Post by radha on Aug 11, 2014 2:37:11 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA .
அன்னபூர்ணே சதாபூர்ணே....
நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின்கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது. தானிய ஸம்ருத்தி(செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிக்ஷம் செய்து கொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை. என்ஜினியர் அணை கட்டலாம். ஆனால், மழையைப் பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேஸ்வரியை எல்லோரும் மனஸாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்து, தானிய ஸம்ருத்தியை அநுக்ரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.
நம்முடைய ஆச்சார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூரணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார். அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, ‘கருணையின் பற்றுக் கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேஸ்வரியே பிச்சை போடு’ என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேஸ்வரீ தேஹி-
போடு என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருக்கும்! தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதர போக்ஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம் கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், ‘‘ஒரு சக்ரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலி கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்’’ என்றான். உடனே ஆச்சார்யாள், ‘‘சக்ரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்’’ என்று தனது சிரஸையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈசுவர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று. அது வேறு விஷயம். ஆசாரியாளுக்கும் கொஞ்சம் கூட அஹங்கார மமகாரமே கிடையாது. தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் ‘‘பிக்ஷாம் தேஹி & பிச்சை போடு’’ என்றால் என்ன அர்த்தம்?
இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில் எனக்கும் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு என்கிறார். எனவே தேஹி பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.
அதோடு தனக்கு என்று வேண்டிக் கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.
அன்ன பிக்ஷை மட்டும் பிரயோஜனமில்லை. முடிவில் ஞானமில்லாமல் வெறுமே தின்று தின்று ஊனை வளர்த்துப் பிரயோஜனமில்லை. க்ஷீரான்ன(பால் சோற்று) பாத்திரமும், கரண்டியும் வைத்துக்கொண்டு அன்புருவாக உணவு போடும் அன்னபூரணி இந்த ஞானத்தையும் விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். ஞான வைராக்கியப் பிச்சையைத்தான் ஆதிசங்கரரும் முடிவாகக் கேட்கிறார்.
காஞ்சி காமாக்ஷியில் அன்னபூர்ணேசுவரியும் அடக்கம். காமாக்ஷி இரு நாழி நெல் கொண்டு முப்பத்தி இரண்டு அறங்களையும் வளர்த்தாள். அதில் அன்னதானமும் ஒன்று; காமகோட்டத்தில் அன்னபூரணி சந்நதி இருக்கிறது. காஞ்சியில் ஓணகாந்தன்தளியில் இருக்கும் ஸ்வாமியைப் பாடும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘காமகோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும் போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?’ என்று கேட்கிறார்.
வாரிரும் குழல்வாள் நெடுங்கண்
மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
தாரிருந் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழில்கச்சி முதூர்க்
காமகோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வதென்ன
ஓணகாந்தன் றளியுளீரே!
சரீரம், ஆத்மா இரண்டுக்கும் உணவூட்டி வளர்க்கின்ற அன்னபூர்ணேசுவரியைத் துதித்து சமஸ்த ஜீவர்களும் துர்பிக்ஷம் நீங்கப் பிரார்த்திப்போம்.
பாபம் செய்வதற்குத் தண்டனையாக துர்பிக்ஷத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு காமாக்ஷியேயான அன்னபூரணி கருணை பாலிக்கிறாள். பசி என்பது பாபிக்கும் வரக்கூடாது. கேரளத்தில் செருக்குன்னம் எனும் அன்னபூர்ணா க்ஷேத்திரம் இருக்கிறது. அங்கே சேவார்த்திகளுக்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்கள். அது மட்டுமல்ல. ராத்திரி வேளையில் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தில் சோற்று மூட்டையைக் கட்டி வைக்கிறார்கள். இராக்காலத்தில் அந்தப் பக்கமாகப் பசியோடு போகிற திருடர்களும் கூடப் பசியாற வேண்டும் என்று இந்த ஏற்பாடு!
