Post by radha on Jul 19, 2015 2:42:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA, RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி, பகவான் தனக்குப் பதியாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். கௌரீ பூஜை பண்ணி அந்தப் பாக்கியத்தை அடைந்தாள். சரஸ்வதி, லட்சுமி பூஜைகளைப் பண்ணக் கூடாது?
அம்பிகை பூஜைதான் பண்ணினாள். அதன் காரணம் என்ன? கௌரீ பூஜையை ருக்மணி ஏன் பண்ண வேண்டும்? திருமணமாகாத கன்னிப் பெண்கள் திருமணத்திற்குப் பின்பு பாதிவிரத்தியத்தோடு இருக்க வேண்டும்.
பதி எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் சித்தம் (மனம்) திடமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு யார் பதிவிரதையோ, யார் கற்பிற் சிறந்தவளோ அந்த அம்பிகையை ஆராதனம் செய்தால் நல்லது.
உத்திரபிரதேசத்திலும் ஆந்திரப் பிரதேசத்திலும் கன்னிப் பெண்கள் கௌரீ பூஜை செய்யும் சம்பிரதாயம் (வழக்கம்) இருக்கிறது. அதை அனுசரித்துப் பாகவதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
அம்பிகை பதிவிரத்தியம் இருப்பதற்கு அடையாளம் இருக்கிறதா? இருக்கிறது. தாட்சாயணியாக அவதரித்தபொழுது தன் பதியை நிந்தித்த தட்சனுக்கு மகளாக வந்த அவ்வுடல் கூடாதென்று தியாகம் பணணிவிட்டுப் பர்வதராஜனுக்கு மகளாக ஆனாள். இன்று வெள்ளிக்கிழமை (இவ்வுரை நிகழ்த்தப்பட்ட 18.11.1932 ஒரு வெள்ளிக்கிழமையாகும்). ஆகையால் நேற்றுச் சொன்ன விவாஹத்தோடு அம்பிகை சம்பந்தமான விஷயத்தை சொல்ல வேண்டுமென்று எண்ணினேன்.
புருஷனைப் பற்றி நிந்தனையைக் கேட்ட காது இருக்கக்கூடாது என்று அந்தக் காதையுடைய உடலே இருக்கக்கூடாது என்று உடலைத் தியாகம் பண்ணினது மட்டும் அம்பாளுடைய பதிவிரத்திய அடையாளமன்று. மற்ற அடையாளங்களும் இருக்கின்றன.
லட்சுமிக்கு பதிவிரத்தியம் இருப்பது ஒரு சிறப்பு இல்லை. அலங்காரங்கள் முதலியவைகளெல்லாம் மகாவிஷ்ணுவிடத்தில் இக்கின்றன. அப்படிப்பட்ட புருஷனிடத்தில் பதிவிரத்தியமுடையவளாக இருப்பது பிரமாதம் அல்ல.
அம்பிகையுடைய கணவர் எப்படிப்பட்டவர்? மயானத்தில் வசிப்பவர், பாம்பு, சடை, எலும்பு முதலியவைகளை வைத்துக் கொண்டிருப்பவர். அகோரமான உருவம் உடையவர்.
"யா தே ருத்ர சிவா தனூர, கோராபாபகாசினீ!'
என்றும்
அகோரப்யோஅத கோரேப்யோ கோரகோரதரேப்யா:
என்றும் ஸ்ரீ ருத்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மகா கோரமான உருவினராக அவர் இருக்கிறார். இப்படிப்பட்டவரிடத்தில் பதிவிரத்தியத்தை அநுஷ்டித்து, அந்தப் புருஷனைப் பற்றி நிந்தனைச் சொல்லைக் கேட்டதற்காக உடலைத் தியாகம் பண்ணிவிட்டு, மறுபடியும் அந்தப் புருஷனையே அடைய வேண்டுமென்று தவம் செய்து அடைந்த ஒரு பத்தினியை ஆராதித்தால் எப்பொழுதும் பதிவிரத்தியம் நிலையாக இருக்கும் அனுக்ரஹம் கிடைக்குமல்லவா?
ஆண்களுக்கு ஆசார்யாரிடத்தில் நிலையான பக்தி இருக்க வேண்டும்.
"ஓங்கார பங்சரசுகீமுபனிஸத்ருத் யானகேலிக லகண்டீம்!
ஆகமவிபிநமயூரீமார்தா மன்தவிர் பாவயே கௌரீம்!!
தயான தீர்தநயனாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்!'
என்று காளிதாசர் அம்பிகையை தோத்திரம் செய்திருக்கிறார். அதில் ஆச்சாரியா, உண்மையுருவம் சாட்சாத் அம்பிகையே என்று சொல்லப்பட்டிருக்கிறது.
"அவதூதட கடிதசூலீம் தாடிததாளீ பலாசதாடங்காம்!
வீணாவாதனவேலாகம்பிதசிரஸம் நமாமி மாதங்கீம்!!'
என்பது மற்றொரு சுலோகம். "தாளீபலாசம்' என்பது பனையோலை. அதுதான் அம்பாளுக்குத் தாடங்கமாக இருக்கிறது. அதனால் (தான்) அம்பிகை பூஜையில் கருகுமணி பச்சோலை கொடுக்கிறார்கள்.
கல்யாணம் செய்து கொள்ளும் பெண்கள் என்றும் மங்களகரமாக இருக்க, சர்வ மங்களையாகிய அம்பிகையைப் பூஜை செய்ய வேறொரு பொருளை எடுத்துத் தர வேண்டும் என்பது இல்லை.
அம்பிகை வழிபாட்டால் பதிபக்தியம் குரு பக்தியும் உண்டாகும். காளிதாசர் வாக்கில் அம்பிகையின் தாடங்கத்தை (தோடு போன்ற காதணி) பற்றிக் கூறியிருப்பதைச் சொன்னேன். அம்பிகையுடைய தாடங்கத்தில் நம்முடைய ஸ்ரீஆச்சார்யர்களாகிய பகவத்பாதாளுக்கு ப்ரீதி (பிரியம்) அதிகம். ஜம்புகேசுவரத்தில் திருவானைக்கோயிலில் உள்ள அகிலாண்டேசுவரியினுடைய சக்தியைக் கலியுகத்தில் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அதைச் சாந்தப்படுத்துவதற்காக அம்பிகைக்குத் தாடங்கத்தை அணிவித்தார்.
அம்பிகையுடைய சக்தி மிகவும் அதிகம். அவளுடைய கோயிலின் ஒன்பதாவது வாயிலுக்கு அணிமாதி அஷ்ட (மிக நுட்பமான உருவம் கொண்ட எட்டு) சித்திகள் காவல். அந்த வாயிலுக்கு வெளியில் வந்து நின்ற தேவர்கள் கூட எண்வகை யோக சித்திகளை அடைக்கிறார்கள். இதை ஸ்ரீ ஆச்சாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
"புராராதேரந்த: புரமஸி தத்ஸ்வச்வரணயோ:
ஸபர்யாமர்யா தா தரளகரணாநாம சுலபா!
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்விமதுளாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி பிரணிமாத்யாபிரமரா!!'
(ஸெளந்தர்யலஹரீ -95)
அம்பாளுக்குரிய சக்ரம் ஸ்ரீசக்ரம். அது மஹாமேரு உருவிலானது. அதில் பல ஆவரணங்கள் உண்டு. ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய தேவதைகள் பல இருக்கிறார்கள். மையப்புள்ளி ஸ்தானம் பராசக்தி. எல்லாவற்றிற்கும் மேலானது பராசக்தி வடிவம். அதற்குக் கீழே இருப்பவைகளெல்லாம் சிறிய சக்தி வடிவங்கள். ஆவரண சக்தி அம்பிகை இருக்கும் சிந்தாமணி இல்லத்தில் ஒன்பது ஆவரணங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று கோடி கோடி யோஜனை தூரத்தில் இருக்கிறது. கடைசி வாயிற்படி அணிமாதிஅஷ்டசித்திகளுக்கு ஏற்பட்டது.
அந்த வாயிற்படிக்கும் அம்பிகை இருக்கும் இடத்திற்கும் எவ்வளவோ தூரம் இருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியில் இருக்கும் பொழுதே அணிமாதிகளின் அநுக்ரஹத்தால் பெரும் செல்வத்தை அடைகிறார்கள்.
இந்திராதி தேவதைகள் ஒன்பதாவது வாயிற்படியில் இருந்து கொண்டே எட்டுப் பெரும் சித்திகளின் சக்திகளின் அநுக்ரஹம் பெற்றுப் போகிறார்கள். இந்திரன் முதலிய தேவதைகளுக்குப் பரதேவதையை அணுகத்தக்க புலனடக்கம் இல்லை. சனகாதி யோகிகளுக்கே கிடையாது. அந்தப் புரத்துக்குள் போவதற்கு எவ்வளவு புலனடக்கம் வேண்டும்?
