பிரதோஷத் துதி: ஆற்றுச் சடையனுக்கோர் அறுசுவை வெண்பாச் சரம்
Aug 27, 2015 18:03:34 GMT 5.5
kahanam likes this
Post by saidevo on Aug 27, 2015 18:03:34 GMT 5.5
பிரதோஷத் துதி:
ஆற்றுச் சடையனுக்கோர் அறுசுவை வெண்பாச் சரம்
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)
கைப்பு (கசப்பு)
கசப்பே மருந்தொன்றின் கண்ணுறும் தன்மை
பசப்பிய பாற்கடல் பாம்பின் - விசத்தை
விருந்தென்று கொண்டே மிடறினில் தாங்கும்
மருந்தீசா என்னுள்ளே வா! ... 1
பசப்பும் பகட்டும் பலவாய் இளைமைப்
பசிதீர வாழ்ந்த பலனில் - கசக்குதே
இன்று சுயதருமம் ஈசனே நீயெனக்கு
நின்றருள் செய்வதெவண் நேர்? ... 2
இனிப்பு
இடங்கொளும் பெண்ணால் இனிப்போ? அதுவும்
அடியார் துதிதரும் அன்போ? - நடமாடும்
ஈசநின் உண்மை இயல்பாம் இனிப்பென்று
பேசினால் அண்டுமோ பேய்? ... 3
இனித்திடும் வாழ்வென்றே இன்றுநாள் செல்லப்
பனித்தசடை பால்நீறு பார்த்தே - மனித்தப்
பிறவியிதில் உன்னை மறவாதே வாழும்
உறவுதரக் கேட்டேன் உமை. ... 4
புளிப்பு
புளித்தேதான் போகாதோ புண்ணியா? என்றும்
தளராதே நீயாடும் தாண்டவம்? - இன்னும்
பிறப்பிலியாய் ஞாலமெலாம் பேணியே வாழ்வில்
இறப்பும் தருவது என்று? ... 5
புளித்த வினைமாவு பொங்கியெழும் வாழ்வில்
அளித்திடும் தாண்டவனாய் ஆடும் - களிற்றுரியன்
என்வினை போக்கி எனக்கருள்நீ செய்யவே
என்னசெய்ய வேண்டும்நான் இன்று? ... 6
உவர்ப்பு (உப்பு)
உப்பிய நஞ்சை உவர்த்தலின்றிக் கண்டத்தில்
தப்பாது கொண்ட தவமணியே! - உப்பக்கம்
செஞ்சடை வேணியுடன் சேர்ந்தாடக் கண்டுமகிழ்
நெஞ்சத்தில் நேச நெகிழ்ப்பு. ... 7
[உவர்த்தல் = அருவருத்தல், வெறுத்தல்;
உப்பக்கம் = முதுகு; வேணி = பின்னல்]
பிறப்பாம் உவரியிது பெய்வினை மாரி
உறவை விளைக்கும் உவர்மண் - அறுப்பதில்
நெல்லில் மிகுவது நெற்பதரே என்றாலும்
அல்லல் களைந்தே அருள். ... 8
[உவரி = உப்புக் கடல்; மாரி = மழை; ]
துவர்ப்பு
மாதுளையச் செய்தே மறுபிறப் பித்தனை
யாதும் விளையாட்டே யாண்டுமே - வேதன்நீ
தாணுவாய்த் தாழத் தழைப்பித்த சக்தியைப்
பேணுதலன் றோவுன் புகழ்? ... 9
[மாதுளையச் செய்தே = மாதுவாம் உமையை வருத்தியே;
தாணு = பட்டமரம்]
மாதுளை வாழைக்காய் மாவடு மஞ்சளென்றே
தோதாய் உணவில் துவர்ப்பெனவே - ஏதுசுவை
ஆயினும் உன்னருள், ஆதியே என்வாழ்வில்
தோயவே செய்வாய் துவர்ப்பு. ... 10
கார்ப்பு (காரம்)
ஆகாரம் நஞ்சாம் அலங்கார ஓங்காரன்
சீகாரம் பாடவெழும் சீவனுரு - சேகாரம்
என்பும் அரவும் எருதும் எனவேநீ
அன்புடன் ஆளும் அரன். ... 11
[ஆகாரம் = உடம்பு; சீகாரம் = பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் பாடிய பண்;
சேகாரம் = சேகரித்த பொருள்]
காரம் பலவகையாய்க் காணவரும் வாழ்விதன்
சாரம் எதுவெனில் சக்கையே - வேரில்
விளைவது யாதெனினும் வேதியனுன் பேரே
உளம்வரக் கேட்டேன் உமை. ... 12
கடைக்காப்பு
அறுசுவை உன்னிடம் ஆள்வதாய் நானும்
பொறுப்பில்லா தேபாப் புனைந்தேன் - சிறுவன்யான்
என்சுவை உன்னிடம் ஏற்றிக்கண் டாலும்நீ
என்றும் தெவிட்டா இனிப்பு. ... 13
--ரமணி, 27/08/2015, கலி.10/05/5116
*****
ஆற்றுச் சடையனுக்கோர் அறுசுவை வெண்பாச் சரம்
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)
கைப்பு (கசப்பு)
கசப்பே மருந்தொன்றின் கண்ணுறும் தன்மை
பசப்பிய பாற்கடல் பாம்பின் - விசத்தை
விருந்தென்று கொண்டே மிடறினில் தாங்கும்
மருந்தீசா என்னுள்ளே வா! ... 1
பசப்பும் பகட்டும் பலவாய் இளைமைப்
பசிதீர வாழ்ந்த பலனில் - கசக்குதே
இன்று சுயதருமம் ஈசனே நீயெனக்கு
நின்றருள் செய்வதெவண் நேர்? ... 2
இனிப்பு
இடங்கொளும் பெண்ணால் இனிப்போ? அதுவும்
அடியார் துதிதரும் அன்போ? - நடமாடும்
ஈசநின் உண்மை இயல்பாம் இனிப்பென்று
பேசினால் அண்டுமோ பேய்? ... 3
இனித்திடும் வாழ்வென்றே இன்றுநாள் செல்லப்
பனித்தசடை பால்நீறு பார்த்தே - மனித்தப்
பிறவியிதில் உன்னை மறவாதே வாழும்
உறவுதரக் கேட்டேன் உமை. ... 4
புளிப்பு
புளித்தேதான் போகாதோ புண்ணியா? என்றும்
தளராதே நீயாடும் தாண்டவம்? - இன்னும்
பிறப்பிலியாய் ஞாலமெலாம் பேணியே வாழ்வில்
இறப்பும் தருவது என்று? ... 5
புளித்த வினைமாவு பொங்கியெழும் வாழ்வில்
அளித்திடும் தாண்டவனாய் ஆடும் - களிற்றுரியன்
என்வினை போக்கி எனக்கருள்நீ செய்யவே
என்னசெய்ய வேண்டும்நான் இன்று? ... 6
உவர்ப்பு (உப்பு)
உப்பிய நஞ்சை உவர்த்தலின்றிக் கண்டத்தில்
தப்பாது கொண்ட தவமணியே! - உப்பக்கம்
செஞ்சடை வேணியுடன் சேர்ந்தாடக் கண்டுமகிழ்
நெஞ்சத்தில் நேச நெகிழ்ப்பு. ... 7
[உவர்த்தல் = அருவருத்தல், வெறுத்தல்;
உப்பக்கம் = முதுகு; வேணி = பின்னல்]
பிறப்பாம் உவரியிது பெய்வினை மாரி
உறவை விளைக்கும் உவர்மண் - அறுப்பதில்
நெல்லில் மிகுவது நெற்பதரே என்றாலும்
அல்லல் களைந்தே அருள். ... 8
[உவரி = உப்புக் கடல்; மாரி = மழை; ]
துவர்ப்பு
மாதுளையச் செய்தே மறுபிறப் பித்தனை
யாதும் விளையாட்டே யாண்டுமே - வேதன்நீ
தாணுவாய்த் தாழத் தழைப்பித்த சக்தியைப்
பேணுதலன் றோவுன் புகழ்? ... 9
[மாதுளையச் செய்தே = மாதுவாம் உமையை வருத்தியே;
தாணு = பட்டமரம்]
மாதுளை வாழைக்காய் மாவடு மஞ்சளென்றே
தோதாய் உணவில் துவர்ப்பெனவே - ஏதுசுவை
ஆயினும் உன்னருள், ஆதியே என்வாழ்வில்
தோயவே செய்வாய் துவர்ப்பு. ... 10
கார்ப்பு (காரம்)
ஆகாரம் நஞ்சாம் அலங்கார ஓங்காரன்
சீகாரம் பாடவெழும் சீவனுரு - சேகாரம்
என்பும் அரவும் எருதும் எனவேநீ
அன்புடன் ஆளும் அரன். ... 11
[ஆகாரம் = உடம்பு; சீகாரம் = பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் பாடிய பண்;
சேகாரம் = சேகரித்த பொருள்]
காரம் பலவகையாய்க் காணவரும் வாழ்விதன்
சாரம் எதுவெனில் சக்கையே - வேரில்
விளைவது யாதெனினும் வேதியனுன் பேரே
உளம்வரக் கேட்டேன் உமை. ... 12
கடைக்காப்பு
அறுசுவை உன்னிடம் ஆள்வதாய் நானும்
பொறுப்பில்லா தேபாப் புனைந்தேன் - சிறுவன்யான்
என்சுவை உன்னிடம் ஏற்றிக்கண் டாலும்நீ
என்றும் தெவிட்டா இனிப்பு. ... 13
--ரமணி, 27/08/2015, கலி.10/05/5116
*****