|
Post by svishyn on Aug 1, 2015 12:28:06 GMT 5.5
குறுநகை மின்னக் கவர்ந்திடும் ஒரு முகம்
அருந்தவக் கோலம் ஒளிர்ந்திடும் ஒரு முகம் (1)
பெருமருள் பொங்கிடக் பரிந்திடும் ஒரு முகம்
கருணையின் கடலாய்க் கனிந்திடும் ஒரு முகம் (2)
உறுவினை தீர்க்கவே விரைந்திடும் ஒரு முகம்
வரும் அடியார்க்கெலாம் வழங்கிடும் ஒரு முகம் (3)
தருவதற்கென்றே தோன்றிய ஒரு முகம்
இருபதம் துணையெனத் தந்திடும் ஒரு முகம் (4)
ஒருகை தூக்கி வாழ்த்திடும் ஒரு முகம்
இருகை கூப்பி இருந்திடும் ஒரு முகம் (5)
நறுமலர் அரியணை அமர்ந்திடும் ஒரு முகம்
திருமகள் அவளெனத் திகழ்ந்திடும் ஒரு முகம் (6)
அறுமுகன் அவன்வேல் தாங்கிடும் ஒரு முகம்
மறுவறு துளபமே சூடிடும் ஒரு முகம் (7)
எருதது ஏறிடும் ஏறாய் ஒரு முகம்
உறுதுணை 'நான்' என வந்திடும் ஒரு முகம் (8)
சிறுவரும் அண்டிடும் எளியனாய் ஒரு முகம்
செறுக்குடன் சென்றிடின், கடிந்திடும் ஒரு முகம் (9)
உறவென அனைவரும் உற்றிடும் ஒரு முகம்
ஆறுதல் தந்திங்கு அணைத்திடும் ஒரு முகம் (10)
சறுக்கிடும் பொழுதெலாம் காத்திடும் ஒரு முகம்
தேறும்படி இங்குக் காட்டிடும் ஒரு முகம் (11)
தெருவெலாம் நடந்துதேய்ப் பாதமாய் ஒரு முகம்
பாரும் போற்றும் சீலனாய் ஒரு முகம் (12)
நீறு பூசியே, விளங்கிடும் ஒரு முகம்
நெருப்பென ஞானம் அணியுறும் ஒரு முகம் (13)
நீரும் அருந்தாமல் உபவாசம் புரி முகம்
கோரும் அவை அத்தனையும் அப்படியே கொடுக்கும் முகம் (14)
சீறும் பேறும் தந்திடும் ஒரு முகம்
நேரும் கதியெலாம் 'நான்' எனச்சொல்லும் முகம் (15)
மாறும் இம்முகங்களுண்டு, மாறாத கருணையுண்டு
வேறு கதியுமுண்டோ நானிலத்தில் எங்களுக்கும்?
|
|
|
Post by kahanam on Aug 6, 2015 10:26:16 GMT 5.5
"வேறு கதியுமுண்டோ நானிலத்தில் எங்களுக்கும்?" Hence Maha Periyava has multiple faces like Lord Shanmuga to Protect us! May Maha Periyava always shower His Blessings on all of us and may we follow His UpadesengaL at least to some extent! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|