Post by radha on Jul 28, 2015 3:14:47 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
* உலக உயிர்களின் தாயாக இருக்கும் பசுவை பாதுகாக்க வேண்டியது அனைவரின் அடிப்படை கடமை.
* பசுக்கள் பாதுகாக்கப்பட்டால் உலகமே நலம் பெறும் என்பதால் தான் கோபூஜை கோயில்களில் நடத்தப்படுகிறது.
* தனக்குரிய பாலை மற்ற உயிர்களுக்கும் வழங்குவது பசுவுக்கு மட்டுமே உரிய சிறப்பான குணம்.
* திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் 'ஆனினம் வாழ்க' என்று பசுக் கூட்டத்தை வாழ்த்துகிறார்.
* பசுக்களுக்கு புல் இடுவதை 'கோக்ராஸம்' என்னும் சிறப்பான தர்மமாக சாஸ்திரம் கூறுகிறது.
முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்யவேண்டிய தர்மங்களை எண்-நான்கு- அதாவது முப்பத்திரண்டு – அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில் அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில் சொறிந்து கொண்டு தினவு தீர்ந்தன. இப்படிச் சின்ன விஷயங்களைக் கூடப் பரம தர்மமாக நினைத்து கோவுக்குச் செய்த தேசத்தில் நாம் அதை எலும்பும் கூடுமாக்குகிறோம், வதையாவதற்கு விடுகிறோம் என்றால் அது நமக்குப் பெரிய அபக்யாதி.
காஞ்சிப்பெரியவர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
* உலக உயிர்களின் தாயாக இருக்கும் பசுவை பாதுகாக்க வேண்டியது அனைவரின் அடிப்படை கடமை.
* பசுக்கள் பாதுகாக்கப்பட்டால் உலகமே நலம் பெறும் என்பதால் தான் கோபூஜை கோயில்களில் நடத்தப்படுகிறது.
* தனக்குரிய பாலை மற்ற உயிர்களுக்கும் வழங்குவது பசுவுக்கு மட்டுமே உரிய சிறப்பான குணம்.
* திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் 'ஆனினம் வாழ்க' என்று பசுக் கூட்டத்தை வாழ்த்துகிறார்.
* பசுக்களுக்கு புல் இடுவதை 'கோக்ராஸம்' என்னும் சிறப்பான தர்மமாக சாஸ்திரம் கூறுகிறது.
முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்யவேண்டிய தர்மங்களை எண்-நான்கு- அதாவது முப்பத்திரண்டு – அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில் அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில் சொறிந்து கொண்டு தினவு தீர்ந்தன. இப்படிச் சின்ன விஷயங்களைக் கூடப் பரம தர்மமாக நினைத்து கோவுக்குச் செய்த தேசத்தில் நாம் அதை எலும்பும் கூடுமாக்குகிறோம், வதையாவதற்கு விடுகிறோம் என்றால் அது நமக்குப் பெரிய அபக்யாதி.
காஞ்சிப்பெரியவர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM