|
Post by soundaryasatheesh on Aug 12, 2014 9:09:10 GMT 5.5
இதயத்திலே குடி புகுந்தாய் சங்கரா!! பின் இதயமே நீயாக மாறிப் போனாய் சங்கரா!! இதயமது நீயாக ஆன பின்பு , அதன் இயக்க படி என் நாடி நரம்பெல்லாம் உன் பெயர் கேட்டு ஒரு நர்த்தனமே புரிந்துடுதே சங்கரா!! அதற்குள்ளும் ஓடும் குருதி கூட, சங்கரா சங்கரா பாடிகொண்டே மெல் இசை ஒன்றை எழுப்பிடுதே சங்கரா!! இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் உன் உருவாக எந்தன் முதுகெலும்பின் ஏற புது முறுக்கேறிடுதே சங்கரா!! உன் நினைவே , என் நினைவாய் ஆன பின்பு, என் சுய நினைவு என்ற ஒன்றையே நான் சுத்தமாக இழந்து விட்டேன் சங்கரா!! சுய நினைவே போன பின், எனை பார்த்து பலர் சிரிக்க, அதைக்கூட உணர முடியாமல் சுத்தமாக உன்பித்தனாகி நின்றேனே சங்கரா!! பித்தன் பித்தன் என்றே எனை, பலரும் உரைக்க , "பித்தன் அல்ல இவன் என் பக்தன்", என்றே சொல்லி எனை ஆட்கொண்டாயே சங்கரா!! தானாகவே என் கால்கள் உன்னைத் தேடி நடக்க, தானாகவே என் நாவும் உன் பெயரையே சொல்ல, தானாகவே என் செவிதான் உன் குரலையே கேட்க, தானாகவே என் கரங்கள் உனையே பூஜிக்க, எங்குமே உன்னையே என் கண்களும் காண, நடமாடும் இயந்திரமாய் ஆக்கி, அதனை இயக்கம் எஜமானனாய் ஆனாயே சங்கரா!! எஜமானனான உன்னால் மட்டுமே இயக்க முடிந்த இயந்திரமாகிய நான் எப்போதும் சர்வமான உன்னையே சரணடைந்தேன் சங்கரா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 12, 2014 12:29:47 GMT 5.5
Total SaraNagathi to Maha Periyava! God Bless the poet! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 12, 2014 14:08:55 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|
|
Post by anusham163 on Aug 18, 2014 17:57:44 GMT 5.5
அருமையான பாடல் ! படிக்கும்போதே, சிலிர்க்க வைக்கிறது ! மேலும் மேலும் இத்தகைய அருமையான பாடல்களைத் தங்கள் மனதும் கைகளும் எழுதட்டும் !
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி !
அனுஷம்163
|
|
|
Post by soundaryasatheesh on Aug 19, 2014 10:10:42 GMT 5.5
Humble thanks!! Periyava sharanam
|
|