|
Post by svishyn on Aug 1, 2015 11:41:17 GMT 5.5
ராகம் : கானடா
பல்லவி
உனைக் காண வந்தேன் - இங்கு
உனைக் காண வந்தேன்
காஞ்சி மா நகர் தனில்
உன்னிடம் தேடி - இங்கு (உனைக் காண)
அனுபல்லவி (துரிதம்)
பேசிச் சிரித்து அருள் செய்திடும்
மூர்த்தியைக் காணேன் இங்கு காணேன்
மோனமாக முகமலர்ந்தருள் புரிந்திடும்
ஸிலாமூர்த்தியைக் கண்டேன் - இங்கே (உனைக் காண)
சரணம் (துரிதம்)
"வா"என்றழைத்து வாட்டம் போக்கிடும்
வார்த்தை ஒன்று நீ சொல்லிடக் காணேன்
வார்த்தை ஏதுமின்றி சன்னிதானமதில்
வருத்தமத்தனையும் தீர்ந்திடக் கண்டேன் (உனைக் காண)
என்ன வேண்டுமென்று கேட்டு நீ அழைத்து
வேண்டும் வரம் ஒன்றும் தந்திடக் காணேன்
வேண்டும் இது என்று கேட்டிடும் முன்னமே
தந்துவிடும் உன் குறு நகை கண்டேன் (உனை காண)
|
|
|
Post by kahanam on Aug 6, 2015 10:42:06 GMT 5.5
May Maha Periyava always Give His Dharshan to us! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by madambakkamshanks on Sept 19, 2015 15:25:52 GMT 5.5
Simply soooperb... Maha periyava charanam.... HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA...
|
|