Post by radha on Apr 10, 2015 7:39:09 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SOURCE:- KALAIMAGAL APRIL 2015
நமது நாட்டில் பல மதங்கள் இருக்கினறன. சைவ சித்தாந்தம் ஒன்று; வைஷ்ணவர்களுடைய பாஞ்சராத்ர சித்தாந்தம் ஒன்று; மத்வருடைய சித்தாந்தம் ஒன்று. இப்படிப் பல சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று விரோதமாகக் காணப்படுகின்றன. எல்லாம் இந்து மதத்தைச் சேர்ந்தனவே. அவைகளுள் எது தாழ்ந்தது, எது சிறந்தது என்பதை இப்போது சொல்லப்போகிறதில்லை.
ஆனால் இந்து மதம் என்றால் என்ன?
எல்லா சித்தாந்தங்களிலும் பொதுவாக என்ன சொல்லப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைக் கேட்டால் ஒருவரும் தெளிவாகப் பதில் சொல்வதில்லை. நன்றாகப் படித்த பண்டிதர்களாக இருந்தாலும் சித்தாந்தங்களின் வேறுபாடுகளையே அதிகமாகச் சொல்கிறார்கள். நாம் படிக்கும் புத்தகங்களிலும் அப்படியேதான் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் பொதுவான ஏதோ ஒரு கொள்கை இருந்தாலொழிய ஹிந்து மதம் என்பதை ஒரு மதமாகச் சொல்ல முடியாது. இதைப் பற்றி நான் அநேக தடவைகள் யோசித்திருக்கிறேன். அந்தப் பொதுவான விஷயம் என்னவென்று பார்ப்போம்.
தினந்தோறும் இருந்துக்கள் அனைவரும் ராமாயண பாராயணம் ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் சில சுலோகங்கள் சொல்வது வழக்கம். அவைகளுள்
ஸ்வஸ்தி பிரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா!
கோப்ராம்ணேப்ய: ஸுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து!!
என்பது ஒரு சுலோகம்.
இதன் பொருள்: "ஜனங்கள் ஸெளக்கியமாக இருக்கட்டும்! பூமியை ராஜாக்கள் நியாயமாக ஆளட்டும்! பசு, பிராம்மணர் இவர்கள் மங்களமாக வாழட்டும்! எல்லா உலகமும் சுகமாக இருக்கட்டும்!' என்பது.
இந்தச் சுலோகத்தில் பொதுவாக ஜனங்களையும் உலகங்களையும் சொல்லிவிட்டுத் தனியாகப் பசுக்களையும் பிராம்மணர்களையும் சொல்லி, அவர்கள் சௌக்கியமாக இருக்கட்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? எல்லோரைப் பற்றியும் சொன்ன பிறகு, தனியாக பிராம்மண ஜாதிக்கு சௌக்கியம் உண்டாகட்டும் என்று சொல்லுவது ஒருதலைப்பட்சமாகத் தோன்றும்.
அப்படி ஒருதலைப் பட்சமாக வைத்துக் கொண்டாலும் பசுக்களை ஏன் தனியாகச் சொல்ல வேண்டும்? பசு எல்லோருக்கும் பொதுதானே? ஆகையால் அதன் காரணம் நன்றாக விளங்கவில்லை. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும். இது இப்படி இருக்கட்டும்.
மதுரையில் கூன்பாண்டியன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் சமணர்களுடைய உபதேசத்தால் சமணன் ஆனான். "ஊரில் யாரும் விபூதி பூசக்கூடாது. ருத்திராட்சம் அணியக் கூடாது' என்றும் கட்டளையிட்டான். அவன் மனைவியும் மந்திரியும் சிறந்த சிவபக்தர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அரசனின் கட்டளையை மீற முடியவில்லை.
ஏகாந்தத்தில் வெளியே தெரியாமல் சிவனை வழிபட்டு வந்தார்கள். "எப்போது அரசன் இந்தச் சமண மதத்திலிருந்து திரும்பிச் சிவனை ஆராதிக்கப் போகிறான்?' என்ற கவலையுடன் இருந்தார்கள். இப்படி இருக்கையில், சைவ மத ஸ்தாபகர்களான நால்வருள் முக்கியானவரும் சுப்பிரமணிய சுவாமியின் மனித அவதாரமுமான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் பல பக்தர்களோடு ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் யாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்தச் செய்தியை அறிந்த பாண்டியனுடைய மந்திரியும் மனைவியும் ரகசியமாகச் சுவாமிகளை அடைந்து, மதுரைக்கு வருகை தந்து அரசனுக்கு நல்ல புத்தி போதிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.
ஈசுவர சங்கல்பத்தால் அரசனுக்குக் கடுமையான ஜ்வரம் வந்தது. சமணர்கள் எவ்வளவோ சிரமப்பட்டும் ஜ்வரத்தைத் தணிக்க முடியவில்லை. அந்தச் சமயம் மந்திரி சம்பந்தருடைய அருமை பெருமைகளைச் சொல்ல, அவர் வந்து பார்த்தால் ஜ்வரம் தணிந்து விடும் என்று சொன்னார்.
உலகத்தில் எவ்வளவு பிடிவாதக்காரர்களாயிருந்தாலும் வியாதிகளின் தொந்தரவு தாங்க முடியாதபோது தங்கள் பிடிவாதத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்வது வழக்கம். அதுபோல் அரசனும், சிவபக்தர்களையும் திருநீறு, ருத்ராட்சம் தரித்தவர்களையும் பார்ப்பதுகூட இல்லை என்ற தீவிர எண்ண விரதமுடையவனாயிருந்தும் வியாதியின் தொந்தரவு காரணமாக மந்திரி வேண்டிக் கொண்டற்குச் சம்மதித்தார். மந்திரிக்கும் மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. மிக்க ஆடம்பரமான ஏற்பாடுகளுடன் சம்பந்தரை வரவழைத்தான். சம்பந்தர் அங்கு வந்ததும் சமணர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நேர்ந்தது.
உடனே சம்பந்தர் அவர்களைப் பார்த்து "நீங்கள் அரசனுடைய உடம்பில் வலது பாகத்திலுள்ள ஜ்வரத்தை உங்கள் மந்திர சக்தியால் போக்குங்கள். நான் இடது பாகத்திலுள்ள ஜ்வரத்தை என்னுடைய மந்திர சக்தியால் போகச் செய்கிறேன். நான் போக்கடிக்காவிட்டால் நான் தோற்றவன்' என்றார். உடனே சம்பந்தர் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு' என்று ஆரம்பிக்கும் பத்துப் பாடல்களைச் சொல்லி, விபூதியை எடுத்துப் பாண்டியனுடைய இடது பாகத்தில் பூசினார். உடனே ஜ்வரம் நின்றுவிட்டது.
சமணர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் வலது பாகத்திலுள்ள ஜ்வரத்தைத் தணிக்க முடியவில்லை. உடனே அவர்கள் இடது பாகத்தை வைத்துக் கொள்கிறோம். நீர் வலது பாகத்தை எடுத்துக் கொள்ளும் என்றார்கள். அதற்கும் சம்பந்தர் "சரி' என்று சொல்ல, வலது பக்கத்தில் உள்ள ஜ்வரத்தை தணிக்க அதே பாடல்களை பாடி வலது பக்கத்தில் விபூதியைப் பூசினார். அரசனுக்கு வந்த ஜ்வரம் சாதாரண ஜ்வரம் அல்ல. ஈஸ்வர சங்கல்ப்பத்தால் வந்த ஜ்வரம். ஆதலால் வலது பக்கத்தில் இருந்த ஜ்வரம் திடீரென சமணர்களுடைய பக்கமான இடது பக்கத்திற்கு வந்துவிட்டது. பிறகு சம்பந்தமூர்த்தி சுவாமிகள் அரசர் படும் துன்பத்தை பார்த்து இரக்கம் கெண்டு அந்த ஜ்வரத்தையும் ஒருவாறு தணித்தார்.
இவ்வளவு தூரம் ப்ரத்யக்ஷமாக நடந்தும் சமணர்கள் தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொள்ளவில்லை. அரசனுக்கு பூர்ண நம்பிக்கை ஏற்படவில்லை. இரண்டு பிரிவினர்களும் வாதம் செய்யலாம் என்று ஆரம்பித்தனர். இதற்கு முன்பு சம்பந்தர் கோவிலுக்குப் போய் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வந்தார். "சமணர்கள் வேதத்தையும் யாகத்தையும் நிந்திக்கிறவர்களாகையால், அவர்களை அடக்கி உன்னுடைய புகழே எங்கும் பரவும்படிச் செய்ய வேண்டும்' என்று ஈசனை வேண்டிக் கொண்டார்.
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில் அமணோடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந் தென்
ஆலவாயி லுறையு மெம் ஆதியே'
(சம்பந்தர் தேவாரம் - திருவாலவாய்)
என்று அவர் வேண்டிக் கொண்டு சமணர்களிடம் போனார்.
உடனே சம்பந்தர் சமணர்களைப் பார்த்து "உங்கள் கொள்கைகளை ஓர் ஓலையில் எழுதி, இந்த வைகையாற்று வெள்ளத்தில் போடுங்கள். நானும் என் கொள்கையை எழுதிப் போடுகிறேன். எந்த ஓலை வெள்ளத்தோடு போகாமல் அதை எதிர்த்துச் செல்கிறதோ, அதிலுள்ள கொள்கைதான் உண்மையானது' என்று சொன்னார். அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள். அவர்கள் அவ்வாறே போடவும் சமணர்களின் ஓலை வெள்ளத்தோடு சென்றுவிட்டது. சம்பந்தருடைய ஓலை தண்ணீரில் எதிர்த்துச் சென்றது. பிறகு சமணர்கள் தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு சம்பந்தர், "நாம் இருவரும் முன்போலவே எழுதி ஓலைகளை நெருப்பில் போடுவோம். யாருடைய ஓலை எரிந்து போகிறதோ அவர்கள் தோற்றுப் போனவர்கள்' என்று சொன்னார். அதையும் ஒப்புக் கொண்டு அப்படியே இருவரும் செய்ய, சமணர்களின் ஓலை எரிந்து போயிற்று. சம்பந்தருடைய ஓலையோ அப்படியே இருந்தது.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் அந்த ஓலையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையக மும்துயர் தீர்கவே'
இதன் பொருள்: "பிராம்மணர்கள் சௌக்யமாக வாழ வேண்டும். தேவர்கள் சௌக்யமாக இருக்க வேண்டும். பசுக்கள் சௌக்கியமாக இருக்க வேண்டும். குளிர்ந்த மழை பெய்ய வேண்டும். அரசன் நீதி தவறாமல் ஆள வேண்டும். கெடுதியெல்லாம் தொலைய வேண்டும். உலகம் முழுவதும் "ஹர ஹர மகாதேவ' என்ற வார்த்தை நிரம்பியிருக்க வேண்டும். உலகத்திலேயே துக்கமென்பது இருக்கக்கூடாது.'
சைவர்கள் கொள்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களது முடிவான சித்தாந்தமாகிற இந்தப் பாட்டிலும் பிராம்மணர்களையும் பசுக்களையும் தனியே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இப்பாட்டில் தேவர்களும் சொல்லப்பட்டிருக்கின்றனர். முன்சொன்ன சுலோகத்தில் தேவர்கள் சொல்லப்படவில்லை. இப்படியே நமக்குள் பொதுவாக ஒரு சுலோகமும் வழங்கி வருகிறது.
நமோ ப்ரஹ்மண்யதேவாய கோப்ராஹ்மண ஹிதாய ச!
ஜகத்விதாய கிருஹ்ணாய கோவிந்தாய நமோ நம:!!
(சாந்தி பர்வம் 46 - 12.06)
இதன் பொருள்: "பிரம்மாணர்களுக்கும் பசுவுக்கும் நன்மையைச் செய்யும் கிருஷ்ணனுக்கு வணக்கம்.'
இங்கும் பிராம்மணனும் பசுவும் தனியே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றனர். இப்படிச் சொல்லுவதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.
உலகத்தில் யார் எவ்விதக் கேள்வி கேட்டாலும் அதற்கெல்லாம் தகுந்த பதில் கீதாசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸர்வோப நிஷதோ காவோ தோக்தா
கோபாலநந்தந:!
பார்த்தோ வத்ஸ: சுதீபோர்க்தா தக்தம்
கீதாம்ருதம் மஹத்!!
(கீதா மங்களா சரணம் - 4)
"எல்லா உபநிடதங்களும் பசுக்களாம். அவைகளைக் கறக்கும் இடையன் ஸ்ரீகிருஷ்ணபகவான். அப்பசுக்களின் கன்று அர்ஜூனன். அப்பசுக்களின் கறந்தபால் கீதையென்பதாகும். பாலைக் குடிப்பவர்கள் வித்வான்கள்.'
உலக வழக்கில் ஓர் இடையன் பால் கறக்க வேண்டுமென்றால் மாட்டுடன் கன்றையும் கொண்டுபோக வேண்டும். பால் கன்றுக்கும் மற்றவர்களுக்கு உபயோகப்படுவது போல பகவத் கீதை யாருக்கு எந்தவித சந்தேகம் தோன்றினாலும் அதைப் போக்கும். யார் எவ்விதக் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் அதிலிருக்கும். அநேக க்ரந்தங்கள் இருந்தாலும் நான் ஏன் இதை எடுத்துக் கொண்டேன் என்றால் அதற்கு ஒரு காரணமுண்டு. இக்காலத்தில் எல்லோரும் கீதை உயர்ந்த தத்துவ நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களல்லவா? அதில் சொல்லும் தத்துவங்கள் என்ன என்பதில் விவாதங்கள் இருந்தாலும் கீதை உயர்ந்த தத்துவ நூல் என்பதில் ஒருவருக்கும் ஆட்சேபமில்லை. இப்படிப் பெரியவர்கள் ஒப்புக் கொண்ட புத்தகத்திலிருந்து நான் முன் சொன்ன சந்தேகத்திற்குத் தகுந்த பதில் கிடைக்குமானால் நீங்கள் எல்லோரும் நிச்சயமாக நம்பிக்கையடைவீர்கள் என்று எண்ணித்தான் அதைச் சொல்ல எடுத்துக் கொண்டேன்.
இவ்வுலகில் மனிதர்களாகிய நம்முடைய ஜீவன வழிமுறைகளைக் கவனிப்போம். ஒரு ஊரில் ஒரு பொருள் அதிகமாக விளைந்தால் அதை அந்தப் பொருள் விளையாத ஊருக்கு அனுப்பி, நம் ஊரில் விளையாததும் அந்த ஊரில் விளைவதுமான மற்றொரு பொருளை வாங்கி வருகிறோம். அதுபோல தச்சன், கொல்லன் மதலியவர்கள் நமக்காகச் சில காரியங்களைச் செய்கிறார்கள். நாம் அவர்களுடைய பிழைப்பிற்கு வேண்டியவைகளைக் கொடுக்கிறோம். பசுக்களுக்குப் புல் போடுகிறோம். அவை பால் கொடுக்கின்றன. நாம் அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறோம். அவர்கள் நமக்குத் தீங்கு வராமல் காவல்கட்டுச் செய்கிறார்கள். இப்படி உலகம் முழுவதுமே பரிவர்த்தனை முறையில் நடந்து வருகின்றது. இப்படியே நாம் உலக வழக்கில் சில பரிவர்த்தனை செய்து வருகின்றோம். இன்ஜினியர் முதலியவர்கள் பெய்த மழை நீரை ஒழுங்காகப் பிரித்து ஆறு முதலியவைகளில் பாயும்படி விடுவார்களேயொழிய மழை பெய்யும்படி செய்ய அவர்களால் முடியாது. மழை வேண்டுமானால் நாம் சில பொருட்களைத் தேவலோகத்திற்கு அனுப்ப வேண்டும். இதுவே கீதையில் சொல்லியிருக்கிறது.
