|
Post by saidevo on Jun 4, 2015 8:57:22 GMT 5.5
|
|
|
Post by saidevo on Jun 5, 2015 7:44:40 GMT 5.5
நித்தியகல் யாணியென்று நிதம்திரும ணக்கோலம் சத்தியவள் கன்னியர்க்குத் தாமதமில் மணமருள்வாள் கொத்துமலர்க் குழலன்னை கோலமதோ தவக்கோலம் இத்தலமாம் இன்னம்பூர் இறைவியவள் இருவுருவே. ... 3
அகத்தியர்க்குத் தமிழ்சொன்னான் அரசனுக்குக் கணக்குரைத்தான் பகலவனின் ஒளியோங்கப் பனிமதியன் அருள்செய்தான் அகமலரும் முகமலராள் ஆதிசிவன் இடமுறவே இகவாழ்வில் வினைதீர்க்க இன்னம்பூர் மேவினனே. ... 4
|
|
|
Post by radha on Jun 5, 2015 8:19:44 GMT 5.5
சிவலிங்கம்
ஓம் நமசிவாய தலங்கள் இருப்பிடம் கொங்கு நாடு நடு நாடு பாண்டிய நாடு தொண்டை நாடு காவிரி வடகரை ஸ்தலங்கள்
தேவார வைப்புத் தலங்கள் Shiva Temples of Tamilnadu தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் முதல் பக்கம்தமிழ்நாடு வர கோவில் விபரங்கள்பாடல் பெற்ற ஸ்தலம்தொடர்பு கொள்ள
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எழுத்தறிநாதர் கோவில், திருஇன்னாம்பர்
தகவல் பலகை சிவஸ்தலம் பெயர் திருஇன்னாம்பர் இறைவன் பெயர் எழுத்தறிநாதர், ஐராவதேஸ்வரர் இறைவி பெயர் சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தர நாயகி பதிகம் திருநாவுக்கரசர் - 4 திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன. ஆலய முகவரி அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் இன்னாம்பர் இன்னாம்பர் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612303
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இன்னாம்பர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
காவிரியின் வடகரையிலுள்ள இத்தலம் ஒரு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகிறது. அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது. இதனை சூரியபூஜை என்று கொண்டாடுகின்றனர்.
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இஙுகுள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டதால் இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், ஐராவதம் என்ற யானை, அகஸ்திய முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தல விருட்சமாக பலாமரமும், சணபக மரமும் உள்ளன.
அகஸ்திய முனிவர் இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெய்ரும் ஏற்பட்டது.
குழந்தைகளுக்கு சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்யாரம்பம் செய்ய இத்தலத்திற்கு பக்தர்கள் வருகிறார்கள். இறைவன் சந்நிதி முன் நெல்லைப் பரப்பி அதில் எழுதுவதைத் தொடங்குவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரத்தைக் காணலாம். இங்கு முதலில் நாம் காண்பது விநாகயரையும் அதன் பின் உள்ள நந்தி மண்டபம். இத்தலத்தில் கொடிமரம் இல்லை. இந்த கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு தோக்கிய சந்நிதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இந்த அம்பாளே பிரதான அம்பாளாகும். மற்றொரு அம்பாள் சந்நிதியும் இங்குள்ளது. அம்பாளின் பெயர் நித்யகல்யானி என்கிற சௌந்தர நாயகி.
நந்தி மண்டபத்திற்கு பின்னாலுள்ள இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இத்தல இறைவன் எழுத்தறிநாதர் அருட்காட்சி தருகிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். இறைவன் சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, காட்சிகொடுத்த நாதர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். பாலசுப்பிரமணியருக்கு தனி சந்நிதி உள்ளது. கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் மூர்த்தமும் காண வேண்டிய ஒன்றாகும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.
|
|
|
Post by saidevo on Jun 6, 2015 8:54:34 GMT 5.5
தூங்கானை விமானத்தில் துலங்கிநிற்கும் கலசமைந்தும் ... ... [தூங்கானை = கஜப்ப்ருஷ்ட அமைப்பு] ஓங்காரன் ஐந்தொழிலும் ஓச்சுதலைக் குறிப்பதுவாம் நீங்காத ஆனந்தம் நிலைநிற்க விழைவோர்க்கே ஈங்கோரூர் நிலைகொண்டான் இன்னம்பூர்த் தலமெனவே. ... 5
நீண்டுயர்ந்த பாணமென நீறணிந்த சிவலிங்கம் வேண்டுதலின் மூலவராய் வீற்றிருக்கும் கருவறையில்; தாண்டவனும் நான்முகனும் தக்கணனும் துர்க்கையுடன் ஈண்டெழுந்த கோட்டமென இன்னம்பூர்த் தலமாமே. ... 6
தலமரமாய்ச் செண்பகமாம் தலக்குளம்-ஐ ராவதமாம் நிலம்தன்னில் மழலையரை நெல்பரப்பி எழுதவைப்பர் கலைமானைக் கையேந்தும் கண்ணுதலான் அருள்நாடி இலக்கமுடன் எழுத்தறிய இன்னம்பூர்ப் பெருமானே. ... 7
இலங்கைவேந்தன் மலைதூக்க இளமதியன் கால்விரலில் தலைபத்தும் கீழுறவே தானவனும் சாமப்பண் கலையுடனே இசைத்திடவே கறைக்கண்டன் அருள்செய்தே இலிங்கவுரு வில்லெழுந்தான் இன்னம்பூர்த் தலமதிலே. ... 8
|
|
|
Post by saidevo on Jun 8, 2015 7:49:22 GMT 5.5
(இறுதிப் பகுதி) தாள்தேடும் மாலுடனே தலைதேடும் நான்முகனும் கோள்தன்னை எட்டாத கூத்தழலாய் வானுயர்ந்தே தாள்பணியும் இருவர்க்கும் தன்னியல்பைக் காட்டிநின்றான் ஏழ்பிறப்பில் லாமுத்தி இன்னம்பூர்த் தலம்தொழவே. ... 9
வேதநெறித் தள்ளுநெறி மேதினியில் ஆழ்த்துநெறி பேதமிதை நன்குணராப் பேதையர்க்கும் வழிகாட்டித் தாதையென ஆட்கொண்டே தன்னொளியைத் தருவிப்பான் ஏதெனப்பின் இருப்பவனே இன்னம்பூர்ப் பெருமானே. ... 10 ... [ஏது = காரணம்]
இதுபோலும் அதுபோலும் என்றப்பர் போற்றிப்பின் இதுபோதும் என்றீசன் இணையடியைத் தலைக்கொண்டார் சதிராட்டன் புகழெல்லாம் சம்பந்தர் விண்டுரைத்தார் எதுவென்னும் உளைச்சலற இன்னம்பூர்ப் பெருமானே. ... 11
--ரமணி, 01-02/06/2015
*****
|
|