இத்தனை கருணையோடு ஒரு அம்மா இருக்கிறபோது, இன்றைக்கு லோகத்தில் இவ்வளவு துர்பிக்ஷை இருக்கிறது என்றால், அதிலிருந்து நாம் எத்தனை பாபம் செய்திருக்கிறோம் என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ‘சரக ஸம்ஹிதை’யில் ஆத்ரேயர் சொல்வதாக வருகிறது; ஒரு தேசத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ ஆட்சியில் இருக்கப்பட்டவர்கள் தர்மம் தவறி நடந்தால் அவர்களைச் சேர்ந்த ஜனங்களும் இதே போக்கை அனுசரிக்க வேண்டியதாகிறது. இப்படி அதர்மம் ரொம்பவும் பரவுகிறபோது தேவர்கள் இவர்களைக் கைவிட எண்ணுகிறார்கள். (தேவர்கள் என்றால் இயற்கைச் சக்திகளை நடத்துகிற ஈசுவரனின் அதிகாரிகள்). உடனே ருதுக்கள் மாறுகின்றன. மழை சரியாகப் பெய்வதில்லை. பெய்தாலும் காலம் தவறி, இடம் தவறி, அளவு தவறிப் பெய்யும். பருவக் காற்று முறைப்படி வீசுவதில்லை. வியாதிக் கிருமிகள் அதிகமாகின்றன. பயிர் பச்சைகளின் செழிப்புப் போகிறது. உணவுப் பதார்த்தங்களில் துர்பிக்ஷம், கிடைக்கிற கொஞ்சத்திலும் தோஷங்கள், கெட்ட காற்று, வியாதி இவற்றால் தேசம் பாழாகிறது.
இம்மாதிரி உலகத்துக்கு ஏற்படும் துர்பிக்ஷத்திலிருந்து நம்முடைய தப்பையே புரிந்து கொண்டு திருந்தப் பிரயாசை எடுத்தோமாயின், அன்னபூர்ணியே அன்னபிக்ஷை, ஞான பிக்ஷை எல்லாம் போடுவாள். அவள் சரீரமே ஞானமயமானது. ‘அ’ விலிருந்து ‘க்ஷ’ வரையிலான எல்லா அட்சரங்களுமே உருவான மந்திர மாத்ருகா ரூபிணி அவள் என்கிறார் ஆச்சாரியார். ‘ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ’.இப்படிப்பட்ட சரீரம் படைத்தவளாதலால் நம் சரீரத்தை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கிற பிக்ஷையைப் போட்டு ஞானம் தருவாள்.
அது எப்படிப்பட்ட ஞானம் என்பதைத்தான் ஆசார்யாள், அன்னபூரணி ஸ்துதியின் கடைசியில் சொல்கிறார். அந்த நிலையில் பரமேசுவரனே தகப்பனாராகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளும் சகோதரர்களாகி விடுவார்கள். மூவுலகமும் சொந்த வீடாகி விடும். இது இப்போது நிறையப் பேசப்படுகிற தேச ஐக்கியப்பாட்டை விட எத்தனையோ படி மேலே! சர்வதேச ஐக்கியப் பாட்டுக்கும் மேலே! மூன்றுலக ஐக்கியப்பாடு! பக்தி இருந்தால், பராசக்தி ஒருத்தி இருக்கிறாள் என்ற பயமும் பக்தியும் இருந்துவிட்டால், எல்லோரும் அவள் குழந்தைகள்தான் என்கிற சகோதரபாவம் தானாகவே வந்துவிடும். இதற்குப் பிரசங்கம் வேண்டாம். திட்டம் வேண்டாம். பிரசாரம் வேண்டாம்.
இப்போதைய சர்வரோக நிவாரணி, பக்திதான். உண்மையான ஈசுவர பக்தியானது, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரிணமிக்கும். அப்புறம் பரஸ்பர சுகத்தைத் தவிர வேறெதற்கும் இடமே இராது. அன்பே சிவம் என்றார் திருமூலர். அதுவே அறிவு. அறிவான தெய்வமே என்றார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிக்ஷை போடப் பிரார்த்திப்போம். ஆதி ஆசார்யாள் செய்த பிரார்த்தனையும் இதுதான்:
அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
( காஞ்சி காமகோடி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரையிலிருந்து...)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
அன்னபூர்ணே சதாபூர்ணே....
நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின்கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது. தானிய ஸம்ருத்தி(செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிக்ஷம் செய்து கொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை. என்ஜினியர் அணை கட்டலாம். ஆனால், மழையைப் பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேஸ்வரியை எல்லோரும் மனஸாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்து, தானிய ஸம்ருத்தியை அநுக்ரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.
நம்முடைய ஆச்சார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூரணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார். அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, ‘கருணையின் பற்றுக் கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேஸ்வரியே பிச்சை போடு’ என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேஸ்வரீ தேஹி-
போடு என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருக்கும்! தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதர போக்ஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம் கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், ‘‘ஒரு சக்ரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலி கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்’’ என்றான். உடனே ஆச்சார்யாள், ‘‘சக்ரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்’’ என்று தனது சிரஸையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈசுவர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று. அது வேறு விஷயம். ஆசாரியாளுக்கும் கொஞ்சம் கூட அஹங்கார மமகாரமே கிடையாது. தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் ‘‘பிக்ஷாம் தேஹி & பிச்சை போடு’’ என்றால் என்ன அர்த்தம்?
இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில் எனக்கும் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு என்கிறார். எனவே தேஹி பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.
அதோடு தனக்கு என்று வேண்டிக் கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.
அன்ன பிக்ஷை மட்டும் பிரயோஜனமில்லை. முடிவில் ஞானமில்லாமல் வெறுமே தின்று தின்று ஊனை வளர்த்துப் பிரயோஜனமில்லை. க்ஷீரான்ன(பால் சோற்று) பாத்திரமும், கரண்டியும் வைத்துக்கொண்டு அன்புருவாக உணவு போடும் அன்னபூரணி இந்த ஞானத்தையும் விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். ஞான வைராக்கியப் பிச்சையைத்தான் ஆதிசங்கரரும் முடிவாகக் கேட்கிறார்.
காஞ்சி காமாக்ஷியில் அன்னபூர்ணேசுவரியும் அடக்கம். காமாக்ஷி இரு நாழி நெல் கொண்டு முப்பத்தி இரண்டு அறங்களையும் வளர்த்தாள். அதில் அன்னதானமும் ஒன்று; காமகோட்டத்தில் அன்னபூரணி சந்நதி இருக்கிறது. காஞ்சியில் ஓணகாந்தன்தளியில் இருக்கும் ஸ்வாமியைப் பாடும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘காமகோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும் போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?’ என்று கேட்கிறார்.
வாரிரும் குழல்வாள் நெடுங்கண்
மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
தாரிருந் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழில்கச்சி முதூர்க்
காமகோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வதென்ன
ஓணகாந்தன் றளியுளீரே!
சரீரம், ஆத்மா இரண்டுக்கும் உணவூட்டி வளர்க்கின்ற அன்னபூர்ணேசுவரியைத் துதித்து சமஸ்த ஜீவர்களும் துர்பிக்ஷம் நீங்கப் பிரார்த்திப்போம்.
பாபம் செய்வதற்குத் தண்டனையாக துர்பிக்ஷத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு காமாக்ஷியேயான அன்னபூரணி கருணை பாலிக்கிறாள். பசி என்பது பாபிக்கும் வரக்கூடாது. கேரளத்தில் செருக்குன்னம் எனும் அன்னபூர்ணா க்ஷேத்திரம் இருக்கிறது. அங்கே சேவார்த்திகளுக்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்கள். அது மட்டுமல்ல. ராத்திரி வேளையில் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தில் சோற்று மூட்டையைக் கட்டி வைக்கிறார்கள். இராக்காலத்தில் அந்தப் பக்கமாகப் பசியோடு போகிற திருடர்களும் கூடப் பசியாற வேண்டும் என்று இந்த ஏற்பாடு!
