|
Post by saidevo on May 13, 2015 8:28:51 GMT 5.5
எதிர்கொள்பாடி (இன்று மேலைத் திருமணஞ்சேரி)(அறுசீர் விருத்தம்: ’மா மா கூவிளம்’, அரையடி)(சம்பந்தர் தேவாரம் 2.100.1: படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்")கோவில் temple.dinamalar.com/New.php?id=505www.shivatemples.com/nofct/nct24.phpபதிகம் சுந்தரர்: 7.07: மத்த யானை யேறி மன்னர் சூழவரு வீர்காள் www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70070காப்பு: கோட்டத்து பால கொடிமரவி நாயக! பாட்டுள் எதிர்கொளப் பாடி-ஐ ராவதரைச் சீட்டுக் குலுக்காதே சீர்வரும் சொற்களில் வாட்டமின்றிப் பாட வருள். பதிகம் ஈசன் இங்கே இந்திரன் ஈனம் மறையச் செய்துதுர் வாசர் சாபம் நீக்கியே மாண்பை மீட்டுத் தந்தவன் நேசக் கரியும் போற்றவே நேர்ந்த துயரம் நீக்கினார் ஈசன் அன்னை இன்னருள் ஈட்ட எதிர்கொள் பாடியே. ... 1 பொருளோ நிலையோ போனவர் போற்றும் தலமென் றோர்புகழ் திரும ணமாகச் சீர்ப்படத் திருந்த வேண்டிக் கொள்வரே ஒருநோய் வயிற்றில் தோன்றியே உளைவோர் வணங்க நீங்குமே உருதான் தோன்றி லிங்கமாய் உமையோ டெதிர்கொள் பாடியே. ... 2
|
|
|
Post by saidevo on May 15, 2015 8:32:13 GMT 5.5
பரத்வா ஜமுனி வேண்டவே பரம்சேர் உமையே புத்ரியின் உருவாய்! அவளைச் சேர்மணம் உடையார் கொண்ட கோவிலாம் திருவேள் விக்கு டித்தலம்! திருவார் மணம்பின் சீர்முனி எருதூர் ஈசன் தம்பதி யெதிர்கொள் பாடி யாமிதே. ... 3
சுகந்த குந்த ளாம்பிகை சூலம் கொள்ளும் அன்னையாம் அகந்தை நீக்கி இந்திரன் ஆனை ஆட்கொள் ஈசராம் உகந்தோர் பதிகம் பாடிய உறவாய் அடியார் சுந்தரர் சுகமாய்ச் சேர நீங்கிடும் துயரம் எதிர்கொள் பாடியே. ... 4
|
|
|
Post by saidevo on May 18, 2015 7:49:53 GMT 5.5
சுற்றில் அமர்வர் பைரவர் சூரி யதேவன் பிள்ளையார் உற்ற துணைகொள் வேலவன் உவந்தே அருள்செய் லட்சுமி கற்றார் போற்றும் நாமகள் கலியைக் கொடுக்கும் கோள்நவம் மற்றும் நந்தி யென்றுநாம் மகிழ வெதிர்கொள் பாடியே. ... 5
கோட்டம் வாழும் தக்கணர் குமரி நடேசர் பிள்ளையார் வாட்டம் தீர்பிட் சாடனர் மலரோன் ராகு என்றிவர் நாட்டம் எல்லாம் நம்வினை நலியச் செய்தே காப்பதே பாட்டன் பலரும் போற்றிய பழவூர் எதிர்கொள் பாடியே. ... 6
|
|
|
Post by saidevo on May 21, 2015 7:37:48 GMT 5.5
மத்தம் மதியம் மானுடன் மழுவும் சிகைவீழ் வானதி நித்தம் தேயும் சந்திரன் நீண்டே நெளியும் பாம்பென அத்தன் சூடி பார்வதி யாயோர் பாக மேனியன் சித்தம் நடனம் செய்யவே சேர்வீர் எதிர்கொள் பாடியே. ... 7
மலையைத் தூக்க ராவணன் வலிமை காட்டும் யத்தனம் குலையச் செய்தே கால்விரல் கூர்ந்தே வாட்டும் ஈசரே அலையும் புரங்கள் தீக்குண வாக்கும் அஞ்செ ழுத்தராம் தொலையும் பாவம் புண்ணியம் தொடரும் எதிர்கொள் பாடியே. ... 8
மாலும் அயனும் தேடியே மாயச் செய்தாட் கொண்டவர் ஆலம் அடியில் நால்வருக் கரிய உண்மை விண்டவர் ஆல கால நஞ்சினை அருந்திக் கழுத்தில் கொண்டவர் கோலம் காண வாருமின் கோவில் எதிர்கொள் பாடியே. ... 9
வேதம் தள்ளும் பாதையை வீணர் மட்டும் நாடுவர் பேதம் இல்லா ஈசரின் பேர்கொள் நெறியே வாழ்வினில் போதம் கிட்டும் பாதையாய்ப் போவோர்க் கில்லை தோல்வியே நாதன் நமச்சி வாயரை நாட வெதிர்கொள் பாடியே. ... 10
தோற்றம் மரணம் வஞ்சகம் துயரம் அலைக்கும் ஐம்புலன் நீற்றை அணியும் ஈசராம் நீல கண்டர் நீக்குவர் சாற்றும் பதிகம் சுந்தரர் சாறும் சொல்லும் மந்திரம் ஏற்றே இன்றே நாடுவீர் ஈசர் எதிர்கொள் பாடியே. ... 11
--ரமணி, 11-12/05/2015, கலி.29/01/5116
*****
|
|