|
Post by uma2806 on Jun 3, 2015 13:09:49 GMT 5.5
Sri R Venkatarengan, retired Executive Director of ONGC has written this poem in Tamil yesterday on MahaPeriyavaa's 122nd Jayanthi day. காஞ்சி முனி வாயினிக்கும் மலைத் தேனே
உம்பர் தரு - திருப்புகழ் மெட்டு கணபதியாய்க் காட்சிதரும் கதிரோனே வாணியென வந்துதித்தப் பெருமானே வேதவுரு ஆனதிரு முனியோனே காமாட்சி அன்னைஎன்ப துனைத்தானே கோவிந்தன் கொலுஉருவும் நீதானே குமரன்வடி வாகத்தோன்றும் பெரியோனே வேங்கடவ னாகமோட்சம் தருவோனே கண்ணனொத்த லீலைகளின் செயலோனே ஆலமரத் தடியமர்ந்த தென்தேவே ஆதிசங்க ரனாகிஅருள் பொழிவோனே ஏழைகளுக் கென்றுதித்த எளியோனே எவர்துயரும் நீக்கவல்ல இறையோனே
அந்தணர்க்கு அறிவுரைகள் அளித்தோனே மாதரார்க்கு வாழ்வுநெறி வகுத்தோனே எளிமையினைத் துறவாத துறவோனே எவ்வுயிர்க்கும் அன்புதந்து அணைத்தோனே
அரும் செயலை அன்பர்மூலம் முடிப்போனே அநுமனென அவரையாக்கும் அரியோனே வேதவிளக் கேற்றிவைத்த மறையோனே வியன்கலைகள் அத்தனையும் வளர்த்தோனே
கண்கள்முன்னே கண்டுமுன்னைத் தவிர்த்தேனே ஆயிடினும் அன்புதந்து ஆண்டோனே என்றென்றும் கதிநீயென் றறிந்தேனே காஞ்சிமுனி வாயினிக்கும் மலைத்தேனே மஹாபெரியவர் பாதாரவிந்தங்களில் இந்த வெண்பா நெருல் முருகன் கோயில் பாதுகா பூஜையில் - 2 ஜூன் 2015 - சொல்லப்பட்டு சமர்பிக்கப்பட்டது.. ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
|
|
|
Post by kahanam on Jun 4, 2015 11:41:48 GMT 5.5
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Sarva Deiva Svarupi Maha Periyava! Avartham ThiruvadigaL CharaNam!
|
|