|
Post by saidevo on May 17, 2014 8:15:25 GMT 5.5
ஆன்மீகச் செய்திக் கவிதை 8. வைகாசி 3 இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.
சங்கடஹர சதுர்த்தித் துதி: இரண்டாம் சுதந்திரமாக அருள்!
(அளவியல் இன்னிசை வெண்பா) பாரதம் பண்டைநெறிப் பண்பினில் ஆழ்ந்ததன் வேரது மீண்டும் விளைய கணேசா! உலகினில் முன்னோடும் உன்னத நாடாய் வலம்வரச் செய்திடு வாய். ... 1
இரண்டாம்சு தந்திரமாய் எல்லாரும் தேவ! இரண்டென நின்றும் இணைந்திடும் அன்பில் வருநாளில் பாடுபட்டு வல்லரசாய் இந்தத் திருநா(டு) இலங்கவருள் செய். ... 2
வெறுக்கையர் உள்ள வெறுமை யகல ... [வெறுக்கை = செல்வம்] சிறுவர் சிறுமியர் செம்மையில் வாழ இளையோர் அறத்தில் இழைய கணேசா! வளமுறச் செய்திடு வாய். ... 3
*ஐங்கரனே நம்மக்கள் ஐம்புலன் கட்டுண்டே ஐங்குரவர் சொல்கேட்டே ஐம்பாலோர் நன்மைபேணி ஐந்தருவின் வாசமுறும் வாழ்வறம் துலங்கிடவே ஐந்திணையும் காத்தருள் வாய். ... 4
"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்நிறை" யென்றே விநாயக! இல்லார் குறைதீர்த் திருப்பார் நிறைசெய்ய அல்லலின்றி வாழ வருள். ... 5
--ரமணி, 17/05/2014, கலி.03/02/5115
பாடல் 4 பற்றிய குறிப்பு: ஐங்கரன் = பிள்ளையார்; ஐங்குரவர் = அரசன், ஆசான், அன்னை, தந்தை, மூத்த சகோதரன்; ஐம்பாலோர் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் வகைப்படும் உயிர்கள்; ஐந்தரு = சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தனம் ஆகிய தேவலோக மரங்கள்; ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள்.
*****
|
|
|
Post by kahanam on May 17, 2014 11:26:11 GMT 5.5
|
|