Post by radha on Oct 23, 2014 12:23:08 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
வீரமும் வணக்கமும்
நமஸ்காரம், வணக்கம் என்ற வார்த்தைகளே நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவேயில்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால் நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக் கொண்டார்கள். தலையே, நீ வணங்காய்! என்றே அப்பர் ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்!
வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது; வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள் வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது வில்லாக வளைந்தார்கள் - தாங்களே வில் மாதிரி வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே வேண்டும்?
திரு அங்கமாலை என்ற பதிகத்தின் தொடக்கம்.
நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் ஆணிதீடிணஞ் என்று சொல்லுகிறார்கள். ஆணிதீ என்றால் வில்; அது வளைந்து, அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விளைப்பாக இல்லாமல் நெகிழந்து பணிவாக இருப்பதற்கு அடையாளமாகவே இப்படி உடம்பை வணங்கி மரியாதை பண்ணுவது.
சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே விஷயங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில் ஒன்று தெரிகிறது; நமஸ்காரம் என்றால் நேர் அர்த்தம் நமனம் பண்ணுவது என்றும் நமனம் என்றாலும் வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.
நமனம் என்றால் வளைவது என்பதை வைத்தே நமஸ்காரம் என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச் சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்; மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம்
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
வீரமும் வணக்கமும்
நமஸ்காரம், வணக்கம் என்ற வார்த்தைகளே நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவேயில்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால் நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக் கொண்டார்கள். தலையே, நீ வணங்காய்! என்றே அப்பர் ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்!
வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது; வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள் வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது வில்லாக வளைந்தார்கள் - தாங்களே வில் மாதிரி வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே வேண்டும்?
திரு அங்கமாலை என்ற பதிகத்தின் தொடக்கம்.
நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் ஆணிதீடிணஞ் என்று சொல்லுகிறார்கள். ஆணிதீ என்றால் வில்; அது வளைந்து, அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விளைப்பாக இல்லாமல் நெகிழந்து பணிவாக இருப்பதற்கு அடையாளமாகவே இப்படி உடம்பை வணங்கி மரியாதை பண்ணுவது.
சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே விஷயங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில் ஒன்று தெரிகிறது; நமஸ்காரம் என்றால் நேர் அர்த்தம் நமனம் பண்ணுவது என்றும் நமனம் என்றாலும் வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.
நமனம் என்றால் வளைவது என்பதை வைத்தே நமஸ்காரம் என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச் சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்; மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம்
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM