Post by radha on Feb 24, 2015 12:23:50 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
உபநிஷத் காட்டும் குரு தத்துவம்!
By காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்
First Published : 08 August 2013 03:10 PM IST
சார்யாள் உபநிஷத்திடம் அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு, இல்லாததை எல்லாம் சொன்னதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. ஆசார்யன் மூலமாகத்தான் ஞானம் என்பதே உபநிஷத் மதம். பல இடங்களில் அப்படி இருக்கிறது.
கண்காணாக் காட்டிலே கண்ணைக் கட்டிக் கொண்டு விடப்பட்டவனுக்கு எப்படி ஏற்கெனவே வழி கண்டவர்களே வழி சொல்லித் தந்து காப்பாற்ற முடியுமோ, அப்படி அஞ்ஞான ஜீவிக்கு ஞானியான குருதான் ஞான ஸித்திக்கு வழி சொல்லித் தர முடியும் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் இருக்கிறது. அந்த இடத்தில்தான், ஆசார்யன் ஆன மனிதனுக்கே ஞானம் உண்டாகும் - "ஆசார்யவான் புருஷோ வேத' என்று வருகிறது.
"குரும் ஏவ அபிகச்சேத்' - குருவையே தேடிக் கொண்டு போய் அடைய வேண்டும் என்று முண்டக உபநிஷத் சொல்கிறது. வஸ்துகளை அலசி ஆராய்ந்து பார்த்தவனை ஐதரேய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது என்றால் இங்கே உலகங்களை சோதித்துப் பார்த்தவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இரண்டும் ஒன்றுதான். அப்புறம் அவனுக்குத் தானாக ஞானம் வந்த மாதிரி விஷயம் தெரியாதவர்களுக்குத் தோன்றும்படி ஐதரேய மந்திரங்கள் போகின்றன.
ஆனால் இங்கேயோ, உலகங்களை சோதித்துப் பார்ப்பவன், இவையெல்லாம் கர்ம சம்பந்தப்பட்டவையே. ஆத்வ தத்வமோ கர்மம் இல்லாதது. அதைக் கர்ம சம்பந்தம் உள்ளவற்றால் அடைய முடியாது என்று புரிந்து கொண்டு உலகத்திடம் வைராக்யம் அடைய வேண்டும். அப்புறம் ஆத்மாவை அடைந்து, அறிந்து, அனுபவிப்பதன் பொருட்டு குருவையே தஞ்சம் புக வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.
குருவையே அடைய வேண்டும் என்று இருப்பதற்கு குருவை அடைந்தே ஆக வேண்டும் என்று பொருள். வேறு வழியே கிடையாது என்று அர்த்தம். அடுத்த மந்திரத்தில் ப்ரஹ்ம ஞானியான அந்த குரு அவனுக்கு ப்ரஹ்ம வித்யையை உள்ளவாறு உபதேசித்து உய்வு தருவார் என்று வருகிறது.
எனவே இந்த வாசகத்துக்கு பாஷ்யம் செய்யும் போது நன்றாக சாஸ்திரங்கள் அறிந்த சாஸ்த்ரஜ்ஞன்கூட சுதந்திரமாக தானே பிரம்ம ஞான ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது என்று வலியுறுத்தி தெரிவிப்பதற்காகத்தான் குரும் ஏவ- குருவையே - என்று போட்டிருக்கிறது என்று ஆசார்யாள் தெளிவு படுத்தியிருக்கிறார்.
SRIKANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
உபநிஷத் காட்டும் குரு தத்துவம்!
By காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்
First Published : 08 August 2013 03:10 PM IST
சார்யாள் உபநிஷத்திடம் அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு, இல்லாததை எல்லாம் சொன்னதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. ஆசார்யன் மூலமாகத்தான் ஞானம் என்பதே உபநிஷத் மதம். பல இடங்களில் அப்படி இருக்கிறது.
கண்காணாக் காட்டிலே கண்ணைக் கட்டிக் கொண்டு விடப்பட்டவனுக்கு எப்படி ஏற்கெனவே வழி கண்டவர்களே வழி சொல்லித் தந்து காப்பாற்ற முடியுமோ, அப்படி அஞ்ஞான ஜீவிக்கு ஞானியான குருதான் ஞான ஸித்திக்கு வழி சொல்லித் தர முடியும் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் இருக்கிறது. அந்த இடத்தில்தான், ஆசார்யன் ஆன மனிதனுக்கே ஞானம் உண்டாகும் - "ஆசார்யவான் புருஷோ வேத' என்று வருகிறது.
"குரும் ஏவ அபிகச்சேத்' - குருவையே தேடிக் கொண்டு போய் அடைய வேண்டும் என்று முண்டக உபநிஷத் சொல்கிறது. வஸ்துகளை அலசி ஆராய்ந்து பார்த்தவனை ஐதரேய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது என்றால் இங்கே உலகங்களை சோதித்துப் பார்த்தவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இரண்டும் ஒன்றுதான். அப்புறம் அவனுக்குத் தானாக ஞானம் வந்த மாதிரி விஷயம் தெரியாதவர்களுக்குத் தோன்றும்படி ஐதரேய மந்திரங்கள் போகின்றன.
ஆனால் இங்கேயோ, உலகங்களை சோதித்துப் பார்ப்பவன், இவையெல்லாம் கர்ம சம்பந்தப்பட்டவையே. ஆத்வ தத்வமோ கர்மம் இல்லாதது. அதைக் கர்ம சம்பந்தம் உள்ளவற்றால் அடைய முடியாது என்று புரிந்து கொண்டு உலகத்திடம் வைராக்யம் அடைய வேண்டும். அப்புறம் ஆத்மாவை அடைந்து, அறிந்து, அனுபவிப்பதன் பொருட்டு குருவையே தஞ்சம் புக வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.
குருவையே அடைய வேண்டும் என்று இருப்பதற்கு குருவை அடைந்தே ஆக வேண்டும் என்று பொருள். வேறு வழியே கிடையாது என்று அர்த்தம். அடுத்த மந்திரத்தில் ப்ரஹ்ம ஞானியான அந்த குரு அவனுக்கு ப்ரஹ்ம வித்யையை உள்ளவாறு உபதேசித்து உய்வு தருவார் என்று வருகிறது.
எனவே இந்த வாசகத்துக்கு பாஷ்யம் செய்யும் போது நன்றாக சாஸ்திரங்கள் அறிந்த சாஸ்த்ரஜ்ஞன்கூட சுதந்திரமாக தானே பிரம்ம ஞான ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது என்று வலியுறுத்தி தெரிவிப்பதற்காகத்தான் குரும் ஏவ- குருவையே - என்று போட்டிருக்கிறது என்று ஆசார்யாள் தெளிவு படுத்தியிருக்கிறார்.
SRIKANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM