சக்தி வாய்ந்தது) இந்த சீரக பொடியை சுடு தண்நீரில் கரைத்து நிவேதனம் செய்வதால் கண் பார்வை கோளாறுகளும் விழி வியாதிகளும் விலகும்.
|
|
|
Post by kgopalan90 on Oct 16, 2017 17:24:10 GMT 5.5
ஆஸ்வயுஜ மாதம் கிருஷ்ண பக்ஷ அமாவாசை திதி.(தீபாவளி). 19-10-17. கேதார கெளரி வ்ரதம். கேதாரம் என்றால் விவசாயம் செய்யும் இடம் என்றும் அர்த்தம்.வயலின் நடுவில் அல்லது அப்போது விளைந்த பயிர்களின் நடுவில் உமா மஹேஸ்வரர் படம் வைத்து 16 உபசார பூஜை செய்வதினால். விவசாயம் அமோகமாக லாபம் ஈட்டி தரும்.. ஸத்தான பொருட்கள் வயலிலுருந்து நாம் பெறுகிறோம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 3, 2017 21:16:26 GMT 5.5
சந்திரோதய கௌரி விரதம்:-
7-10-2017 அன்று சந்திர உதயம் மாலை 7-30 மணிக்கு. இதற்கு மேல் சந்திர கிரணம் விழும் இடத்தில் உமா மஹேஸ்வரரை 16 உபசார பூஜை செய்தால் சீக்கிரமாக தீர்மானம் எடுக்க முடியும்.மனக்குழப்பம் விலகும். மன நிலை பாதிக்க பட்டவர்களுக்கு குணமாகும். ஆஸ்விந மாதம் க்ருஷ்ணபட்ச த்விதியை திதியில் இதை செய்ய வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Sept 28, 2017 10:01:09 GMT 5.5
வாஹனத்தில்செல்லும்போது ஆபத்து வராமல் காக்க நீங்கள் செய்ய வேண்டியது.ஆஸ்வயுஜ மாத சுக்ல பக்ஷ தஸமி திதி; 30-09-2017 .தசரத லலித கெளரி வ்ரதம். லலிதா என்றால் அழகானவள் என அர்த்தம். தேர் போல் கோலம் போட்டு அதன் மேல் அம்மனை வைத்து பதினாறு உபசாரங்களினால் பூஜிக்க வேண்டும். வாகனங்கள் வாங்க வும்முடியும்.
|
|