|
Post by saidevo on Mar 3, 2015 7:47:45 GMT 5.5
பிரதோஷத் துதி வானப் பிரத்த வேசம் (எண்சீர் விருத்தம்: தேமா புளிமா விளம் மா அரையடி)
வானப் பிரத்த வயதெனும் போதும் . வாழும் வகையில் மாறுதல் இல்லை மோனம் சிறிதும் பயிலுதல் யின்றி . மூடன் எனவே அலைவதில் இவன்றன் ஊனின் பெருக்கில் உயிரொளி சுருங்க . உள்ளம் முழுதும் அல்லவை சேர்த்தான்! ஞானத் திரளாய்ப் பொலிவுறும் பெம்மான் . நலியும் இவனை உயர்த்துவ தென்றோ? ... 1
பண்ணும் இசையும் செவியுறும் போது . பம்மும் இருளைச் சிலகணம் கரைத்தான் கண்ணும் கரமும் குவிந்திடும் போது . கட்டுண் டுளத்தைச் சிலகணம் நிறைத்தான் விண்ணில் நிறங்கள் கலந்திடும் நேரம் . விஞ்சும் இறைமை விழிகளில் இறைத்தான் எண்ணம் உடனே இருமையைத் தேட . எல்லாம் சிதறி இறையுணர் வறுமே! ... 2
கண்ணும் கருத்தும் உலகியல் இனிமை . காணும் வழியில் சென்றிடும் போதும் வெண்ணீ றணிதல் பூசனை செய்தல் . வேசம் எனநீ அறிந்திடும் போதும் தண்ணென் றுனது திருவருட் தெளிவை . சற்றே யிவனுக் களித்திவன் வாணாள் பண்ணும் வினையால் தீமையென் றெதுவும் . பற்றா திருக்க அருள்புரி வாயே! ... 3
--ரமணி, 02/03/2015, கலி.18/11/5115
*****
|
|
|
Post by kahanam on Mar 19, 2015 23:46:29 GMT 5.5
Om Nama Shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|