|
Post by saidevo on Jul 5, 2015 8:59:40 GMT 5.5
திருவிடைமருதூர் (மத்யார்ஜுனம்): இரட்டைப் பதிகம்(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)(சம்பந்தர் தேவாரம்: 1.112.1.: இன்குர லிசைகெழும் யாழ்முரலத்)கோவில் temple.dinamalar.com/New.php?id=396www.shivatemples.com/sofct/sct030.phpபதிகம் சம்பந்தர்: 5, அப்பர்: 5, சுந்தரர்: 1 www.shaivam.org/tamil/thiru_adangal.htmசிவசிவாவின் வலைப்பூ: madhisudi.blogspot.in/2015/06/0101.htmlகாப்பு ஆண்டவி நாயகநீ அப்பன் வழிபட்டே தூண்டுதல் செய்திடும் சூசகனாய் - ஈண்டுநான் மாலிங்க சாமி மகிமை தனைப்பாட ஆலிங்க னம்செய் தருள். ... 1 [கோவிலில் உள்ள பிள்ளையார் பெயர்: ஆண்ட விநாயகர்] தேரோடும் மூலைகளைத் தேடி அமர்ந்தருள் ஏரம்ப நாயக! எம்பெருமான் - சீர்பாடச் சொல்லும் பொருளுமுன் தொந்தியாய் ஏறிநிற்கும் வல்லமை தந்தருள் வாய். ... 2 இரட்டைப் பதிகம் (வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்) படங்கொளும் அரவணிப் பரம்பொருளே அடியவர்க் கருள்செயும் அனல்விழியன் நடமிடும் நாதனாய் நடுவிளங்கும் இடைமரு தூருறை இறையெனவே. ... 1 தானெழு லிங்கமாய்த் தளிர்மதியன் தானதை வழிபடத் தருபொருளாய் கானுறை துறவியர் களித்திடவே கானிடை மருதடிக் கவிந்தனனே. ... 2
|
|
|
Post by saidevo on Jul 6, 2015 18:58:30 GMT 5.5
அடியவர் துறவியர் அகத்தியரும் பிடியவள் இடமுறும் பெருமுலையாள் திடந்தரும் உமையவள் தெரிசனத்தை இடைமரு தூரினில் இறைஞ்சினரே. ... 3
அன்னையும் தரிசன அழகருளித் தன்னள வில்சிவ தவமிருக்க தன்னையே தான்துதி தலமெனவே இன்னருள் செய்தனன் இடைமருதே. ... 4
வடமரு தூரென வரும்சயிலம் புடைமரு தூரெனப் புகலொருவூர் விடையவன் நடுவனாய் வீற்றிருக்க இடமளிக் கும்தலம் இடைமருதே. ... 5
வீதியின் நாற்றிசை வீற்றருளும் மேதகு லிங்கமாய் மெருகிடவே பாதியில் நின்றருள் பரமனென ஈதையை நீக்குவன் இடைமருதே. ... 6 ... [ஈதை = துன்பம்]
|
|
|
Post by saidevo on Jul 8, 2015 7:42:20 GMT 5.5
மூவகைச் சுற்றினில் முடிவுறவே தேவதை பலவெனத் திருவுருவே சாவினை நிறுத்திடும் சடைமுடியன் ஈவதே அறமென இடைமருதே. ... 7
மூகனை வதைத்தவள் முழுமுதலாள் ஏகமாய் நின்றருள் இருதலத்தில் ஊகமாய் உடுப்பிகொல் லூரினிலே ... ... [ஊகம் = நினைவு, தியானம்] ஏகமாய் அருள்செயும் இடைமருதே. ... 8
முப்பதின் இரண்டென முழுகிடவே ஒப்பிலாத் தீர்த்தமாய் உறைதலமாம் கப்பிடும் வினைகளின் கதியறவே எப்பொழு தும்மருள் இடைமருதே. ... 9
வரகுண பாண்டியன் வாழ்வினிலே வருவினை அந்தண வதையெனவே வரகுணன் ஈசனை வழிபடவே இருந்தருள் செய்தது இடைமருதே. ... 10
|
|
|
Post by saidevo on Jul 9, 2015 19:37:46 GMT 5.5
மனத்துயர் நீங்கிடும் வரன்குதிரும் வனமிகு குழந்தைகள் வரம்கிடைக்கும் தனம்வரும் வளம்வரும் தானகலும் இனியவன் போற்றிட இடைமருதே. ... 11
கருத்தரிக் கச்செயும் கருணையினாள் கருச்சிதை மனப்பிணி கழித்திடுவாள் உருத்திரன் சக்தியாய் உமையவளை இருத்திடும் தலமென இடைமருதே. ... 12
மாலினைக் கணையாய் மாட்டியவர் காலற முப்புரம் கரித்தழித்தார் மோலியில் சந்திரன் சூடியவர் ... [மோலி = மௌலி = சடைமுடி] ஏலுவர் முக்தியை இடைமருதே. ... 13
கரத்தலும் தொழிலெனக் களிப்பவரே புரத்தலும் அழித்தலும் பூணுவராம் பிரமனின் தலையினைப் பிதிர்த்தவராய் இரந்தருள் செய்குவர் இடமருதே. ... 14
|
|
|
Post by saidevo on Jul 14, 2015 8:57:57 GMT 5.5
நந்தியைக் குரங்கென நகையரக்கன் மந்தியால் அழிந்திடும் வாக்குணவே அந்தகன் மலையடி அலறவைத்த எந்தையின் தரிசனம் இடமருதே. ... 15
[குறிப்பு: கயிலை மலைமேல் செல்லலாகாது என்று நந்திதேவர் தடுத்தபோது இராவணன் அவரைக் குரங்கென நகைக்க குரங்கால் அவன் அழிவான் என்று அவர் சாபமிட்டார்.]
தந்திறம் காட்டிய தானவனை முந்துறு கால்விரல் மொத்தியபின் அந்தகன் அரற்றிட அருள்செய்தே எந்தையாய் மேவினர் இடைமருதே. ... 16
பெரியவர் தானெனும் பேச்சினிலே மாதவன் மலரவன் வாதமுற எரியழற் றூணென எம்பெருமான் இருந்தனர் எழுந்தனர் இடைமருதே. ... 17
அடிமுடி தேடியே அயனரியும் உடல்மனம் சோரவே உள்ளுணர்ந்தார் உடையவர் என்றுமே உமைபாகன் எடுபதம் காணுவோம் இடைமருதே. ... 18
|
|
|
Post by saidevo on Jul 16, 2015 19:39:17 GMT 5.5
அமணமும் புத்தமும் ஆரணம்தள் சமயமாய் நால்வரும் சாற்றினரே இமயவன் நெறியதே ஏற்றதென இமையெனக் காப்பவன் இடைமருதே. ... 19
ஆரணம் தவிர்த்திடும் அயல்நெறிகள் தேர்வழி பிழையெனும் சிந்தைவர நேர்வழி செல்லவே நீறணியான் ஏர்வழிப் படுத்துவர் இடைமருதே. ... 20
பறையதன் ஓசையும் பண்ணுடனே மறையுடன் சேர்ந்திடும் மாண்பினிலே அறைந்திடும் உண்மையை அப்பரவர் இறையெனக் கண்டனர் இடைமருதே. ... 21
இலைமலி பொழிலிடை மருதிறையைக்* ... [சம்பந்தர் பதிகப் பாடலடி] கலந்தருள் பெற்றவர் காழியர்கோன் பலன்மிகு பதிகமாய்ப் பாடிநின்றார் இலையினி துன்பமே இடைமருதே. ... 22
--ரமணி, 04-06/07/2015
*****
|
|