இத்தனை கருணையோடு ஒரு அம்மா இருக்கிறபோது, இன்றைக்கு லோகத்தில் இவ்வளவு துர்பிக்ஷை இருக்கிறது என்றால், அதிலிருந்து நாம் எத்தனை பாபம் செய்திருக்கிறோம் என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ‘சரக ஸம்ஹிதை’யில் ஆத்ரேயர் சொல்வதாக வருகிறது; ஒரு தேசத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ ஆட்சியில் இருக்கப்பட்டவர்கள் தர்மம் தவறி நடந்தால் அவர்களைச் சேர்ந்த ஜனங்களும் இதே போக்கை அனுசரிக்க வேண்டியதாகிறது. இப்படி அதர்மம் ரொம்பவும் பரவுகிறபோது தேவர்கள் இவர்களைக் கைவிட எண்ணுகிறார்கள். (தேவர்கள் என்றால் இயற்கைச் சக்திகளை நடத்துகிற ஈசுவரனின் அதிகாரிகள்). உடனே ருதுக்கள் மாறுகின்றன. மழை சரியாகப் பெய்வதில்லை. பெய்தாலும் காலம் தவறி, இடம் தவறி, அளவு தவறிப் பெய்யும். பருவக் காற்று முறைப்படி வீசுவதில்லை. வியாதிக் கிருமிகள் அதிகமாகின்றன. பயிர் பச்சைகளின் செழிப்புப் போகிறது. உணவுப் பதார்த்தங்களில் துர்பிக்ஷம், கிடைக்கிற கொஞ்சத்திலும் தோஷங்கள், கெட்ட காற்று, வியாதி இவற்றால் தேசம் பாழாகிறது.
இம்மாதிரி உலகத்துக்கு ஏற்படும் துர்பிக்ஷத்திலிருந்து நம்முடைய தப்பையே புரிந்து கொண்டு திருந்தப் பிரயாசை எடுத்தோமாயின், அன்னபூர்ணியே அன்னபிக்ஷை, ஞான பிக்ஷை எல்லாம் போடுவாள். அவள் சரீரமே ஞானமயமானது. ‘அ’ விலிருந்து ‘க்ஷ’ வரையிலான எல்லா அட்சரங்களுமே உருவான மந்திர மாத்ருகா ரூபிணி அவள் என்கிறார் ஆச்சாரியார். ‘ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ’.இப்படிப்பட்ட சரீரம் படைத்தவளாதலால் நம் சரீரத்தை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கிற பிக்ஷையைப் போட்டு ஞானம் தருவாள்.
அது எப்படிப்பட்ட ஞானம் என்பதைத்தான் ஆசார்யாள், அன்னபூரணி ஸ்துதியின் கடைசியில் சொல்கிறார். அந்த நிலையில் பரமேசுவரனே தகப்பனாராகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளும் சகோதரர்களாகி விடுவார்கள். மூவுலகமும் சொந்த வீடாகி விடும். இது இப்போது நிறையப் பேசப்படுகிற தேச ஐக்கியப்பாட்டை விட எத்தனையோ படி மேலே! சர்வதேச ஐக்கியப் பாட்டுக்கும் மேலே! மூன்றுலக ஐக்கியப்பாடு! பக்தி இருந்தால், பராசக்தி ஒருத்தி இருக்கிறாள் என்ற பயமும் பக்தியும் இருந்துவிட்டால், எல்லோரும் அவள் குழந்தைகள்தான் என்கிற சகோதரபாவம் தானாகவே வந்துவிடும். இதற்குப் பிரசங்கம் வேண்டாம். திட்டம் வேண்டாம். பிரசாரம் வேண்டாம்.
இப்போதைய சர்வரோக நிவாரணி, பக்திதான். உண்மையான ஈசுவர பக்தியானது, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரிணமிக்கும். அப்புறம் பரஸ்பர சுகத்தைத் தவிர வேறெதற்கும் இடமே இராது. அன்பே சிவம் என்றார் திருமூலர். அதுவே அறிவு. அறிவான தெய்வமே என்றார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிக்ஷை போடப் பிரார்த்திப்போம். ஆதி ஆசார்யாள் செய்த பிரார்த்தனையும் இதுதான்:
அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
( காஞ்சி காமகோடி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரையிலிருந்து...)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM