Post by radha on Jul 2, 2015 9:33:41 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
சமூகம் » ஆனந்த ஜோதி
Published: June 11, 2015
தெய்வத்தின் குரல்: ஆனைமுகரும் அகத்தியரும்
தெய்வத்தின் குரல்
விக்நேச்வரரோடு ரொம்பவும் சம்பந்தப்பட்டவர் அகத்திய மகரிஷி. இரண்டு பேரும் தொப்பை வயிற்றுக்காரர்கள். அகத்தியர் அங்குஷ்ட மாத்ரர் - கட்டை விரல் அளவேயானவர் - வாமன ரூப என்று சொல்லியிருக்கிறது.
வாமன ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
வாமன ரூப என்றால் குள்ள உருவம்
- வாமனாவதாரம் மாதிரி வக்ரதுண்ட, மகாகாய என்று ஒரு பக்கம் மகா பெரிய சரீரமுடையவர் என்றும் சொல்லி இன்னொரு பக்கம் வாமன ரூபர் என்றும் வர்ணித்திருக்கிறது. பெரிசு சிறிசு எல்லாம் அவர்தான். அணுவும் அவர்தான். அகிலாண்டமும் அவர்தான் என்று தாத்பர்யம். அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் என்று ஒளவை அகவலில் சொல்லியிருக்கிறாள்.
ஹம்பியில் பெரிசு பெரிசாக இரண்டு விக்நேச்வர மூர்த்திகள். ஒன்று பத்தடி உயரம், இன்னொன்று இருபதடி உயரம் இருக்கும். இப்படி மகாகாயராக இருப்பவர்களுடைய பேர்களோ நேர்மாறாக வாமன ரூபத்தைக் காட்டுவதாக இருக்கின்றன.
அகத்தியருக்கும் விக்நேச்வரருக்கும் சம்பந்தம் சொன்னேன். அகத்தியர் கமண்டலத்துக்குள் அடைத்து வைத்திருந்தக் காவிரியைக் காக்கா ரூபத்தில் வந்து கவிழ்த்து விட்டு நதியாக ஓடப் பண்ணினவர் விக்நேச்வரர்தான். அந்த சமயத்தில் அகத்தியருக்குக் காக்காயிடம் கனகோபம் வந்தாலும் அப்புறம் அது விக்நேச்வரர்தான் என்று தெரிந்துவிட்டதும் ஒரே பக்தியாகிவிட்டார். அவர்தான் காக்கா பிடித்தவர் போலிருக்கிறது. காக்காயை மனசுக்கு ரொம்பவும் பிடித்தவர். அப்புறம் ஒரேடியாகப் பிள்ளையார் பக்தியில் ஈடுபட்டுவிட்டார்.
வாதாபி விஷயத்துக்கு வருகிறேன். அதிலே அகத்தியர் முக்கியமான கதாபாத்திரம். வாதாபி, இல்வலன் என்று அண்ணன் தம்பியாக இரண்டு அசுரர்கள். அனேகமாக எல்லோருக்கும் தெரியக்கூடிய கதைதான். நேரடியாகத் தாக்கிக் கொல்கிற அசுரர்களை விடவும் ஒருபடி மட்டமாக நயவஞ்சனையால் ரிஷிகளைக் கொன்று தின்னுவது இவர்களது வழக்கம்.
பொதுவாகவே நரமாம்சமென்றால் அசுரர்களுக்கு ரொம்ப இஷ்டம். அதுவும் வேத மந்திரத்தில் ஊறிப்போய் பரம மதுரமாகிவிட்ட சரீரமென்றால் ஹல்வா மாதிரி. அந்த ஹல்வா கிடைப்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒரு நயவஞ்சனை செய்வார்கள்.