ஸஹயக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா
புரோவாச ப்ரஜாபதி:!
அநேந ப்ரஸவிஷ்யத்வம் ஏஷவோ
அஸித்விஷ்ட காமதுக்!!
தேவான் பாவயதாநேந தே தேவா
பாவயந்து வ:!
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய:
பரமவாப்யஸ்யத:!!
(கீதை 3 - 1011)
இதன் பொருள்: முதன்முதலில் பிரம்மா மக்களோடு யாகத்தையும் படைத்தார். அப்பொழுது அவர்களைப் பார்த்து "இந்த யாகத்தைச் செய்து நீங்கள் நலனை அடையுங்கள். இந்த யாகங்கள் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைக்கட்டும்! இந்த யாகத்தை கொண்டு நீங்கள் தேவர்களைத் திருப்தி செய்துவையுங்கள். அந்தத் தேவர்கள் மழை முதலியவற்றால் உங்களுக்கு நன்மை செய்யட்டும்! இப்படியே நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மேலான நலன்களை அடையுங்கள்' என்று சொன்னார்.
யாகம் என்பது மந்திரம், தேவதை, ஹவிஸ் (தேவர்க்கான உணவு) என்று மூன்று ஸ்வரூபமாக (வடிவமாக) உள்ளது. அவைகளுள் மந்திரம் பிராம்மணனால் சொல்லப்பட வேண்டும். தேவதையை மனதால் தியானம் செய்ய வேண்டும். ஹோமம் செய்வதற்கு முக்கியமாக வேண்டியது பசுவின் நெய். இந்தக் காலத்தில் பிராம்மணர்கள் பெரும்பாலும் இங்கிலீஷ் படிக்கிறார்கள். அவர்கள் வேதாத்யயனம் (வேதம் ஓத) பயிலுவதில்லை. இங்கிலீஷ் படித்தவர்களுக்கு, பிறகு வேதம் ஓதும் பயிற்சி செய்தாலும் சரியான உச்சரிப்பு செய்ய முடிவதில்லை. ஆகையால் தற்காலத்தில் மந்திர சுத்தி (மந்திரங்களின் தூய்மை) இல்லை. கர்மாக்களை (வைதீக காரியங்களை) ஒழுங்காக ஒருவரும் செய்யாததால் தேவதாத்தியானமும் (தேவதைகளைத் தியானம் செய்வதும்) சரியாயில்லை. பசுவின் பால் தற்காலத்தில் பெரும்பாலும் காபிக்கு உபயோகப்பட்டு விடுகிறது. ஆகையால் சுத்தமான நெய்யும் கிடைப்பதில்லை. ஆதலால் திரவிய சுத்தியும் இல்லை.
யாகத்திற்கு முக்கியமான மந்திரத்தை அத்யயனம் செய்வதால் (ஓதுவதால்) பிராம்மணனையும் ஹோமத்ரவ்யமான (அக்னியில் சொரியும்) நெய்யைக் கொடுப்பதால் பசுவையும் எல்லாவிடத்திலும் மேற்கண்ட சுலோகங்களிலும் திருஞானசம்பந்தர் பாசுரத்திலும் தனியாகச் சிறப்பித்துக் கூறியதாக எண்ண வேண்டியிருக்கிறது. யாகத்தினால் ஏற்படும் பலன் பிராம்மணர்களுக்கும், பசுவிற்கும் மட்டும் இல்லை. உலகத்தில் எல்லோருக்குமே நலனைக் கொடுப்பது யாகம். யாகங்கள் செய்வதால்தான் உலகம் நலமாக இருக்கும். யாகம் ஒழுங்காக நடைபெற வேண்டுமானால், பிராம்மணர்களும் பசுக்களும் ÷க்ஷமமாக இருக்க வேண்டும்.
தற்காலத்தில் வேதாத்யயனம் செய்யாத பிராம்மணர்கள், தாங்கள் வேதாத்யயனம் செய்யவில்லையே என்று வருத்தப்படுவதோடு, வேதாத்யயனம் செய்யும் பிராம்மணர்களை அலட்சியம் செய்யாமல் மரியாதையாக நடத்த வேண்டும். கூடுமான வரையில் எல்லோரும் காபியை நிறுத்த வேண்டும். கொஞ்சமாவது வேதாத்யயனம்(வேதம் ஓதும் பயிற்சி) செய்தல் வேண்டும். பஞ்ச மஹா யக்ஞங்களையும் (ஐம்பெரும் வேள்விகளையும்) முடிந்தவரை செய்ய வேண்டும்.
