Post by radha on Mar 24, 2015 7:58:19 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
கர்மானுட்டானமும் பக்தி யோகமும்
Posted on November 5, 2014 by செங்கோட்டை ஸ்ரீராம் in ஆன்மிக விளக்கங்கள்
DINAMANI--JODHIDAM SECTION
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
? இந்த வர்த்தக உலகில் தமக்குத்தாமே நல்லது செய்து கொள்ளத்தானே இந்த அளவுக்கு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதற்கே நேரம் போதாமல் பரபரப்பாகச் சுற்ற வேண்டியிருக்கிறதே.
* மற்றவர்களுக்குச் சேவை புரிவதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்களை, தியாகங்களை, உடல் சிரமத்தை எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக அதிலேயே ஒரு நிறைவை சந்துஷ்டியை நமக்குள் ஏதோ ஒன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை & இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூகசேவை வேறா என்று எண்ணக் கூடாது.
உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட “அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான்…
ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும், அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒருபக்கம் இருக்கட்டும்; நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.
2.
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
? பகவதானுபவத்தை அனுபவிக்க, கர்மமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி இரண்டு… சரி! சேவை என்ற பரோபகார மார்க்கமும் உண்டு என்கிறார்களே… இது பற்றிய பண்டைய வழக்கம் ஏதும் உண்டோ?
* அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூக சேவை, ஸோஷியல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் “பூர்த்த தர்மம்’ என்று ஒரு பெயர்.
ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம், ஆத்ம «க்ஷமத்துக்காகக் கோயில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் “பூர்த்த தர்மத்தில்’ சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சுவழக்கில்கூட “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
வெட்டிக் கொண்டு இருக்கிறானா?’ என்கிறோம். “வெட்டுவது அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகக் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம்.
ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் & பணக்காரர், ஏழை என்கிற வித்யாசமில்லாமல் & ஒன்றுசேர்ந்து மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபடவேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்குசுத்தமாக சுலோகம் & இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும்.
உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும்.
குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய், அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் – அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்மலாபமும் ஆகும்.
3.
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
?”பத்தினியிடமும் பிள்ளையிடமும் மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம். நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம்’ என்று யாக்ஞவல்கிய உபநிஷத் உபதேசம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால், பர உபகாரம் என்பதை சுயநலம் என்றே எடுத்துக் கொள்ளலாமா?
* நேரடியாக நமக்கே நல்லது செய்து கொள்ளவேண்டும் என்று, பணத்தையும், இந்திரிய சுகங்களையும் தேடிப் போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுயகாரியங்கள் நிம்மதியின்மையிலும் துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.
கண்ணாடியில் நமது முகத்தைப் பார்க்கிறோம். அதன் நெற்றியில் பொட்டில்லை என்று தெரிகிறது. உடனே கண்ணாடிக்குச் சாந்து இட்டால் என்ன ஆகும்? கண்ணாடி கறுப்பாகும். பிம்பத்துக்குப் பொட்டு வைப்பது என்றால், பிம்பத்தின் மூலமான மனிதனுக்குத்தான் பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.
“எனக்கு’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் உண்மையில் நம் மனசுக்குக் கரிப்பொட்டு வைப்பதாகவே & நமக்கு நாமே கரியைப் பூசிக் கொள்வதாகவே & முடிகிறது. மனசு என்கிற மாயக் கண்ணாடியில் பிரதிபலிக்கிற பரமாத்ம பிம்பத்தையே “நான்’ என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு அழகு செய்வது என்றால் உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும்.
பரமாத்ம ஸ்வரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத் தருகிறது. இதே மாதிரிதான் அந்தப் பரமாத்வையே பூஜிப்பதும், தனக்கு என்று வைத்துக் கொள்கிற கரிப்பொட்டு, இப்போதுதான் அலங்கார திலகமாகிறது.
4.
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
? பரோபகார சிந்தை உள்ளவன், தன்னுடைய கர்ம மார்க்கமான பரோபகார மார்க்கத்தில் வெற்றியடைய வழி என்ன?
* நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு, எல்லோரும் ஒரே சங்கமாக, ஒரே அபிப்ராயமாக இருந்துகொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது, நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும் உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது, வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை.
லௌகீக சேவை மட்டும் இல்லை; ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக் கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுக்கெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்கவேண்டும்& தைரியம், ஊக்கம் இவற்றோடு!
- SSRI KANCHI MAHA PERIVA ThIRUVADigAL CHARANAm.
