|
Post by saidevo on Jan 5, 2015 6:08:06 GMT 5.5
ஆதிரைத் திருநாள் துதி (காவடிச் சிந்து)
தாருகவ னந்தனிலே சாது - வெல்லாம் . தற்பெருமை கொண்டிருந்த போது - ஈசன் . . இரந்தேயுணி யுருவங்கொள . . அரிமோகினி அரிவையெனத் தானே - முன்னின் - றானே. ... 1
சாதுவெலாம் மோகினையை நாட - அவர் . தாரமெலாம் சுந்தரனோ டாட - துறவோர் . . முனிவாலெழும் எரியால்வரும் . . வனயானையும் பிறசெல்வமும் செய்தார் - சொல்லால் - எய்தார். ... 2
ஆனையுரி ஆடையெனக் கொண்டார் - ஈசன் . மானுடுக்கை அக்கினியைக் கண்டார் - அவை . . கரமேல்வர வலிபூதமும் . . பரமேஸ்வரன் பதம்கீழுற நடனம் - ஆகும் - படனம். ... 3
தாருவனம் ருத்திரனாய் ஆடும் - ஈசன் . தாண்டவமா னந்தமனம் ஓடும் - தில்லை . . நடராசனை சிவகாமியை . . திருவாதிரை தினம்காணவே தருவாம் - அருள் - உருவாம். ... 4 ... [தருவாகும் அருள் உருவாகும்]
சேந்தனாரின் பக்திமனம் கொண்டே - நாமும் . சேர்ந்துகளித் தேகளியை உண்டே - ஈசன் . . கழல்நாடியே கதிதேடியே . . மழுவாயுதம் வினைகொள்ளவே செய்வோம் - வாழ்வில் - உய்வோம். ... 5
--ரமணி, 02-05/01/2015, கலி.20/09/5115
*****
|
|
|
Post by kahanam on Jan 8, 2015 0:52:15 GMT 5.5
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|