அப்படிப்பட்ட சக்தியையுடைய அம்பிகையின் முழுமையமான வல்லமை ஏற்பட்டால் கலியுகத்தில் தாங்க முடியாதென்று எண்ணி திருவானைக்கோயிலுக்கு ஸ்ரீ சங்கராச்சாரியர்கள் போகும்போது அம்பிகையைப் பிரார்த்தித்தார்கள். சாந்தமான வடிவமாக இருக்க வேண்டுமென்று சக்தியை ஈர்த்து, ரத்தினமயமான ஸ்ரீசக்ரம், பஞ்சாட்சர (திரு ஐந்தெழுத்து) யந்திரம் இரண்டையும் சேர்த்து இரண்டு சக்ரம் பண்ணி அம்பாள் காதுகளில் அணிவித்தார்.
அந்தத் தாடங்கத்தைப் பற்றி ஸ்ரீ சங்கராச்சாரியர்கள், "உன்னுடைய தாடங்கத்தின் மகிமையால்தான் பரமேஸ்வரனுக்கு இவ்வளவு சிறப்பு ஏற்பட்டிருக்கிறது' என்று ஸெளந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்.
"ஸுதாமப்யா ஸ்வாத்ய ப்ரதிபயஜ ராம்ருத்யு ஹரிணீம்,
விபத்யந்தே விஸ்வே விதிச தமகாத்யா திவிஷத:!
கராளம் யத் க்ஷவலம் கபலிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா!!'
(ஸெளந்தர்ய லஹரி - 28)
தேவதைகள் அமிருதபானம் பண்ணினார்கள். அமிருதம் கிழத்தன்மை, மரணங்கள் இல்லாமல் பண்ணும். அவர்கள் கூடப் பிரளயக் காலத்தில் இல்லாமல் போய்விடுகிறார்கள். பயம் அடைகிறார்கள்.
பரமேஸ்வரன் எதை உட்கொண்டார்? அந்த ஆகாரத்தை நினைத்தாலே மரண பயம் உண்டாகிறது! அப்படிப்பட்ட ஆலகால விஷத்தை அப்படியே எடுத்துச் சாப்பிட்டுவிட்டார். மிச்சம் வைக்காமல் சாப்பிட்டார். அப்படிச் சாப்பிட்டும் அவக்குக் காலக் கணக்கே இல்லை. அவர் காலகாலமாக இருக்கிறார். காலனை உதைக்கிறார். விஷத்தைச் சாப்பிட்டுக் கூட இப்படி இருக்கிறார்.
மற்றவர்களோ அமிருதத்தைச் சாப்பிட்டுக் கூட மரணமடைகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? எது இதற்கு மூலம்?
"உன்னுடைய தாடங்க மகிமைதான் காரணம்?' என்று அம்பிகையைப் பார்த்து ஸ்ரீசங்கராச்சாரியர்கள் சொல்லுகிறார்கள். அந்தத் தாடங்கமானது அம்பிகையின் காதை விட்டுக் கீழே இறங்காமல் இருக்க வேண்டும். அவர் எதைச் சாப்பிட்டாலும் ஒன்றும் பண்ணாவிட்டால் அது அப்படி இருக்கும். அதனால் தாடங்கம்தான் காரணம் என்று சொல்கிறார். ஸ்ரீ ஆச்சார்யார்களுடைய வாக்காகிய இது சுருதி (வேதம்). ஸ்மிருத்திக்கு சுருதி மூலம் இருக்கும். ஈசுவரனாகச் சொன்னது சுருதி. அதைப் பின்பற்றிப் பெரிய மகான்கள் சொன்னது ஸ்மிருதி.
"யா தே ருத்ர சிவா தனூ: சிவா விஸ்வா ஹ
பேஸஜீ விசிவா ருத்ரஸ்ய பேஸஜீ தயா நோ
ம்ருடஜீவஸே'
என்பது வேதம்.