இந்து மதப் பிரிவுகள் சில கொள்கை வேறுபட்டால் பலவகையாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் பொதுவான கொள்கை ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
பொதுவாக, உலகத்தின் நலனுக்கு பிராம்மணர்களும் பசுக்களும் முக்கிய காரணங்களாக இருப்பதால்தான் எல்லா இந்து மத பிரிவினர்களும் பிராம்மணர்களையும் பசுக்களையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று எண்ண வேண்டியிருக்கிறது.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:- KALAIMAGAL APRIL 2015
நமது நாட்டில் பல மதங்கள் இருக்கினறன. சைவ சித்தாந்தம் ஒன்று; வைஷ்ணவர்களுடைய பாஞ்சராத்ர சித்தாந்தம் ஒன்று; மத்வருடைய சித்தாந்தம் ஒன்று. இப்படிப் பல சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று விரோதமாகக் காணப்படுகின்றன. எல்லாம் இந்து மதத்தைச் சேர்ந்தனவே. அவைகளுள் எது தாழ்ந்தது, எது சிறந்தது என்பதை இப்போது சொல்லப்போகிறதில்லை.
ஆனால் இந்து மதம் என்றால் என்ன?
எல்லா சித்தாந்தங்களிலும் பொதுவாக என்ன சொல்லப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைக் கேட்டால் ஒருவரும் தெளிவாகப் பதில் சொல்வதில்லை. நன்றாகப் படித்த பண்டிதர்களாக இருந்தாலும் சித்தாந்தங்களின் வேறுபாடுகளையே அதிகமாகச் சொல்கிறார்கள். நாம் படிக்கும் புத்தகங்களிலும் அப்படியேதான் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் பொதுவான ஏதோ ஒரு கொள்கை இருந்தாலொழிய ஹிந்து மதம் என்பதை ஒரு மதமாகச் சொல்ல முடியாது. இதைப் பற்றி நான் அநேக தடவைகள் யோசித்திருக்கிறேன். அந்தப் பொதுவான விஷயம் என்னவென்று பார்ப்போம்.
தினந்தோறும் இருந்துக்கள் அனைவரும் ராமாயண பாராயணம் ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் சில சுலோகங்கள் சொல்வது வழக்கம். அவைகளுள்
ஸ்வஸ்தி பிரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா!
கோப்ராம்ணேப்ய: ஸுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து!!
என்பது ஒரு சுலோகம்.
இதன் பொருள்: "ஜனங்கள் ஸெளக்கியமாக இருக்கட்டும்! பூமியை ராஜாக்கள் நியாயமாக ஆளட்டும்! பசு, பிராம்மணர் இவர்கள் மங்களமாக வாழட்டும்! எல்லா உலகமும் சுகமாக இருக்கட்டும்!' என்பது.
இந்தச் சுலோகத்தில் பொதுவாக ஜனங்களையும் உலகங்களையும் சொல்லிவிட்டுத் தனியாகப் பசுக்களையும் பிராம்மணர்களையும் சொல்லி, அவர்கள் சௌக்கியமாக இருக்கட்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? எல்லோரைப் பற்றியும் சொன்ன பிறகு, தனியாக பிராம்மண ஜாதிக்கு சௌக்கியம் உண்டாகட்டும் என்று சொல்லுவது ஒருதலைப்பட்சமாகத் தோன்றும்.
அப்படி ஒருதலைப் பட்சமாக வைத்துக் கொண்டாலும் பசுக்களை ஏன் தனியாகச் சொல்ல வேண்டும்? பசு எல்லோருக்கும் பொதுதானே? ஆகையால் அதன் காரணம் நன்றாக விளங்கவில்லை. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும். இது இப்படி இருக்கட்டும்.
மதுரையில் கூன்பாண்டியன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் சமணர்களுடைய உபதேசத்தால் சமணன் ஆனான். "ஊரில் யாரும் விபூதி பூசக்கூடாது. ருத்திராட்சம் அணியக் கூடாது' என்றும் கட்டளையிட்டான். அவன் மனைவியும் மந்திரியும் சிறந்த சிவபக்தர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அரசனின் கட்டளையை மீற முடியவில்லை.
ஏகாந்தத்தில் வெளியே தெரியாமல் சிவனை வழிபட்டு வந்தார்கள். "எப்போது அரசன் இந்தச் சமண மதத்திலிருந்து திரும்பிச் சிவனை ஆராதிக்கப் போகிறான்?' என்ற கவலையுடன் இருந்தார்கள். இப்படி இருக்கையில், சைவ மத ஸ்தாபகர்களான நால்வருள் முக்கியானவரும் சுப்பிரமணிய சுவாமியின் மனித அவதாரமுமான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் பல பக்தர்களோடு ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் யாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்தச் செய்தியை அறிந்த பாண்டியனுடைய மந்திரியும் மனைவியும் ரகசியமாகச் சுவாமிகளை அடைந்து, மதுரைக்கு வருகை தந்து அரசனுக்கு நல்ல புத்தி போதிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.
ஈசுவர சங்கல்பத்தால் அரசனுக்குக் கடுமையான ஜ்வரம் வந்தது. சமணர்கள் எவ்வளவோ சிரமப்பட்டும் ஜ்வரத்தைத் தணிக்க முடியவில்லை. அந்தச் சமயம் மந்திரி சம்பந்தருடைய அருமை பெருமைகளைச் சொல்ல, அவர் வந்து பார்த்தால் ஜ்வரம் தணிந்து விடும் என்று சொன்னார்.