கர்மானுட்டானமும் பக்தி யோகமும்
Posted on November 5, 2014 by செங்கோட்டை ஸ்ரீராம் in ஆன்மிக விளக்கங்கள்
DINAMANI--JODHIDAM SECTION
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
? இந்த வர்த்தக உலகில் தமக்குத்தாமே நல்லது செய்து கொள்ளத்தானே இந்த அளவுக்கு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதற்கே நேரம் போதாமல் பரபரப்பாகச் சுற்ற வேண்டியிருக்கிறதே.
* மற்றவர்களுக்குச் சேவை புரிவதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்களை, தியாகங்களை, உடல் சிரமத்தை எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக அதிலேயே ஒரு நிறைவை சந்துஷ்டியை நமக்குள் ஏதோ ஒன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை & இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூகசேவை வேறா என்று எண்ணக் கூடாது.
உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட “அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான்…
ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும், அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒருபக்கம் இருக்கட்டும்; நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.
2.
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
? பகவதானுபவத்தை அனுபவிக்க, கர்மமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி இரண்டு… சரி! சேவை என்ற பரோபகார மார்க்கமும் உண்டு என்கிறார்களே… இது பற்றிய பண்டைய வழக்கம் ஏதும் உண்டோ?
* அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூக சேவை, ஸோஷியல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் “பூர்த்த தர்மம்’ என்று ஒரு பெயர்.
ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம், ஆத்ம «க்ஷமத்துக்காகக் கோயில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் “பூர்த்த தர்மத்தில்’ சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சுவழக்கில்கூட “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
வெட்டிக் கொண்டு இருக்கிறானா?’ என்கிறோம். “வெட்டுவது அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகக் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம்.
ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் & பணக்காரர், ஏழை என்கிற வித்யாசமில்லாமல் & ஒன்றுசேர்ந்து மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபடவேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்குசுத்தமாக சுலோகம் & இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும்.
உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும்.
குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய், அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் – அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்மலாபமும் ஆகும்.
3.
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
?”பத்தினியிடமும் பிள்ளையிடமும் மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம். நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம்’ என்று யாக்ஞவல்கிய உபநிஷத் உபதேசம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால், பர உபகாரம் என்பதை சுயநலம் என்றே எடுத்துக் கொள்ளலாமா?
* நேரடியாக நமக்கே நல்லது செய்து கொள்ளவேண்டும் என்று, பணத்தையும், இந்திரிய சுகங்களையும் தேடிப் போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுயகாரியங்கள் நிம்மதியின்மையிலும் துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.
கண்ணாடியில் நமது முகத்தைப் பார்க்கிறோம். அதன் நெற்றியில் பொட்டில்லை என்று தெரிகிறது. உடனே கண்ணாடிக்குச் சாந்து இட்டால் என்ன ஆகும்? கண்ணாடி கறுப்பாகும். பிம்பத்துக்குப் பொட்டு வைப்பது என்றால், பிம்பத்தின் மூலமான மனிதனுக்குத்தான் பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.
“எனக்கு’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் உண்மையில் நம் மனசுக்குக் கரிப்பொட்டு வைப்பதாகவே & நமக்கு நாமே கரியைப் பூசிக் கொள்வதாகவே & முடிகிறது. மனசு என்கிற மாயக் கண்ணாடியில் பிரதிபலிக்கிற பரமாத்ம பிம்பத்தையே “நான்’ என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு அழகு செய்வது என்றால் உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும்.
பரமாத்ம ஸ்வரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத் தருகிறது. இதே மாதிரிதான் அந்தப் பரமாத்வையே பூஜிப்பதும், தனக்கு என்று வைத்துக் கொள்கிற கரிப்பொட்டு, இப்போதுதான் அலங்கார திலகமாகிறது.
4.
காஞ்சி மகாபெரியவரின் விளக்கங்கள்!
? பரோபகார சிந்தை உள்ளவன், தன்னுடைய கர்ம மார்க்கமான பரோபகார மார்க்கத்தில் வெற்றியடைய வழி என்ன?
* நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு, எல்லோரும் ஒரே சங்கமாக, ஒரே அபிப்ராயமாக இருந்துகொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது, நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும் உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது, வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை.
லௌகீக சேவை மட்டும் இல்லை; ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக் கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுக்கெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்கவேண்டும்& தைரியம், ஊக்கம் இவற்றோடு!
- SSRI KANCHI MAHA PERIVA ThIRUVADigAL CHARANAm.