|
Post by saidevo on Jun 29, 2015 17:55:15 GMT 5.5
பிரதோஷத் துதி: உண்மையை உரைப்பீர் சற்றே! (அறுசீர் விருத்தம்: கூவிளம்/கருவிளம் மா மா விளம் மா மா)
சேயெனச் சிறந்த தில்லை . தேடியே அலைந்த தில்லை காயிலே பழுத்த தில்லை . கனியிலே இனித்த தில்லை தாயெனக் கண்ட தில்லை . தந்தையாய் அறிந்த தில்லை பேயுடன் ஆடும் தில்லைப் . பித்தனே அருள்செய் வீரே. ... 1
கோயிலுட் காண்டல் இல்லை . கொம்பெனக் கொண்ட தில்லை பாயிரம் அறிந்த தில்லை . பக்தியிற் சிறந்த தில்லை வாயினிற் போற்ற வில்லை . மனதிலும் பெரிதாய் இல்லை நாயகன் நடனன் தில்லை . நன்றெனக் கருள்செய் வீரோ? ... 2
இகத்திலே இன்பம் என்றே . இருமையைக் கொண்ட துண்டு அகத்திலே விளையும் ஆசை . அனுபவித் துழன்ற துண்டு முகத்திலே பணிவென் றாலும் . முனிவுகொள் உள்ள முண்டு நகத்திலே உணர்வைப் போல . நானுமை யுணர்ந்த துண்டே! ... 3
கல்லிலே கண்ட துண்டு . கனவிலே கண்ட தில்லை சொல்லிலே கேட்ட துண்டு . சூக்குமம் கண்ட தில்லை இல்லையும் உண்டும் என்றே . இருப்பதை உணர்ந்த தில்லை தில்லையில் ஆடும் தீர்த்த! . திருவருள் செய்வீ ரன்றோ? ... 4
வேரென நின்றே தில்லை . வெளியிலே ஆடும் வேந்த! காரிருள் நீக்கி யென்றன் . களைகளை வெட்டிச் சாய்த்தே பாரிலென் பிறப்பின் போக்கைப் . பரிவுடன் மேம்ப டுத்தி யாரென என்றன் உன்றன் . உண்மையை உரைப்பீர் சற்றே! ... 5
--ரமணி, 29/06/2015, கலி.14/03/5116
*****
|
|
|
Post by Kanchi Periva on Jun 29, 2015 18:05:08 GMT 5.5
Excellent composition Sri saidevo - thanks for sharing.
|
|
|
Post by saidevo on Jun 29, 2015 18:55:11 GMT 5.5
Thank you, Sir. ramaNi Excellent composition Sri saidevo - thanks for sharing.
|
|