உலகத்தில் எவ்வளவு பிடிவாதக்காரர்களாயிருந்தாலும் வியாதிகளின் தொந்தரவு தாங்க முடியாதபோது தங்கள் பிடிவாதத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்வது வழக்கம். அதுபோல் அரசனும், சிவபக்தர்களையும் திருநீறு, ருத்ராட்சம் தரித்தவர்களையும் பார்ப்பதுகூட இல்லை என்ற தீவிர எண்ண விரதமுடையவனாயிருந்தும் வியாதியின் தொந்தரவு காரணமாக மந்திரி வேண்டிக் கொண்டற்குச் சம்மதித்தார். மந்திரிக்கும் மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. மிக்க ஆடம்பரமான ஏற்பாடுகளுடன் சம்பந்தரை வரவழைத்தான். சம்பந்தர் அங்கு வந்ததும் சமணர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நேர்ந்தது.
உடனே சம்பந்தர் அவர்களைப் பார்த்து "நீங்கள் அரசனுடைய உடம்பில் வலது பாகத்திலுள்ள ஜ்வரத்தை உங்கள் மந்திர சக்தியால் போக்குங்கள். நான் இடது பாகத்திலுள்ள ஜ்வரத்தை என்னுடைய மந்திர சக்தியால் போகச் செய்கிறேன். நான் போக்கடிக்காவிட்டால் நான் தோற்றவன்' என்றார். உடனே சம்பந்தர் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு' என்று ஆரம்பிக்கும் பத்துப் பாடல்களைச் சொல்லி, விபூதியை எடுத்துப் பாண்டியனுடைய இடது பாகத்தில் பூசினார். உடனே ஜ்வரம் நின்றுவிட்டது.
சமணர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் வலது பாகத்திலுள்ள ஜ்வரத்தைத் தணிக்க முடியவில்லை. உடனே அவர்கள் இடது பாகத்தை வைத்துக் கொள்கிறோம். நீர் வலது பாகத்தை எடுத்துக் கொள்ளும் என்றார்கள். அதற்கும் சம்பந்தர் "சரி' என்று சொல்ல, வலது பக்கத்தில் உள்ள ஜ்வரத்தை தணிக்க அதே பாடல்களை பாடி வலது பக்கத்தில் விபூதியைப் பூசினார். அரசனுக்கு வந்த ஜ்வரம் சாதாரண ஜ்வரம் அல்ல. ஈஸ்வர சங்கல்ப்பத்தால் வந்த ஜ்வரம். ஆதலால் வலது பக்கத்தில் இருந்த ஜ்வரம் திடீரென சமணர்களுடைய பக்கமான இடது பக்கத்திற்கு வந்துவிட்டது. பிறகு சம்பந்தமூர்த்தி சுவாமிகள் அரசர் படும் துன்பத்தை பார்த்து இரக்கம் கெண்டு அந்த ஜ்வரத்தையும் ஒருவாறு தணித்தார்.
இவ்வளவு தூரம் ப்ரத்யக்ஷமாக நடந்தும் சமணர்கள் தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொள்ளவில்லை. அரசனுக்கு பூர்ண நம்பிக்கை ஏற்படவில்லை. இரண்டு பிரிவினர்களும் வாதம் செய்யலாம் என்று ஆரம்பித்தனர். இதற்கு முன்பு சம்பந்தர் கோவிலுக்குப் போய் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வந்தார். "சமணர்கள் வேதத்தையும் யாகத்தையும் நிந்திக்கிறவர்களாகையால், அவர்களை அடக்கி உன்னுடைய புகழே எங்கும் பரவும்படிச் செய்ய வேண்டும்' என்று ஈசனை வேண்டிக் கொண்டார்.
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில் அமணோடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந் தென்
ஆலவாயி லுறையு மெம் ஆதியே'
(சம்பந்தர் தேவாரம் - திருவாலவாய்)
என்று அவர் வேண்டிக் கொண்டு சமணர்களிடம் போனார்.
உடனே சம்பந்தர் சமணர்களைப் பார்த்து "உங்கள் கொள்கைகளை ஓர் ஓலையில் எழுதி, இந்த வைகையாற்று வெள்ளத்தில் போடுங்கள். நானும் என் கொள்கையை எழுதிப் போடுகிறேன். எந்த ஓலை வெள்ளத்தோடு போகாமல் அதை எதிர்த்துச் செல்கிறதோ, அதிலுள்ள கொள்கைதான் உண்மையானது' என்று சொன்னார். அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள். அவர்கள் அவ்வாறே போடவும் சமணர்களின் ஓலை வெள்ளத்தோடு சென்றுவிட்டது. சம்பந்தருடைய ஓலை தண்ணீரில் எதிர்த்துச் சென்றது. பிறகு சமணர்கள் தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு சம்பந்தர், "நாம் இருவரும் முன்போலவே எழுதி ஓலைகளை நெருப்பில் போடுவோம். யாருடைய ஓலை எரிந்து போகிறதோ அவர்கள் தோற்றுப் போனவர்கள்' என்று சொன்னார். அதையும் ஒப்புக் கொண்டு அப்படியே இருவரும் செய்ய, சமணர்களின் ஓலை எரிந்து போயிற்று. சம்பந்தருடைய ஓலையோ அப்படியே இருந்தது.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் அந்த ஓலையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையக மும்துயர் தீர்கவே'
இதன் பொருள்: "பிராம்மணர்கள் சௌக்யமாக வாழ வேண்டும். தேவர்கள் சௌக்யமாக இருக்க வேண்டும். பசுக்கள் சௌக்கியமாக இருக்க வேண்டும். குளிர்ந்த மழை பெய்ய வேண்டும். அரசன் நீதி தவறாமல் ஆள வேண்டும். கெடுதியெல்லாம் தொலைய வேண்டும். உலகம் முழுவதும் "ஹர ஹர மகாதேவ' என்ற வார்த்தை நிரம்பியிருக்க வேண்டும். உலகத்திலேயே துக்கமென்பது இருக்கக்கூடாது.'
