காமாட்சித் தாய் மடியில்
கவிஞர் நெல்லை அருள்மணி
தொகையறா
சந்திர சேகரேந்திர சரஸ்வதி திருப்பாதம்
சந்ததம் பணிந்தார்க்கு சர்வமும் க்ஷேமமே
இந்திராதி தேவர் வந்து எழிற்கவரி வீசிநிற்க
நந்தியம் பெருமானும் நல்லாசி தந்தருள
வந்திடும் கைலாசம் வரன் தரும் அரன்விலாசமே
பாடல்
காமாட்சித் தாய் மடியில் சீராட்சி புரிந்துவரும்
காமகோடி தரிசனம் காணக்காண புண்ணியம் (காமாட்சி)
தவக்கோலம் தனக்காக தர்மங்கள் நமக்காக
அவதார திருச்செல்வர் அபிராமி அருட்செல்வர் (காமாட்சி)
பாரிஜாத நறுமணம் பரவும்சீர் பாதமே
சதுர்வேத கீதமே சங்கரனைப் பாடுமே
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர (காமாட்சி)
கோபுரத் திருவுள்ளம் கொடிமரக் கனிவுள்ளம்
திருக்காஞ்சி முனிஉள்ளம் தீபத்தின் ஒளிவெள்ளம்
மவுன நிலையாலே புவனம் முழுதாளும்
சிவனார் திருக்கோலம் சங்கரி புகழ்க்கோலம்
வணங்கிடும் கரமுண்டு வாழ்த்திடும் மனமுண்டு
மணம்தரும் பணிவுண்டு மாரிபோல் அருளுண்டு (காமாட்சி)
ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர!!
பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கோவில்மணி போன்ற குரலில் இதே பாடலைக் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும்:
www.youtube.com/watch?v=bHaTL6qbonA