"ஹே பரமேஸ்வரா! நீ பிழைத்திருக்கின்றாயே. உனக்கு யார் மருந்து கொடுத்தார்கள்? உனக்கு இரண்டு சரீரங்கள் (உடல்கள்) இருக்கின்றன. அவற்றில் ஒன்று கோரமானது. மற்றொன்று மங்களகரமானது. கோர வடிவம் உன்னுடையது. "சிவ' என்பதை "சிவா' என்று நீட்டினால் அது அம்பிகையைக் குறிக்கும். அம்பிகைக்கு பாதி உண்டு. அவள் வடிவம் மிகவும் மங்களகரமானது. உலகம் முழுவதற்கும் மருந்து அதுதான். அம்பாள் பார்வை இருந்தால் உலகில் அகால மரணம் இராது. உனக்கும் மருந்து அளிப்பது அந்த ஒரு (பாதி) உடல். சர்வ மங்கள சரீரம் (உடல்) தான் மருந்து. ஆகையால் எங்கள் அம்பிகையால்தான் நீ பிழைத்திருக்கிறாய்' என்ற கருத்து கீழ்காணும் சுருதியில் இருக்கிறது. இது மூலசுருதி. இதே கருத்த ஸெளந்தர்யலஹரி முதல் சுலோகத்திலும் இருக்கிறது.
"சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபாவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்தி துமபி!
அதஸ்த்வாமாராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதி பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருப புண்ய: ப்ரபவதி!!'
"சிவன் சக்தியோடு இருந்தால்தான் இயங்க முடியும். இல்லாவிட்டால் அசையக்கூட முடியாது' என்று இந்தச் சுலோகம் கூறுகிறது. அப்படிப்பட்ட அம்பிகையை ஆராதிக்க எவ்வளவோ புணணியம் பண்ணியிருக்க வேண்டும்.
பர்த்தாவினுடைய கோர வடிவத்தால் அம்பிகையுடைய பாதிவிரத்தியம் அதிகமாகிறது. பாதிவிரத்தியத்துக்காக உடலையே தியாகம் செய்த அந்த அம்பிகையைக் கல்யாணத்திற்கு முன்பு ஆராதித்தால் அவளுடைய அநுக்கிரகத்தால் பாதிவிரத்தியமும் சர்வ மங்களங்களும் திடமான சித்தமும் உண்டாகும்.
- ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
MANCHARI TAMIL MAGAZINE JULY 15
விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி, பகவான் தனக்குப் பதியாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். கௌரீ பூஜை பண்ணி அந்தப் பாக்கியத்தை அடைந்தாள். சரஸ்வதி, லட்சுமி பூஜைகளைப் பண்ணக் கூடாது?
அம்பிகை பூஜைதான் பண்ணினாள். அதன் காரணம் என்ன? கௌரீ பூஜையை ருக்மணி ஏன் பண்ண வேண்டும்? திருமணமாகாத கன்னிப் பெண்கள் திருமணத்திற்குப் பின்பு பாதிவிரத்தியத்தோடு இருக்க வேண்டும்.
பதி எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் சித்தம் (மனம்) திடமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு யார் பதிவிரதையோ, யார் கற்பிற் சிறந்தவளோ அந்த அம்பிகையை ஆராதனம் செய்தால் நல்லது.
உத்திரபிரதேசத்திலும் ஆந்திரப் பிரதேசத்திலும் கன்னிப் பெண்கள் கௌரீ பூஜை செய்யும் சம்பிரதாயம் (வழக்கம்) இருக்கிறது. அதை அனுசரித்துப் பாகவதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
அம்பிகை பதிவிரத்தியம் இருப்பதற்கு அடையாளம் இருக்கிறதா? இருக்கிறது. தாட்சாயணியாக அவதரித்தபொழுது தன் பதியை நிந்தித்த தட்சனுக்கு மகளாக வந்த அவ்வுடல் கூடாதென்று தியாகம் பணணிவிட்டுப் பர்வதராஜனுக்கு மகளாக ஆனாள். இன்று வெள்ளிக்கிழமை (இவ்வுரை நிகழ்த்தப்பட்ட 18.11.1932 ஒரு வெள்ளிக்கிழமையாகும்). ஆகையால் நேற்றுச் சொன்ன விவாஹத்தோடு அம்பிகை சம்பந்தமான விஷயத்தை சொல்ல வேண்டுமென்று எண்ணினேன்.
புருஷனைப் பற்றி நிந்தனையைக் கேட்ட காது இருக்கக்கூடாது என்று அந்தக் காதையுடைய உடலே இருக்கக்கூடாது என்று உடலைத் தியாகம் பண்ணினது மட்டும் அம்பாளுடைய பதிவிரத்திய அடையாளமன்று. மற்ற அடையாளங்களும் இருக்கின்றன.
லட்சுமிக்கு பதிவிரத்தியம் இருப்பது ஒரு சிறப்பு இல்லை. அலங்காரங்கள் முதலியவைகளெல்லாம் மகாவிஷ்ணுவிடத்தில் இக்கின்றன. அப்படிப்பட்ட புருஷனிடத்தில் பதிவிரத்தியமுடையவளாக இருப்பது பிரமாதம் அல்ல.
அம்பிகையுடைய கணவர் எப்படிப்பட்டவர்? மயானத்தில் வசிப்பவர், பாம்பு, சடை, எலும்பு முதலியவைகளை வைத்துக் கொண்டிருப்பவர். அகோரமான உருவம் உடையவர்.
"யா தே ருத்ர சிவா தனூர, கோராபாபகாசினீ!'
என்றும்
அகோரப்யோஅத கோரேப்யோ கோரகோரதரேப்யா:
என்றும் ஸ்ரீ ருத்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மகா கோரமான உருவினராக அவர் இருக்கிறார். இப்படிப்பட்டவரிடத்தில் பதிவிரத்தியத்தை அநுஷ்டித்து, அந்தப் புருஷனைப் பற்றி நிந்தனைச் சொல்லைக் கேட்டதற்காக உடலைத் தியாகம் பண்ணிவிட்டு, மறுபடியும் அந்தப் புருஷனையே அடைய வேண்டுமென்று தவம் செய்து அடைந்த ஒரு பத்தினியை ஆராதித்தால் எப்பொழுதும் பதிவிரத்தியம் நிலையாக இருக்கும் அனுக்ரஹம் கிடைக்குமல்லவா?
ஆண்களுக்கு ஆசார்யாரிடத்தில் நிலையான பக்தி இருக்க வேண்டும்.
"ஓங்கார பங்சரசுகீமுபனிஸத்ருத் யானகேலிக லகண்டீம்!
ஆகமவிபிநமயூரீமார்தா மன்தவிர் பாவயே கௌரீம்!!
தயான தீர்தநயனாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்!'
என்று காளிதாசர் அம்பிகையை தோத்திரம் செய்திருக்கிறார். அதில் ஆச்சாரியா, உண்மையுருவம் சாட்சாத் அம்பிகையே என்று சொல்லப்பட்டிருக்கிறது.
"அவதூதட கடிதசூலீம் தாடிததாளீ பலாசதாடங்காம்!
வீணாவாதனவேலாகம்பிதசிரஸம் நமாமி மாதங்கீம்!!'
என்பது மற்றொரு சுலோகம். "தாளீபலாசம்' என்பது பனையோலை. அதுதான் அம்பாளுக்குத் தாடங்கமாக இருக்கிறது. அதனால் (தான்) அம்பிகை பூஜையில் கருகுமணி பச்சோலை கொடுக்கிறார்கள்.
கல்யாணம் செய்து கொள்ளும் பெண்கள் என்றும் மங்களகரமாக இருக்க, சர்வ மங்களையாகிய அம்பிகையைப் பூஜை செய்ய வேறொரு பொருளை எடுத்துத் தர வேண்டும் என்பது இல்லை.
அம்பிகை வழிபாட்டால் பதிபக்தியம் குரு பக்தியும் உண்டாகும். காளிதாசர் வாக்கில் அம்பிகையின் தாடங்கத்தை (தோடு போன்ற காதணி) பற்றிக் கூறியிருப்பதைச் சொன்னேன். அம்பிகையுடைய தாடங்கத்தில் நம்முடைய ஸ்ரீஆச்சார்யர்களாகிய பகவத்பாதாளுக்கு ப்ரீதி (பிரியம்) அதிகம். ஜம்புகேசுவரத்தில் திருவானைக்கோயிலில் உள்ள அகிலாண்டேசுவரியினுடைய சக்தியைக் கலியுகத்தில் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அதைச் சாந்தப்படுத்துவதற்காக அம்பிகைக்குத் தாடங்கத்தை அணிவித்தார்.
அம்பிகையுடைய சக்தி மிகவும் அதிகம். அவளுடைய கோயிலின் ஒன்பதாவது வாயிலுக்கு அணிமாதி அஷ்ட (மிக நுட்பமான உருவம் கொண்ட எட்டு) சித்திகள் காவல். அந்த வாயிலுக்கு வெளியில் வந்து நின்ற தேவர்கள் கூட எண்வகை யோக சித்திகளை அடைக்கிறார்கள். இதை ஸ்ரீ ஆச்சாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
"புராராதேரந்த: புரமஸி தத்ஸ்வச்வரணயோ:
ஸபர்யாமர்யா தா தரளகரணாநாம சுலபா!
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்விமதுளாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி பிரணிமாத்யாபிரமரா!!'
(ஸெளந்தர்யலஹரீ -95)
அம்பாளுக்குரிய சக்ரம் ஸ்ரீசக்ரம். அது மஹாமேரு உருவிலானது. அதில் பல ஆவரணங்கள் உண்டு. ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய தேவதைகள் பல இருக்கிறார்கள். மையப்புள்ளி ஸ்தானம் பராசக்தி. எல்லாவற்றிற்கும் மேலானது பராசக்தி வடிவம். அதற்குக் கீழே இருப்பவைகளெல்லாம் சிறிய சக்தி வடிவங்கள். ஆவரண சக்தி அம்பிகை இருக்கும் சிந்தாமணி இல்லத்தில் ஒன்பது ஆவரணங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று கோடி கோடி யோஜனை தூரத்தில் இருக்கிறது. கடைசி வாயிற்படி அணிமாதிஅஷ்டசித்திகளுக்கு ஏற்பட்டது.
அந்த வாயிற்படிக்கும் அம்பிகை இருக்கும் இடத்திற்கும் எவ்வளவோ தூரம் இருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியில் இருக்கும் பொழுதே அணிமாதிகளின் அநுக்ரஹத்தால் பெரும் செல்வத்தை அடைகிறார்கள்.
இந்திராதி தேவதைகள் ஒன்பதாவது வாயிற்படியில் இருந்து கொண்டே எட்டுப் பெரும் சித்திகளின் சக்திகளின் அநுக்ரஹம் பெற்றுப் போகிறார்கள். இந்திரன் முதலிய தேவதைகளுக்குப் பரதேவதையை அணுகத்தக்க புலனடக்கம் இல்லை. சனகாதி யோகிகளுக்கே கிடையாது. அந்தப் புரத்துக்குள் போவதற்கு எவ்வளவு புலனடக்கம் வேண்டும்?
அப்படிப்பட்ட சக்தியையுடைய அம்பிகையின் முழுமையமான வல்லமை ஏற்பட்டால் கலியுகத்தில் தாங்க முடியாதென்று எண்ணி திருவானைக்கோயிலுக்கு ஸ்ரீ சங்கராச்சாரியர்கள் போகும்போது அம்பிகையைப் பிரார்த்தித்தார்கள். சாந்தமான வடிவமாக இருக்க வேண்டுமென்று சக்தியை ஈர்த்து, ரத்தினமயமான ஸ்ரீசக்ரம், பஞ்சாட்சர (திரு ஐந்தெழுத்து) யந்திரம் இரண்டையும் சேர்த்து இரண்டு சக்ரம் பண்ணி அம்பாள் காதுகளில் அணிவித்தார்.
அந்தத் தாடங்கத்தைப் பற்றி ஸ்ரீ சங்கராச்சாரியர்கள், "உன்னுடைய தாடங்கத்தின் மகிமையால்தான் பரமேஸ்வரனுக்கு இவ்வளவு சிறப்பு ஏற்பட்டிருக்கிறது' என்று ஸெளந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்.
"ஸுதாமப்யா ஸ்வாத்ய ப்ரதிபயஜ ராம்ருத்யு ஹரிணீம்,
விபத்யந்தே விஸ்வே விதிச தமகாத்யா திவிஷத:!
கராளம் யத் க்ஷவலம் கபலிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா!!'
(ஸெளந்தர்ய லஹரி - 28)
தேவதைகள் அமிருதபானம் பண்ணினார்கள். அமிருதம் கிழத்தன்மை, மரணங்கள் இல்லாமல் பண்ணும். அவர்கள் கூடப் பிரளயக் காலத்தில் இல்லாமல் போய்விடுகிறார்கள். பயம் அடைகிறார்கள்.
பரமேஸ்வரன் எதை உட்கொண்டார்? அந்த ஆகாரத்தை நினைத்தாலே மரண பயம் உண்டாகிறது! அப்படிப்பட்ட ஆலகால விஷத்தை அப்படியே எடுத்துச் சாப்பிட்டுவிட்டார். மிச்சம் வைக்காமல் சாப்பிட்டார். அப்படிச் சாப்பிட்டும் அவக்குக் காலக் கணக்கே இல்லை. அவர் காலகாலமாக இருக்கிறார். காலனை உதைக்கிறார். விஷத்தைச் சாப்பிட்டுக் கூட இப்படி இருக்கிறார்.
மற்றவர்களோ அமிருதத்தைச் சாப்பிட்டுக் கூட மரணமடைகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? எது இதற்கு மூலம்?
"உன்னுடைய தாடங்க மகிமைதான் காரணம்?' என்று அம்பிகையைப் பார்த்து ஸ்ரீசங்கராச்சாரியர்கள் சொல்லுகிறார்கள். அந்தத் தாடங்கமானது அம்பிகையின் காதை விட்டுக் கீழே இறங்காமல் இருக்க வேண்டும். அவர் எதைச் சாப்பிட்டாலும் ஒன்றும் பண்ணாவிட்டால் அது அப்படி இருக்கும். அதனால் தாடங்கம்தான் காரணம் என்று சொல்கிறார். ஸ்ரீ ஆச்சார்யார்களுடைய வாக்காகிய இது சுருதி (வேதம்). ஸ்மிருத்திக்கு சுருதி மூலம் இருக்கும். ஈசுவரனாகச் சொன்னது சுருதி. அதைப் பின்பற்றிப் பெரிய மகான்கள் சொன்னது ஸ்மிருதி.
"யா தே ருத்ர சிவா தனூ: சிவா விஸ்வா ஹ
பேஸஜீ விசிவா ருத்ரஸ்ய பேஸஜீ தயா நோ
ம்ருடஜீவஸே'
என்பது வேதம்.
"ஹே பரமேஸ்வரா! நீ பிழைத்திருக்கின்றாயே. உனக்கு யார் மருந்து கொடுத்தார்கள்? உனக்கு இரண்டு சரீரங்கள் (உடல்கள்) இருக்கின்றன. அவற்றில் ஒன்று கோரமானது. மற்றொன்று மங்களகரமானது. கோர வடிவம் உன்னுடையது. "சிவ' என்பதை "சிவா' என்று நீட்டினால் அது அம்பிகையைக் குறிக்கும். அம்பிகைக்கு பாதி உண்டு. அவள் வடிவம் மிகவும் மங்களகரமானது. உலகம் முழுவதற்கும் மருந்து அதுதான். அம்பாள் பார்வை இருந்தால் உலகில் அகால மரணம் இராது. உனக்கும் மருந்து அளிப்பது அந்த ஒரு (பாதி) உடல். சர்வ மங்கள சரீரம் (உடல்) தான் மருந்து. ஆகையால் எங்கள் அம்பிகையால்தான் நீ பிழைத்திருக்கிறாய்' என்ற கருத்து கீழ்காணும் சுருதியில் இருக்கிறது. இது மூலசுருதி. இதே கருத்த ஸெளந்தர்யலஹரி முதல் சுலோகத்திலும் இருக்கிறது.
"சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபாவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்தி துமபி!
அதஸ்த்வாமாராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதி பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருப புண்ய: ப்ரபவதி!!'
"சிவன் சக்தியோடு இருந்தால்தான் இயங்க முடியும். இல்லாவிட்டால் அசையக்கூட முடியாது' என்று இந்தச் சுலோகம் கூறுகிறது. அப்படிப்பட்ட அம்பிகையை ஆராதிக்க எவ்வளவோ புணணியம் பண்ணியிருக்க வேண்டும்.
பர்த்தாவினுடைய கோர வடிவத்தால் அம்பிகையுடைய பாதிவிரத்தியம் அதிகமாகிறது. பாதிவிரத்தியத்துக்காக உடலையே தியாகம் செய்த அந்த அம்பிகையைக் கல்யாணத்திற்கு முன்பு ஆராதித்தால் அவளுடைய அநுக்கிரகத்தால் பாதிவிரத்தியமும் சர்வ மங்களங்களும் திடமான சித்தமும் உண்டாகும்.
- ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
MANCHARI TAMIL MAGAZINE JULY 15