சைவர்கள் கொள்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களது முடிவான சித்தாந்தமாகிற இந்தப் பாட்டிலும் பிராம்மணர்களையும் பசுக்களையும் தனியே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இப்பாட்டில் தேவர்களும் சொல்லப்பட்டிருக்கின்றனர். முன்சொன்ன சுலோகத்தில் தேவர்கள் சொல்லப்படவில்லை. இப்படியே நமக்குள் பொதுவாக ஒரு சுலோகமும் வழங்கி வருகிறது.
நமோ ப்ரஹ்மண்யதேவாய கோப்ராஹ்மண ஹிதாய ச!
ஜகத்விதாய கிருஹ்ணாய கோவிந்தாய நமோ நம:!!
(சாந்தி பர்வம் 46 - 12.06)
இதன் பொருள்: "பிரம்மாணர்களுக்கும் பசுவுக்கும் நன்மையைச் செய்யும் கிருஷ்ணனுக்கு வணக்கம்.'
இங்கும் பிராம்மணனும் பசுவும் தனியே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றனர். இப்படிச் சொல்லுவதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.
உலகத்தில் யார் எவ்விதக் கேள்வி கேட்டாலும் அதற்கெல்லாம் தகுந்த பதில் கீதாசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸர்வோப நிஷதோ காவோ தோக்தா
கோபாலநந்தந:!
பார்த்தோ வத்ஸ: சுதீபோர்க்தா தக்தம்
கீதாம்ருதம் மஹத்!!
(கீதா மங்களா சரணம் - 4)
"எல்லா உபநிடதங்களும் பசுக்களாம். அவைகளைக் கறக்கும் இடையன் ஸ்ரீகிருஷ்ணபகவான். அப்பசுக்களின் கன்று அர்ஜூனன். அப்பசுக்களின் கறந்தபால் கீதையென்பதாகும். பாலைக் குடிப்பவர்கள் வித்வான்கள்.'
உலக வழக்கில் ஓர் இடையன் பால் கறக்க வேண்டுமென்றால் மாட்டுடன் கன்றையும் கொண்டுபோக வேண்டும். பால் கன்றுக்கும் மற்றவர்களுக்கு உபயோகப்படுவது போல பகவத் கீதை யாருக்கு எந்தவித சந்தேகம் தோன்றினாலும் அதைப் போக்கும். யார் எவ்விதக் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் அதிலிருக்கும். அநேக க்ரந்தங்கள் இருந்தாலும் நான் ஏன் இதை எடுத்துக் கொண்டேன் என்றால் அதற்கு ஒரு காரணமுண்டு. இக்காலத்தில் எல்லோரும் கீதை உயர்ந்த தத்துவ நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களல்லவா? அதில் சொல்லும் தத்துவங்கள் என்ன என்பதில் விவாதங்கள் இருந்தாலும் கீதை உயர்ந்த தத்துவ நூல் என்பதில் ஒருவருக்கும் ஆட்சேபமில்லை. இப்படிப் பெரியவர்கள் ஒப்புக் கொண்ட புத்தகத்திலிருந்து நான் முன் சொன்ன சந்தேகத்திற்குத் தகுந்த பதில் கிடைக்குமானால் நீங்கள் எல்லோரும் நிச்சயமாக நம்பிக்கையடைவீர்கள் என்று எண்ணித்தான் அதைச் சொல்ல எடுத்துக் கொண்டேன்.
இவ்வுலகில் மனிதர்களாகிய நம்முடைய ஜீவன வழிமுறைகளைக் கவனிப்போம். ஒரு ஊரில் ஒரு பொருள் அதிகமாக விளைந்தால் அதை அந்தப் பொருள் விளையாத ஊருக்கு அனுப்பி, நம் ஊரில் விளையாததும் அந்த ஊரில் விளைவதுமான மற்றொரு பொருளை வாங்கி வருகிறோம். அதுபோல தச்சன், கொல்லன் மதலியவர்கள் நமக்காகச் சில காரியங்களைச் செய்கிறார்கள். நாம் அவர்களுடைய பிழைப்பிற்கு வேண்டியவைகளைக் கொடுக்கிறோம். பசுக்களுக்குப் புல் போடுகிறோம். அவை பால் கொடுக்கின்றன. நாம் அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறோம். அவர்கள் நமக்குத் தீங்கு வராமல் காவல்கட்டுச் செய்கிறார்கள். இப்படி உலகம் முழுவதுமே பரிவர்த்தனை முறையில் நடந்து வருகின்றது. இப்படியே நாம் உலக வழக்கில் சில பரிவர்த்தனை செய்து வருகின்றோம். இன்ஜினியர் முதலியவர்கள் பெய்த மழை நீரை ஒழுங்காகப் பிரித்து ஆறு முதலியவைகளில் பாயும்படி விடுவார்களேயொழிய மழை பெய்யும்படி செய்ய அவர்களால் முடியாது. மழை வேண்டுமானால் நாம் சில பொருட்களைத் தேவலோகத்திற்கு அனுப்ப வேண்டும். இதுவே கீதையில் சொல்லியிருக்கிறது.