இரண்டு பேரில் மூத்தவனான இல்வலன் ஒரு பிராம்மண ரூபம் எடுத்துக்கொண்டு யாராவது ரிஷியிடம் போய் ரொம்பவும் நமஸ்காரம் பண்ணித் தன் வீட்டில் அவர் போஜனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பான். ரிஷியும் ஒப்புக்கொண்டு போவார். அவர் என்ன பண்ணியிருப்பாரென்றால் வாதாபியையே மாமிசமென்று தெரிந்துகொள்ள முடியாத விதத்தில் கறியாகச் சமைத்துப் பரிமாறுவார்கள்.
ரிஷிகள் அவசியமான சமயத்தில்தான் ஞான திருஷ்டியை பிரயோகிப்பார்கள். மற்ற சமயங்களில் சாதாரண மனிதர்கள் மாதிரிதான் இருப்பார்கள். அசுர சூழ்ச்சி தெரியாமல் அவர்கள் வாதாபிக் கறியைச் சாப்பிட்டு விடுவார்கள். போஜனம் முடிந்த பின் இல்வலன் அவர்களுக்கு தாம்பூலாதிகள் கொடுத்து சிரம பரிகாரம் பண்ணிக்கொள்ளச் சொல்லிவிட்டு, தம்பியை வாடா என்று கூப்பிடுவான்.
உடனே ரிஷி வயிற்றில் போஜ்ய பதார்த்த ரூபத்தில் இருக்கும் வாதாபி ஆடு ரூபம் எடுத்துக்கொண்டு கொம்பால் அவர் வயிற்றை கிழித்துக் கொன்றபடி வெளியே வருவான். அப்புறம் இரண்டு பேரும் அந்தச் சரீரத்தை சந்தோஷமாகத் தின்று தீர்ப்பார்கள்.
அகஸ்தியருக்கும் இதே மாதிரி போஜன உபச்சாரம் பண்ணிவிட்டு, வாதாபி, வாடா வெளியிலே என்று இல்வலன் கூப்பிட்டான். அவர் விக்நேச்வர ஸ்மரணையிலேயே இருந்து கொண்டிருப்பவரல்லவா? அதனாலே அசுரனுடைய கபடம் அவருக்கும் புரியும்படியாக விக்நேச்வரர் அநுக்ரஹம் செய்துவிட்டார்.
இதற்கு மாற்று பண்ணுவதற்கான உபாயமும் ஸ்புரிக்கும்படி அநுக்கிரகித்துவிட்டார். உடனே அகஸ்தியர் தொப்பையைத் தடவிக்கொண்டு, வாதாபி ஜீர்ணோ பவ என்றார். அசுரன் வெளியிலே வரமுடியாமல் அவர் வயிற்றுக்குள்ளேயே வைச்வாநர அக்னியாயுள்ள பரமாத்மாவில் ஜீரணமாகிவிட்டான்.
அதைப் பார்த்து இல்வலன் பயந்துபோய் அகஸ்தியரிடம் சரணாகதி பண்ணி, பொன்னும் பொருளும் காணிக்கை கொடுத்தான் என்று ஒரு கதை. இன்னொரு கதைப்படி, தம்பியை ஜீரணித்துக் கொண்டுவிட்டாரே என்ற கோபத்தில் அவன் அவர் மேல் பாய்ந்தான். அவர் ஒரு தர்ப்பையை அபிமந்திரித்து அவன் மேலே போட்டார். அது அஸ்திரமாகி அவனை வதைத்துவிட்டது.
தான் வாதாபியை ஜீரணித்து அதன் வழியாக லோகத்துக்கு நல்லது செய்யும்படியாக அநுக்கிரகித்த பிள்ளையாருக்கு அகஸ்தியர் பூஜைகள் பண்ணினார். அப்போது விக்நேச்வரர் இருந்த அவசரத் திருக்கோலத்துக்கு வாதாபி கணபதி என்றே பேர்.
Keywords: தெய்வத்தின் குரல், அகத்திய மகரிஷி., அகத்தியர் அங்குஷ்ட, மாத்ரர், கட்டை விரல், அளவேயானவர், வாமன.
