|
Post by Sumi on Dec 1, 2014 9:43:21 GMT 5.5
Email message forwarded by our respected member Sri S Ramanathan
தானே சமைத்துக் கொள்வது என்கிறபோது வேலையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்குமாதலால் பல தினுஸில் வயஞ்ஜனங்களைப் பண்ணிக் கொள்ளத் தோன்றாது. அதாவது நாக்கு ருசி, அமிதபோஜனம் பண்ணிச் சித்த்சுத்தியைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்போம். இன்னொருத்தர் சமைத்துப் போடுகிறபோது நாக்கைத் தீட்டிக் கொண்டு "இது உப்பு, அது உறைப்பு" என்று நோணாவட்டம் சொல்லத் தோன்றுகிறது. இதில் நமக்கும் அதிருப்தி. பண்ணினவர்களுக்கும் மனக்கிலேசம்.நாமே செய்து கொண்டால் அந்த சமையல் எப்படி இருந்தாலும் தேவாம்ருதமாகத் தோன்றும். சாப்பிடுகிற வேளையில் "அரிபிரி" என்றில்லாமல் ஸந்தோஷமாக திருப்தியாக இருக்கும். ஆஹாரம் இதனாலேயே உடம்பில் ஒட்டி சித்தத்திலும் நல்லதைப் பண்ணும். சுயம்பாகத்தினால் ஒரு டிஸிப்ளினும் உண்டாகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவோ, அரட்டை, சீட்டு, சினிமா என்று போகவோ விடாமல் சமையல் வேலை என்று ஒருத்தனைக் கட்டிப் போடுகிறதல்லவா?
|
|
|
Post by mkaraman on Dec 11, 2014 13:55:37 GMT 5.5
Word worth its weight in Gold
|
|