|
Post by radha on May 31, 2012 8:05:21 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL NAMASKARAM TO SRI MAHA PERIVA.
சங்கராச்சர்யம் !! பரத நாட்டியக் கலையில் தனிச்சிறப்பு பெற்று அக்கலை குறித்து எராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுள்ள டாக்டர். பத்மா சுப்ரமண்யம் “தனி முத்திரை ” ஒன்றைக் கண்டுபிடித்து அதை பெரியவாளிடம் ஆடிக் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கச் சென்றிருந்தார்.
அதேபோல, பரமாச்சார்யாளின் முன்பு ஆடிக் காண்பித்து ஆசி பெற்றார். அவருக்கு ஆசி வழங்கிய பெரியவர், ஒரு துண்டுத் தாளில் ஒரு ஊரின் பெயரை எழுதிக் கொடுத்து, “இந்த ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வா; இந்த முத்திரையைக் கண்டுபிடித்த உனக்கு இன்னமும் புகழ் கிட்டும்” என்று கூறினார்.
பத்மாவும் அவ்விதமே, அவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து கோவிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி வந்தார். நாட்டிய மணி வந்ததால், கோவில் குருக்கள் பிராகாரத்தைச் சுற்றிக் காண்பித்தார். அப்படிச் சுற்றிவரும் இடத்தில்தான் அந்த சிலை இருந்தது.
அதைப் பார்த்த பத்மா அசந்து போனார். அதுமட்டுமின்றி ஆச்சர்யமே அடைந்தார்.
எந்த முத்திரையை தான் கண்டுபிடித்தது என்று பெரியவா முன் ஆடிக் காண்பித்து விளக்கம் தந்தாரோ, அதே முத்திரையுடன் அந்த சிலை இருந்தால், ஆச்சரியம் வராதா பின்னே ?
அவர் ஆச்சரியப்பட்டது சிலையைக் கண்டா ? அல்லது சிவனருட் செல்வரின் தீர்க்க தரிசனத்தைக் கண்டா ?
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on May 31, 2012 12:16:43 GMT 5.5
Great !!! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|