|
Post by Sumi on May 29, 2012 11:35:51 GMT 5.5
As narrated by a Devotee Source: Maha Periyaval Darisana Anubhavangal Part 6
மகா பெரியவாளை தரிசிக்க செல்லும்போது ஆச்சரியமான பல நிகழ்சிகளை கண்டிருக்கிறேன்.
ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர், தான் கண்ட கனவை பெரியவாளிடம் உணர்ச்சி பொங்க விவரித்து கொண்டிருந்தார்.
அவர் கனவில் பெரியவாள் தோன்றியதாகவும், 'எனக்கு கோட்டு தருகிறாயா?" என்று கேட்டதாகவும் சொல்லிகொண்டிருந்தார்.
இதை கேட்டுவிட்டு மகா சுவாமிகள் மெல்ல சிரித்தார்கள். "கோட்டு கேட்டேனா?" என்று சொல்லி விட்டு ஓர் இடைவெளி, "கேட்டிருப்பேன்... கேட்டிருப்பேன்".
அருகில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 'பெரியவாளுக்கு கோட்டு என்னத்துக்கு?"
பெரியவாளே பேசினார்கள்:
"கோட்டுன்னா என்ன அர்த்தம் தெரியுமா?"
என்ன பதில் சொல்ல? Coat என்றால் கோட்டுதான்!
"கோட்டு என்பதற்கு சரியான தமிழ்பதம் சொலுங்களேன்.."
'மலை' என்றார் ஒருவர். 'கொம்பு' என்றார் இன்னொருவர். "மேலங்கி" என்றார் மற்றொருவர். எல்லோரும் பெரியவாளின் பதிலுக்காக, செவிகளை தீட்டி கொண்டு காத்திருந்தார்கள்.
"அதெல்லாம் சரி. கோட்டு என்றால் கவசம்னு ஒரு அர்த்தம் உண்டு. காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சார்தணும்னு ஒரு எண்ணம் வந்தது. தங்க கவசம் பண்றதுன்னா.. சின்ன காரியமா? பணம் வேணுமே... இவர் பணக்காரர்.. ஒருவேளை இவரை கேட்டால், செய்து கொடுப்பார்னு தோன்றியிருக்கும். அதனால் கனவிலே போய் கேட்டிருக்கேன். எல்லாம் எனக்கு காமாட்சிதான். அம்பாளுக்கு கவசம் சாத்தினால், நான் கோட்டு போட்டுக்கொண்ட மாதிரிதான்..."
அந்த செல்வந்தருக்கு அடித்தது யோகம் - தங்க கவசம் செய்து சமர்ப்பிக்கும் யோகம்!
எத்தனை தலைமுறை புண்ணியமோ?
|
|
|
Post by mahajadam on May 29, 2012 13:40:42 GMT 5.5
நான் செய்த புண்ணியம் இதை படித்து தெறிந்து கொண்டேன்
|
|
|
Post by krsiyer on May 29, 2012 14:04:16 GMT 5.5
Good thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara
|
|