ஸஹயக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா
புரோவாச ப்ரஜாபதி:!
அநேந ப்ரஸவிஷ்யத்வம் ஏஷவோ
அஸித்விஷ்ட காமதுக்!!
தேவான் பாவயதாநேந தே தேவா
பாவயந்து வ:!
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய:
பரமவாப்யஸ்யத:!!
(கீதை 3 - 1011)
இதன் பொருள்: முதன்முதலில் பிரம்மா மக்களோடு யாகத்தையும் படைத்தார். அப்பொழுது அவர்களைப் பார்த்து "இந்த யாகத்தைச் செய்து நீங்கள் நலனை அடையுங்கள். இந்த யாகங்கள் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைக்கட்டும்! இந்த யாகத்தை கொண்டு நீங்கள் தேவர்களைத் திருப்தி செய்துவையுங்கள். அந்தத் தேவர்கள் மழை முதலியவற்றால் உங்களுக்கு நன்மை செய்யட்டும்! இப்படியே நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மேலான நலன்களை அடையுங்கள்' என்று சொன்னார்.
யாகம் என்பது மந்திரம், தேவதை, ஹவிஸ் (தேவர்க்கான உணவு) என்று மூன்று ஸ்வரூபமாக (வடிவமாக) உள்ளது. அவைகளுள் மந்திரம் பிராம்மணனால் சொல்லப்பட வேண்டும். தேவதையை மனதால் தியானம் செய்ய வேண்டும். ஹோமம் செய்வதற்கு முக்கியமாக வேண்டியது பசுவின் நெய். இந்தக் காலத்தில் பிராம்மணர்கள் பெரும்பாலும் இங்கிலீஷ் படிக்கிறார்கள். அவர்கள் வேதாத்யயனம் (வேதம் ஓத) பயிலுவதில்லை. இங்கிலீஷ் படித்தவர்களுக்கு, பிறகு வேதம் ஓதும் பயிற்சி செய்தாலும் சரியான உச்சரிப்பு செய்ய முடிவதில்லை. ஆகையால் தற்காலத்தில் மந்திர சுத்தி (மந்திரங்களின் தூய்மை) இல்லை. கர்மாக்களை (வைதீக காரியங்களை) ஒழுங்காக ஒருவரும் செய்யாததால் தேவதாத்தியானமும் (தேவதைகளைத் தியானம் செய்வதும்) சரியாயில்லை. பசுவின் பால் தற்காலத்தில் பெரும்பாலும் காபிக்கு உபயோகப்பட்டு விடுகிறது. ஆகையால் சுத்தமான நெய்யும் கிடைப்பதில்லை. ஆதலால் திரவிய சுத்தியும் இல்லை.
யாகத்திற்கு முக்கியமான மந்திரத்தை அத்யயனம் செய்வதால் (ஓதுவதால்) பிராம்மணனையும் ஹோமத்ரவ்யமான (அக்னியில் சொரியும்) நெய்யைக் கொடுப்பதால் பசுவையும் எல்லாவிடத்திலும் மேற்கண்ட சுலோகங்களிலும் திருஞானசம்பந்தர் பாசுரத்திலும் தனியாகச் சிறப்பித்துக் கூறியதாக எண்ண வேண்டியிருக்கிறது. யாகத்தினால் ஏற்படும் பலன் பிராம்மணர்களுக்கும், பசுவிற்கும் மட்டும் இல்லை. உலகத்தில் எல்லோருக்குமே நலனைக் கொடுப்பது யாகம். யாகங்கள் செய்வதால்தான் உலகம் நலமாக இருக்கும். யாகம் ஒழுங்காக நடைபெற வேண்டுமானால், பிராம்மணர்களும் பசுக்களும் ÷க்ஷமமாக இருக்க வேண்டும்.
தற்காலத்தில் வேதாத்யயனம் செய்யாத பிராம்மணர்கள், தாங்கள் வேதாத்யயனம் செய்யவில்லையே என்று வருத்தப்படுவதோடு, வேதாத்யயனம் செய்யும் பிராம்மணர்களை அலட்சியம் செய்யாமல் மரியாதையாக நடத்த வேண்டும். கூடுமான வரையில் எல்லோரும் காபியை நிறுத்த வேண்டும். கொஞ்சமாவது வேதாத்யயனம்(வேதம் ஓதும் பயிற்சி) செய்தல் வேண்டும். பஞ்ச மஹா யக்ஞங்களையும் (ஐம்பெரும் வேள்விகளையும்) முடிந்தவரை செய்ய வேண்டும்.
இந்து மதப் பிரிவுகள் சில கொள்கை வேறுபட்டால் பலவகையாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் பொதுவான கொள்கை ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
பொதுவாக, உலகத்தின் நலனுக்கு பிராம்மணர்களும் பசுக்களும் முக்கிய காரணங்களாக இருப்பதால்தான் எல்லா இந்து மத பிரிவினர்களும் பிராம்மணர்களையும் பசுக்களையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று எண்ண வேண்டியிருக்கிறது.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM