சங்கரர் என்ற சங்கீதம்--பகுதி 5----நிறைவுப் பகுதி..
Feb 16, 2015 20:13:04 GMT 5.5
Sumi and radha like this
Post by anusham163 on Feb 16, 2015 20:13:04 GMT 5.5
சங்கரர் என்ற சங்கீதம்.
பகுதி 5.
பெரியவாள்தான் அதைக் கலைத்தவர். ‘கலைப்பது’ என்பதையும் அவர் செய்தால் அது கலை நயத்துடந்தானே இருக்கும் ? மஹா கலைஞர் சொன்னார் :
“ஆசிரியர்’---ங்கறதே ‘ஆசார்யார்’—ங்கிறதோட திரிபுதான். டீச்சரும் ஆசிரியர்; எடிடரும் ஆசிரியர்—னு வெச்சுண்டிருக்கோம். எங்களையெல்லாம் ‘ஆசார்யர்’ என்கிறதும் நாங்கள் டீச் பண்ணுபவர்கள் என்கிறதால்தான். நீ இப்ப எனக்கு எடிடர்---ஆசிரியர் உத்யோகம் வேறே குடுக்கறே !
“ஈச்வரனே கர்த்தாவாவும், நாம அவன் கைக்கருவியாவுமே இருக்கணும்னு மஹான்கள் வேண்டிண்டிருக்கா, பாடி வெச்சுருக்கா. அப்டி, ‘கருவியா இருக்கணும்’னுதான், பொதுவில் சொல்றது. இப்ப, நீதான் ‘கார்யமா இருக்கணும்’னு புதுசா சொல்லியிருக்கே ! இந்த அபிப்ராயமும் ரொம்ப அழகாயிருக்கு. கருவின்னா, அதுக்குக் கர்த்தா குடுக்கற இம்பார்டன்ஸ், அது கார்யம்னு வேறே ஒண்ணைப் பண்றது -- ங்கிற அளவோட நின்னுடறது. கார்யம்தான் அவனுக்கு அதைவிட இம்பார்டன்ட். அந்தக் கார்யத்தைப் பண்ணக் கருவி ப்ரயோஜனப்படறதுங்கறதாலேயேதான் அதுக்கும் கொஞ்சம் இம்பார்டன்ஸ். கர்த்தா என்ன நெனக்கறானோ அதைப் பண்ண உதவியாயிருக்கறதோட கருவி நின்னுடறது. அவன் என்ன நெனச்சானோ அதுவே அவனொருத்தனுக்கு மாத்ரமில்லாம எல்லாருக்கும் சேத்து ஒரு ரூபமா, எல்லாருக்கும் ப்ரயோஜனமா ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகியிருக்கறதுதான் கார்யம். கவி இருக்கான், அவனுக்கு நெனப்புல கவிதா சிந்தனை உண்டாறது, அவன் அதை எல்லாருக்கும் ப்ரயோஜனமா காவ்யம்னு எழுதி வெக்கணும்னு நெனக்கறான், பேனாவிலே எழுதறான்னா --- பேனா கருவி, காவ்யம் கார்யம் இல்லியா ? அந்த ரெண்டில் எதுக்கு இம்பார்டன்ஸ், எதுக்கு செறப்பு, எதுதான் கவியோட லக்ஷ்யமும் ?
“இப்பதான் எனக்கே ஸரியா தெளிவாயிருக்கு. கர்த்தாவோட லக்ஷ்ய பூர்த்தியே கார்யத்துலதான் இருக்கு ! இன்னுங்கூட தெளிவா --- கருவி means தான்; கார்யந்தான் end.
“இன்னூணுகூட ! கர்த்தாவோட ஸாமர்த்யமே கார்யத்லதான் தெரியறது. அவனே அதுல ரிஃப்ளெக்ட் ஆறான்; கவியோட ப்ரதிபை கவிதையினாலேதானே வெளிப்படறது ? பேனாவுக்கு அதுல என்ன பங்கு ?(கையினால் ஸைஃபர் போட்டுக் காட்டுகிறார் ).
ஐடியா குட்டி போட்டுண்டே போறது !.... கவிதையோட, காவ்யத்தோட ரஸத்தைக் கருவி ---பேனா அநுபவிக்கறதில்லே. கவிதைக்கு மூலமான கவியோட ரஸபா (BHA)வங்களைப் பத்தி அதுக்கு ஒண்ணும் தெரியாது. கவிதைதான் அந்த ரஸபாவ ரூபகமாகவே இருக்கறதாலே அதை ரஸிக்கறதுக்கும் மேலே அதுவாகவே இருக்கு (சிரித்து) பகவானோட குணகணங்களை ரஸிக்கற பக்தருக்கு மேலே அவனோட ஐஸ்வர்யங்களையே பெத்துண்ட மஹாயோகியாட்டம் ! கவிக்கு வேறா காவ்யமே இல்லை; கர்த்தாவுக்கு வேறா கார்யமே இல்லை ! அனா பேனா அவனுக்கு வேறேதானே ? இப்படி ஒன் ப்ரார்த்தனையிலே, நீ ப்ரார்த்தனை பண்றவருக்கு (‘எனக்கு’ என்று சொன்னால் என்ன வந்து விடுமாம் ?) வேறேயா நீன்னே ஒண்ணு இருக்கப்படாது—ங்கற அபிப்ராயமும், ஆசையும் தொக்கி நிக்கறது. நல்…ல பா(BHA)வம் !
கவி, காவ்யம்னு நான் சொல்றது, நீ ‘ஆதர்’, ஆர்டிகிள்’னு சொன்னதுதான். ஆதரோட பர்பஸ் ஃபுல்ஃபில் ஆறது ஆர்டிகிள்—லதானே ? அதுக்கு உபகரணம் வேண்டியிருக்கு---ங்கறதுக்காகத்தானே பேனாவை நாடறது ?
கர்த்தா கார்யத்தைப் பெறுகிறதாலே அவனுக்கு அது கொழந்தையாட்டமா ! அவன் அதுக்கு அம்மாவோ, அப்பாவோ, இரண்டுமோ, அப்டி ஒரு வாத்ஸல்யமும் அவனுக்கு அதுகிட்ட இருக்கும். வெளில அப்டி தெரியாதுதான். அனா அதை அவன் அருமையா நெனக்கறானோ இல்லியோ ? அது வாத்ஸல்யத்தோட ரூபம்தான்….
ஈஸ்வரனோட கார்யமா இருக்கறதுன்னா அவனுடைய மஹாமதியில உண்டான ஒரு சிந்தனையை ---ஸங்கல்பத்தை’ன்னு சொல்லணும்; அதை --- லோகத்துக்குப் ப்ரயோஜனமா ரூபப்படுத்திக் காட்டறதா ஆகும். இங்கே ஈஸ்வர சங்கல்பமே கருவியாகவும் இருந்து இவனைக் கார்யமாக்கினதாக ஆகிறது…..
“பொதுவா ஒரு பக்தனைக் கருவியாக்கிண்டு ஈஸ்வரன் தன் ஸங்கல்பத்தை நிறைவேத்திகறான்னு சொல்றப்ப, கார்யத்தை அந்த ஈஸ்வரனே பண்ணிண்டுடறான்னு அர்த்தம் குடுக்கறது. வெளிப்பார்வைக்குக் கார்யம் யாரோ மனுஷ்யராலே நடக்கறது; ஆனா அவருக்குள்ளேயிருந்திண்டு அவரைத் தூண்டிண்டு அப்படிப் பண்றவன் வாஸ்த்தவத்துல ஈச்வரனேதான் –கிற அபிப்ராயத்துல இப்டி சொல்றோம்.
“ஆலோசனைப் பண்ணிப் பார்த்தா அவனோட ஸங்கல்பமே கருவியும் -- கிற மாதிரி, லோக வழக்குல கருவின்னு சொல்ற மனுஷ்யர் கார்யமுமாத்தான் இருக்கார்னு தெரியறது. அது மட்டுமில்லாம கர்த்தாவுக்கு வேறேயா இவர்னு ஒருத்தர் கெடையவே கெடையாது---ங்கறதுனாலே கர்த்தாவுங்கூட இருக்கார் ! ‘முடிவா கருவி, கார்யம், கர்த்தா எல்லாம் நீயே’ன் ஈச்வரனைத் துதிக்கிறதும் இருக்கோன்னோ ? இப்ப நாம பாத்துண்டு போரதுலேயோ, வேடிக்கையா, கருவி—ங்கறவனேகூட அந்த மூணாவும் இருக்கான்—னு தெரியறது. ……………………………………………………………
……………………………………………………………………………..”இப்ப ஈச்வரனோட கருவியா இருந்தவான்னு சொல்ற ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமி மாதிரியானவாளை எடுத்துப்போம். அவர் பாடினது, மதத்தை நெலை நாட்டினது தவிர அவாளோட வாழ்க்கை, அவா வாழ்ந்த விதம் –கிறதும் இருக்கு. அதைப் படிச்சுப் பாத்தா, நெனச்சுப் பாத்தாலே நமக்கு ஆனந்தமாயிருக்கு; நம்ம அழுக்கைக் கொஞ்சம் அலம்பி விட்டாப்பல, சுத்தியா, சாந்தமா இருக்கு. அவாளை எதுக்குக் கருவியா ஈச்வரன் அனுப்பினான்னு சொல்றாளோ, அந்தப் புனருத்தாரண கார்யம் பூர்த்தியான அப்புறமும் எத்தனை நூறு, ஆயிரம் வருஷத்துக்குப் பிற்பாடும், கருவியே ஜீவசக்தியோட இருந்துண்டு தனித் தனியா அநேகம் பேரை உத்தரிக்கிற காரியத்தைப் பண்ணுண்டிருக்கு. கருவிக்கு இம்பார்டன்ஸ் குடுக்காம, கார்யத்தையே கவனிக்கறதுன்னு இல்லாம இங்கே கருவி—ங்கறத்துக்கேதான் இம்பார்டன்ஸ் (விடாத குறுஞ்சிரிப்புடன் சொல்கிறார் ) ஞானம்,--ஞேயம்—ஞாத்ரு [அறிவு -- அறியப்படுவது ---அறிபவன்], ‘த்ருக்—த்ருச்யம்—த்ரஷ்டா [பார்வை---பார்க்கப்படுவது—பார்ப்பவன்]—ன்னு வேதாந்தத்திலே மொதல்ல மூணாகப் பிரிச்சுச் சொல்லி, முடிவா, ‘எல்லாம் ஒண்ணுதான்’’ என்று ஸ்தாபிச்சிருக்கும். அப்டி, நீ ஆர்டிகிள் ஆகணும்னு சொல்லப்போக, கர்த்தா—கரணம் (கருவி)—கார்யம்னு பிரிச்சுப் பிரிச்சு அலசி, கடைசியிலே எது என்னன்னே பிரிக்கவே முடியாது, ‘எல்லாம் ஒண்ணுதான்’ –கிற அபிப்ராயத்தில் கொண்டு விட்டிருக்கு. நாம அத்வைதிகளோல்லியோ ?
(குறுஞ்சிரிப்பு, மலர்ந்த சிரிப்பாகவே முட்டிவர) “நான் ஆதராய், நீ ஆர்டிகிளாகணும்னு வேண்டிண்டே ! என்ன ஆயிருக்குன்னா,--நீ ‘ஸூத்ரக்கார’னாச் சின்னதா ஒரு வாக்யம் சொன்னே; நான் அதுக்கு பாஷ்யக்காரனா இத்தனை சொல்லி, சொன்னவிட்டும், இன்னும் பூர்த்தியானதாத் தெரியலியே, பூர்த்தி பண்ணவும் தெரியலையேன்னு முழிச்சுண்டு நிக்கறதா இருக்கு.
“பூர்த்தி ஒண்ணுதான் ! ஆசார்யள் சொல்லிட்டுப்போன “எல்லாம் ஒண்ணு”—ங்கிறதுதான்.
ஒன்னை, என்னை இன்னும் எல்லாரையும் அம்பாளே ஆதரா இருந்து அழகழகான ஆர்டிகிளா எழுதி வெக்கட்டும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்……”
அத்தனை வேடிக்கையின்பமும் க்ஷணத்தில் ஹ்ருதயாரங்க ப்ர்ரர்த்தனா பா (BHA)வத்தில் கரைய ஸ்ரீசரணாள் கை குவித்துக் கண் மூடினார்.
ஜீவன் அதன் அடிவேரிலிருந்து குலுங்கியது.
அம்பாளே ஆதராகி அவளது அழகு ஆர்டிகிளான ஸ்ரீ சரணாள், “அவதான் ஆதர். அவ ஒருத்திதான் அவளோட ஆர்டிகிளாதான் சகல ப்ரபஞ்சத்தையும் எழுதி வெச்சிருக்கா. அதைத் தெரியவிடாம மாய வேடிக்கையும் பண்றா. தெரியப் பண்ணிட்டா போறும். ‘நாம’ன்னு தனியா இருந்திண்டிருக்கிற வரைக்கும் அத்தனை பேறும் இன்னிக்கும் என்னிக்கும் அவ ஆர்டிகிள்தான். அதைத் தெரிஞ்சுக்காத ஆர்டிகிளா இருக்கிறோம். அவ தெரியப் பண்ணணும். அதுதான் ப்ரார்த்தனை.”
எனக்கும் ப்ரசாதம் வழங்கிப் பெரியவாள், ஸ்னானம் பூஜைக்குப் புறப்படத் தயாராவது தெரிந்தது.
எனக்குத் திரும்பவேண்டிய அவசரம் இருந்ததால், “உத்தரவானபடி நான் இவருக்கு எழுதவேண்டியதை இப்பவே எழுதித் தந்துடறேன்….” என்று நான் கூறும்போதே மறித்த ஸ்ரீ சரணாள், “ ‘அதையும் பார்த்துட்டே முழுகப்போ’—ங்கறே, அப்டித்தானே ? அதெல்லாம் நான் ஒண்ணும் பார்க்கணும்—கிறது இல்லே. ஸரியாகவே வரும்” என்று சொல்லி, பரம க்ருபையுடன் ப்ரஸாதம் ஈந்து திருமுழுக்காடப் புறப்பட்டார்.
எங்களுக்கு அப்பேர்ப்பட்ட அருள்முழுக்காடல் அருளிவிட்டு !
நாலடி நடந்தவர் திரும்பினார். பக்தரிடம், “நான் சொன்ன ஸமாசாரம் எந்த எடத்துல சேக்கணம்னு சரியா மார்க் பண்ணிண்டு, அங்கே இவர் எழுதித் தரதை ஒட்டி, ‘டிஸ்ட்ரிப்யூட்’ பண்ணு. படிக்கறவா அங்கே அதைச் சேத்துக்க ‘மிஸ்’ பண்ணிடாம, சேப்பு இங்குல பளிச்சுனு கரெக்ஷன் எழுதிடு” என்று கூறி, மீண்டும் மந்த கமனமாகச் சென்றுவிட்டார் !
ஸின்ஸியரிடியே ! உன் மறு பெயர்தான் எங்கள் மஹாபெரியவாள் !
நிறைவுற்றது.