IN: ஆனந்த ஜோதி | சமூகம்
SriMaha Periva THIRUVADIGAL CHARANAM
சமூகம் » ஆனந்த ஜோதி
Published: June 11, 2015
தெய்வத்தின் குரல்: ஆனைமுகரும் அகத்தியரும்
தெய்வத்தின் குரல்
விக்நேச்வரரோடு ரொம்பவும் சம்பந்தப்பட்டவர் அகத்திய மகரிஷி. இரண்டு பேரும் தொப்பை வயிற்றுக்காரர்கள். அகத்தியர் அங்குஷ்ட மாத்ரர் - கட்டை விரல் அளவேயானவர் - வாமன ரூப என்று சொல்லியிருக்கிறது.
வாமன ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
வாமன ரூப என்றால் குள்ள உருவம்
- வாமனாவதாரம் மாதிரி வக்ரதுண்ட, மகாகாய என்று ஒரு பக்கம் மகா பெரிய சரீரமுடையவர் என்றும் சொல்லி இன்னொரு பக்கம் வாமன ரூபர் என்றும் வர்ணித்திருக்கிறது. பெரிசு சிறிசு எல்லாம் அவர்தான். அணுவும் அவர்தான். அகிலாண்டமும் அவர்தான் என்று தாத்பர்யம். அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் என்று ஒளவை அகவலில் சொல்லியிருக்கிறாள்.
ஹம்பியில் பெரிசு பெரிசாக இரண்டு விக்நேச்வர மூர்த்திகள். ஒன்று பத்தடி உயரம், இன்னொன்று இருபதடி உயரம் இருக்கும். இப்படி மகாகாயராக இருப்பவர்களுடைய பேர்களோ நேர்மாறாக வாமன ரூபத்தைக் காட்டுவதாக இருக்கின்றன.
அகத்தியருக்கும் விக்நேச்வரருக்கும் சம்பந்தம் சொன்னேன். அகத்தியர் கமண்டலத்துக்குள் அடைத்து வைத்திருந்தக் காவிரியைக் காக்கா ரூபத்தில் வந்து கவிழ்த்து விட்டு நதியாக ஓடப் பண்ணினவர் விக்நேச்வரர்தான். அந்த சமயத்தில் அகத்தியருக்குக் காக்காயிடம் கனகோபம் வந்தாலும் அப்புறம் அது விக்நேச்வரர்தான் என்று தெரிந்துவிட்டதும் ஒரே பக்தியாகிவிட்டார். அவர்தான் காக்கா பிடித்தவர் போலிருக்கிறது. காக்காயை மனசுக்கு ரொம்பவும் பிடித்தவர். அப்புறம் ஒரேடியாகப் பிள்ளையார் பக்தியில் ஈடுபட்டுவிட்டார்.
வாதாபி விஷயத்துக்கு வருகிறேன். அதிலே அகத்தியர் முக்கியமான கதாபாத்திரம். வாதாபி, இல்வலன் என்று அண்ணன் தம்பியாக இரண்டு அசுரர்கள். அனேகமாக எல்லோருக்கும் தெரியக்கூடிய கதைதான். நேரடியாகத் தாக்கிக் கொல்கிற அசுரர்களை விடவும் ஒருபடி மட்டமாக நயவஞ்சனையால் ரிஷிகளைக் கொன்று தின்னுவது இவர்களது வழக்கம்.
பொதுவாகவே நரமாம்சமென்றால் அசுரர்களுக்கு ரொம்ப இஷ்டம். அதுவும் வேத மந்திரத்தில் ஊறிப்போய் பரம மதுரமாகிவிட்ட சரீரமென்றால் ஹல்வா மாதிரி. அந்த ஹல்வா கிடைப்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒரு நயவஞ்சனை செய்வார்கள்.
