Post by radha on Aug 25, 2015 3:05:35 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடு மாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும், காலையும் அட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக சௌக்கியமாக ஈச்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும், பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மனுஷ்ய ஜன்மா எடுத்தே பிரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்புப் பண்ணியேயாக வேண்டும். பொதுவாக இப்போது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான, அபக்வமான ஸ்திதியில் அவர்கள் பெரும்பாலார் நீண்ட காலத்துக்கு சரீரத்தால் உழைத்து உழைத்தே சித்தசுத்தி பெற வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும், பேனா வேலைக்காரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனைப் போல அசந்து தூக்கம் வருகிறதோ? தூக்கம் வராவிட்டால் மனஸ் எங்கேயாவது திரிந்துகொண்டே அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. நன்றாக உழைத்துவிட்டு வந்தவன் இப்படியெல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல் நன்றாகத் தூங்குகிறான். அதனால் தேஹ பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. தேஹத்தையும் புத்தியையும் "கனெக்ட்' பண்ணுகிற ணஞுணூதிணிதண் ண்தூண்tஞுட்-ஐ அவன் பாழ் பண்ணிக் கொள்கிறதில்லை.
சரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்று விடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வரபரமான விஷயங்களிலும் "டச்' வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக "டச்' பண்ணினால் மட்டுமே போதாது, "டச்' பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக் கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபி விருத்தியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் "டச்'சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே. அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, "ப்ளான்' இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற் தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், "ஒரு கையால் ஈச்வரனைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களை பண்ணு' என்கிறார்கள்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடு மாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும், காலையும் அட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக சௌக்கியமாக ஈச்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும், பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மனுஷ்ய ஜன்மா எடுத்தே பிரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்புப் பண்ணியேயாக வேண்டும். பொதுவாக இப்போது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான, அபக்வமான ஸ்திதியில் அவர்கள் பெரும்பாலார் நீண்ட காலத்துக்கு சரீரத்தால் உழைத்து உழைத்தே சித்தசுத்தி பெற வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும், பேனா வேலைக்காரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனைப் போல அசந்து தூக்கம் வருகிறதோ? தூக்கம் வராவிட்டால் மனஸ் எங்கேயாவது திரிந்துகொண்டே அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. நன்றாக உழைத்துவிட்டு வந்தவன் இப்படியெல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல் நன்றாகத் தூங்குகிறான். அதனால் தேஹ பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. தேஹத்தையும் புத்தியையும் "கனெக்ட்' பண்ணுகிற ணஞுணூதிணிதண் ண்தூண்tஞுட்-ஐ அவன் பாழ் பண்ணிக் கொள்கிறதில்லை.
சரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்று விடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வரபரமான விஷயங்களிலும் "டச்' வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக "டச்' பண்ணினால் மட்டுமே போதாது, "டச்' பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக் கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபி விருத்தியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் "டச்'சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே. அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, "ப்ளான்' இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற் தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், "ஒரு கையால் ஈச்வரனைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களை பண்ணு' என்கிறார்கள்.
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM