Post by radha on May 15, 2015 12:49:04 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPETFULLPRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
தேசம் உபதேசம்!
தேசம் என்பது நாலு திசைகளும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்புதானே? ப்ரதேசம் என்பது இதுபோல் உண்டான வார்த்தை. செய்யவேண்டியதைச் சொல்லிக் கொடுக்கும் திச்சிலிருந்து ஆதேசம், ஸந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகள் வந்திருக்கின்றன. பொதுவாக எல்லா ஜனங்களுக்குமுள்ள திசைகளில் குறிபிட்ட ஜனங்களுக்கு மாத்திரம் உடைமையாக எல்லை கட்டித் தரும் பகுதி தேசம். ஆகையால் உடைமைகளையே பிரதானமாக நினைக்கும் மநுஷ்ய மனப்பான்மையின்படி அந்த வார்த்தை இடப்பரப்புக்கு மட்டுமே உரியதென்று ஆகிவிட்டது.
வினச்சொல்லாகவும் நல்வினையில் ஒருவரைச் செலுத்தும் உத்தரவாகவும் உள்ள திச்செலிருந்து தேசம் என்று இன்னொரு வார்த்தையைக் கொண்டு வராமல் தேசத்திற்கு ஆ, ஸம், உப என்று அடை போட்டு ஆதேசம், ஸந்தோம், உபதேசம் என்ற வார்த்தைகளையே கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆதேசம் என்றால் அதிகாரபூர்வமான உத்தரவு. தெய்வக் கட்டளையாக வெளிப்படவோ மனஸுக்குள்ளேயோ ஒன்று தோன்றுவதைக்கூட ஆதேசம் என்றே சொல்வது. ஸந்தேசம் என்றால் தகவல், செய்தி. உத்தரவு என்பதன் அதிகாரம் ஒட்டிக் கொள்ளாமல் ஸாதாரணமாக அநுப்பும் எல்லா மெசேஜூமே ஸந்தேசந்தான். ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது என்பதன் ஸம்பந்தமில்லாமல், உத்தேசம், ஏகதேசம் என்றும் தேசம் போட்டுக் கொண்டு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.
உத்தேசம் வெளியிலே உத்தரவாகவோ, ஸாதாரண செய்தியாகவோ சொல்லாமல் மனஸுக்குள்ளேயே ஒன்றை நினைப்பது. நிச்சயமாகத் தெரியாததை ஒரு குறிப்பாக அநுமானித்துச் சொல்லும்போதும், எத்தனை என்று ஸரியாகத் தெரியாது; உத்தேசமாகச் சொன்னேன் என்கிறோம். ஏகதேசம் என்ற வார்த்தைக்கும் குறிப்பாகத் தெரிவிப்பது என்ற அர்த்தமிருப்பதாகத் தெரிகிறது. முழுசான ஒன்றில் ஒரு பங்காக இருப்பதை ஏகதேசம் என்பது. பேச்சு வழக்கில் மற்றவர்களுக்குப் பங்கு தராமல் ஒருத்தரே முழுசையும் செய்ால் ஏகதேசமாக அவரே பண்ணிட்டார் என்கிறோம். ஆகக்கூடி, உத்தேசம், ஏகதேசம் என்ற வார்த்தைகளில் நம் டாபிக்கான வழி ஸமாசாரமில்லை. உத்தேசம் வேண்டுமானால் ஒரு வழியை யோசிப்பதாகவும் இருக்கலாம். ஸந்தேசத்தில் கூட வழி சொல்வது இருந்து தானாக வேண்டுமென்றில்லை. ஆதேசம் ஏதோ ஒரு வழியில்தான் போகணுமென்று கட்டாயமாகவே கட்டளை போட்டு விடுகிறது. பாக்கி இருக்கிற வார்த்தை உபதேசம் அதை சொல்லத்தான் இத்தனை பீடிகையும் போட்டது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:--கல்கி Magazine
தேசம் உபதேசம்!
தேசம் என்பது நாலு திசைகளும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்புதானே? ப்ரதேசம் என்பது இதுபோல் உண்டான வார்த்தை. செய்யவேண்டியதைச் சொல்லிக் கொடுக்கும் திச்சிலிருந்து ஆதேசம், ஸந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகள் வந்திருக்கின்றன. பொதுவாக எல்லா ஜனங்களுக்குமுள்ள திசைகளில் குறிபிட்ட ஜனங்களுக்கு மாத்திரம் உடைமையாக எல்லை கட்டித் தரும் பகுதி தேசம். ஆகையால் உடைமைகளையே பிரதானமாக நினைக்கும் மநுஷ்ய மனப்பான்மையின்படி அந்த வார்த்தை இடப்பரப்புக்கு மட்டுமே உரியதென்று ஆகிவிட்டது.
வினச்சொல்லாகவும் நல்வினையில் ஒருவரைச் செலுத்தும் உத்தரவாகவும் உள்ள திச்செலிருந்து தேசம் என்று இன்னொரு வார்த்தையைக் கொண்டு வராமல் தேசத்திற்கு ஆ, ஸம், உப என்று அடை போட்டு ஆதேசம், ஸந்தோம், உபதேசம் என்ற வார்த்தைகளையே கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆதேசம் என்றால் அதிகாரபூர்வமான உத்தரவு. தெய்வக் கட்டளையாக வெளிப்படவோ மனஸுக்குள்ளேயோ ஒன்று தோன்றுவதைக்கூட ஆதேசம் என்றே சொல்வது. ஸந்தேசம் என்றால் தகவல், செய்தி. உத்தரவு என்பதன் அதிகாரம் ஒட்டிக் கொள்ளாமல் ஸாதாரணமாக அநுப்பும் எல்லா மெசேஜூமே ஸந்தேசந்தான். ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது என்பதன் ஸம்பந்தமில்லாமல், உத்தேசம், ஏகதேசம் என்றும் தேசம் போட்டுக் கொண்டு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.
உத்தேசம் வெளியிலே உத்தரவாகவோ, ஸாதாரண செய்தியாகவோ சொல்லாமல் மனஸுக்குள்ளேயே ஒன்றை நினைப்பது. நிச்சயமாகத் தெரியாததை ஒரு குறிப்பாக அநுமானித்துச் சொல்லும்போதும், எத்தனை என்று ஸரியாகத் தெரியாது; உத்தேசமாகச் சொன்னேன் என்கிறோம். ஏகதேசம் என்ற வார்த்தைக்கும் குறிப்பாகத் தெரிவிப்பது என்ற அர்த்தமிருப்பதாகத் தெரிகிறது. முழுசான ஒன்றில் ஒரு பங்காக இருப்பதை ஏகதேசம் என்பது. பேச்சு வழக்கில் மற்றவர்களுக்குப் பங்கு தராமல் ஒருத்தரே முழுசையும் செய்ால் ஏகதேசமாக அவரே பண்ணிட்டார் என்கிறோம். ஆகக்கூடி, உத்தேசம், ஏகதேசம் என்ற வார்த்தைகளில் நம் டாபிக்கான வழி ஸமாசாரமில்லை. உத்தேசம் வேண்டுமானால் ஒரு வழியை யோசிப்பதாகவும் இருக்கலாம். ஸந்தேசத்தில் கூட வழி சொல்வது இருந்து தானாக வேண்டுமென்றில்லை. ஆதேசம் ஏதோ ஒரு வழியில்தான் போகணுமென்று கட்டாயமாகவே கட்டளை போட்டு விடுகிறது. பாக்கி இருக்கிற வார்த்தை உபதேசம் அதை சொல்லத்தான் இத்தனை பீடிகையும் போட்டது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:--கல்கி Magazine