இரண்டு பேரில் மூத்தவனான இல்வலன் ஒரு பிராம்மண ரூபம் எடுத்துக்கொண்டு யாராவது ரிஷியிடம் போய் ரொம்பவும் நமஸ்காரம் பண்ணித் தன் வீட்டில் அவர் போஜனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பான். ரிஷியும் ஒப்புக்கொண்டு போவார். அவர் என்ன பண்ணியிருப்பாரென்றால் வாதாபியையே மாமிசமென்று தெரிந்துகொள்ள முடியாத விதத்தில் கறியாகச் சமைத்துப் பரிமாறுவார்கள்.
ரிஷிகள் அவசியமான சமயத்தில்தான் ஞான திருஷ்டியை பிரயோகிப்பார்கள். மற்ற சமயங்களில் சாதாரண மனிதர்கள் மாதிரிதான் இருப்பார்கள். அசுர சூழ்ச்சி தெரியாமல் அவர்கள் வாதாபிக் கறியைச் சாப்பிட்டு விடுவார்கள். போஜனம் முடிந்த பின் இல்வலன் அவர்களுக்கு தாம்பூலாதிகள் கொடுத்து சிரம பரிகாரம் பண்ணிக்கொள்ளச் சொல்லிவிட்டு, தம்பியை வாடா என்று கூப்பிடுவான்.
உடனே ரிஷி வயிற்றில் போஜ்ய பதார்த்த ரூபத்தில் இருக்கும் வாதாபி ஆடு ரூபம் எடுத்துக்கொண்டு கொம்பால் அவர் வயிற்றை கிழித்துக் கொன்றபடி வெளியே வருவான். அப்புறம் இரண்டு பேரும் அந்தச் சரீரத்தை சந்தோஷமாகத் தின்று தீர்ப்பார்கள்.
அகஸ்தியருக்கும் இதே மாதிரி போஜன உபச்சாரம் பண்ணிவிட்டு, வாதாபி, வாடா வெளியிலே என்று இல்வலன் கூப்பிட்டான். அவர் விக்நேச்வர ஸ்மரணையிலேயே இருந்து கொண்டிருப்பவரல்லவா? அதனாலே அசுரனுடைய கபடம் அவருக்கும் புரியும்படியாக விக்நேச்வரர் அநுக்ரஹம் செய்துவிட்டார்.
இதற்கு மாற்று பண்ணுவதற்கான உபாயமும் ஸ்புரிக்கும்படி அநுக்கிரகித்துவிட்டார். உடனே அகஸ்தியர் தொப்பையைத் தடவிக்கொண்டு, வாதாபி ஜீர்ணோ பவ என்றார். அசுரன் வெளியிலே வரமுடியாமல் அவர் வயிற்றுக்குள்ளேயே வைச்வாநர அக்னியாயுள்ள பரமாத்மாவில் ஜீரணமாகிவிட்டான்.
அதைப் பார்த்து இல்வலன் பயந்துபோய் அகஸ்தியரிடம் சரணாகதி பண்ணி, பொன்னும் பொருளும் காணிக்கை கொடுத்தான் என்று ஒரு கதை. இன்னொரு கதைப்படி, தம்பியை ஜீரணித்துக் கொண்டுவிட்டாரே என்ற கோபத்தில் அவன் அவர் மேல் பாய்ந்தான். அவர் ஒரு தர்ப்பையை அபிமந்திரித்து அவன் மேலே போட்டார். அது அஸ்திரமாகி அவனை வதைத்துவிட்டது.
தான் வாதாபியை ஜீரணித்து அதன் வழியாக லோகத்துக்கு நல்லது செய்யும்படியாக அநுக்கிரகித்த பிள்ளையாருக்கு அகஸ்தியர் பூஜைகள் பண்ணினார். அப்போது விக்நேச்வரர் இருந்த அவசரத் திருக்கோலத்துக்கு வாதாபி கணபதி என்றே பேர்.
Keywords: தெய்வத்தின் குரல், அகத்திய மகரிஷி., அகத்தியர் அங்குஷ்ட, மாத்ரர், கட்டை விரல், அளவேயானவர், வாமன.
IN: ஆனந்த ஜோதி | சமூகம்
SriMaha Periva THIRUVADIGAL CHARANAM