|
Post by soundaryasatheesh on Aug 15, 2014 19:59:27 GMT 5.5
கண்கள் காணும் இடங்கள் யாவிலும் நீயே நிறைந்திருக்க, கண்ணுக்குளும் நீயே நிறைந்திருக்க, கண் கலங்கி நிற்கின்றேன் உன் கருணையை எண்ணியே சத்குருநாதா!! கேட்கின்ற எல்லா ஒலிகளும் உனது இனிய குரலாகவே கேட்டிட, சப்தங்கள் எல்லாம் சங்கரனாக ஆன பின், சப்த நாடியும் ஒடுங்கி உன் உருவே மனதில் நின்றிடுதே சத்குருநாதா!! சுவாசிக்கும் காற்றினிலும் , உன் பிருந்தாவன துளசியின் மனம் கலந்து, இருக்கும் இடம் எல்லாமே உந்தன் பிருந்தாவனமாகவே தோன்றிடுதே சத்குருநாதா!! உன்னைப் பற்றி நாளும் பேசிடவே எனக்கு பொழுதுகள் போத வில்லை, உன்னை தவிர்த்து பேச வேறு ஒரு விஷயமும் என்னிடம் இல்லையே சத்குருநாதா!! என்னை தீண்டிச் செல்லும் தென்றலும் சொல்லிடுதே, எப்போதுமே நீ என் அருகினிலேயே தான் இருக்கிறாய் என்றே, அதனை என்றுமே உணர்ந்திட உன் அருள் வேண்டினேன் சத்குருநாதா!! இப்படி எந்தன் ஐம்புலன்களும் உன் அருளால் நிரம்பிட, என்னுள் இருக்கும் இயக்கமே நீ தான் என்பதை உணர வைத்தாயே சத்குருநாதா!! கேட்பதும் நீயே, கேட்கப்படுவதும் நீயே, பேசுவதும் நீயே, பேசப்படுவதும் நீயே, சுவாசமும் நீயே, சுவாசிக்கப்படுவதும் நீயே, காண்பதும் நீயே, காண படுவதும் நீயே, உணர்வும் நீயே, அதற்குள்ளும் நீயே என்றான பின் என்னில் எப்போதுமே நான் உன்னையே காண்கிறேன் சத்குருநாதா!! இந்த உண்மையை உணர்ந்த பின், என்னிடம் என்னுடையது என்று எதுவுமே இல்லையே, ஏன்னெனில் "நான்" என்பதும் "நீ" தானே சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 16, 2014 0:42:32 GMT 5.5
என்னில் எப்போதுமே நான் உன்னையே காண்கிறேன் சத்குருநாதா!! இந்த உண்மையை உணர்ந்த பின், என்னிடம் என்னுடையது என்று எதுவுமே இல்லையே, ஏன்னெனில் "நான்" என்பதும் "நீ" தானே சத்குருநாதா!!
No difference between the Devotee and Gurunathar or God! Classical Advaitham easily explained! Great Smt. Soundarya Satheesh! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 16, 2014 7:52:03 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|