|
Post by Kanchi Periva on Jun 29, 2015 17:52:51 GMT 5.5
Namaskaram. We are pleased to share a new poem on Sri Maha Periva composed by our respected member Sri venkatakailasamஅவல் உண்ணும் கண்ணா! சிலிர்க்கவைக்கும் அருள் புரியும் தயாளா! நேரம் கொஞ்சமும் இல்லையோ? அடியேனுக்கு அருள் செய்ய! 'அஹைதுக க்ருபா'** சாகரா! அனுஷ நாயகா! ஞான சேகரா! கலி தீர்ப்பவன் நீ என்று எண்ணி! கலிதீரவேண்டியே நெஞ்ச பிணி தீர்த்தருளவே இடரும் துயரும் நீங்கவே பாத மலரே கதி என்று பரவசமாகவே உன் செங்கமல பாதமலர் நிழல் தேடித்தேடி வாடினேன்! கடை விழி பார்வை கிடைக்கவே ஏங்கினேன்! உன்னை நினைவில் இருத்தி பாடினேன்! நெஞ்சில் நிருத்தி மகிழ்ந்தேன்! தேவாரம் திருமந்திரமோதி திருவாசகம் பாடி அந்தாதி இசைத்து இலைமாலை சாற்றினேன்! உன்னை தொழுதேன் ! மறையோதும் பெம்மானே! தாயுமான கைலாசவாசா! மௌலி தன் நேசா! அங்கை மென் குழலாள் மைந்தனே! சத் குருநாதா! நீக்கு இது நியாயமா! venkat k ** (காரணமே இல்லாமல் காட்டுகிற கருணையை 'அஹைதுக க்ருபா'என்பார்கள்.)
|
|
|
Post by kahanam on Jul 3, 2015 23:17:42 GMT 5.5
Great song and picture. Also called Avyaaja KaruNaa Murthi! Om Avyaja KaruNaamurthayee Namaha! (lalitha Sahasranaamam) Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|