tks
New Member
Posts: 20
|
Post by tks on Aug 7, 2014 9:51:50 GMT 5.5
நினைக்காத நாளில்லை-அருள்மிகு பெரியவா கல்லாத பாமரரும் கலைகளில் வேந்தரும் பாடுகின்ற பாவலரும் உரையாடும் நாவலரும் நாடாளும் வலியோரும் நலிந்த எளியோரும் செல்வச் சீமான்களும் ஏங்கிடும் ஏழையரும் ஒன்றாகவே பாவித்த உங்கள் அருளொளியை நினைக்காத நாளில்லை-அருள்மிகு பெரியவா உங்கள் பாதம் படாத பூமியில்லை உங்கள் கண்கள் காணாத காட்சியில்லை உங்கள் கரங்கள் அருளாத வரமுமில்லை உங்கள் செவிகள் கேளாத சொல்லுமில்லை உங்கள் வாக்கில் அடங்காத பொருளுமில்லை நினைக்காத நாளில்லை-அருள்மிகு பெரியவா கண்டவர் அனைவரும் விண்டதில்லை கேட்டவர் அனைத்தும் அறிந்ததில்லை நினைத்தவர் நாடியதும் அடையாமலில்லை நினையாதார் கனவிலும் வாராமலில்லை நாடியவர் பிணிகளும் தொடர்வதி்ல்லை நினைக்காத நாளில்லை-அருள்மிகு பெரியவா
|
|
|
Post by Kanchi Periva on Aug 7, 2014 17:22:02 GMT 5.5
"செல்வச் சீமான்களும் ஏங்கிடும் ஏழையரும் ஒன்றாகவே பாவித்த உங்கள் அருளொளியை" - how true!! So nicely captured all the vital characteristic features of Sri Maha Periva - great work Sri tks, thanks a lot for sharing this.
|
|
|
Post by anusham163 on Apr 26, 2015 19:43:45 GMT 5.5
படித்தயென் கண்கள் குளமானது ! வலித்த நெஞ்சம் கனிந்தது ! சலித்த மனம் களிப்படைந்தது! படித்தேன் ரசித்தேன் அருமை நண்பரே !
|
|