|
Post by saidevo on May 13, 2014 17:47:25 GMT 5.5
ஆன்மீகச் செய்திக் கவிதை 4. சித்திரை 30இன்று ஶ்ரீநரசிம்ம ஜயந்தி. நரசிம்ம ஜயந்தி(வெளிவிருத்தம்)எனக்கொருவன் இரணியனாய் இருக்கின்றான் ஆள்கின்றான் - நரசிம்மா! தனக்குநிகர் இல்லையெனத் தன்வயங்கொள் அசுரனவன் - நரசிம்மா! வனப்புவிழை மேனியவன் ஐம்புலனாம் ஆனைகளால் - நரசிம்மா! தினம்வதைத்துத் தன்கூட்டில் எனைவைக்கும் கொடுங்கோலன் - நரசிம்மா! ... 1 உன்மகனாய் விரலளவே உயரமுள்ள என்னையவன் - நரசிம்மா! தன்னுருவாய் எண்ணமுற்றுச் சன்னதமாய் நஞ்சேற்றி - நரசிம்மா! ... [சன்னதம் = ஆவேசம், கடுஞ்சினம்] என்னுள்ளம் நானெனவே எழுமயக்கம் கொளச்செய்வான் - நரசிம்மா! இன்னுமவன் ஆயுதமாய் என்வாக்கால் எனைவதைப்பான் - நரசிம்மா! ... 2 இந்தமன மொழிமெய்யாம் இருஞ்சிறையில் வருந்துகிறேன் - நரசிம்மா! ... [இருஞ்சிறை = நரகம், காவல்] இந்தமூன்று தூண்களையும் பிளந்தெனைநீ ஆட்கொள்வாய் - நரசிம்மா! அந்தவொலி ஓங்கார ஆளியொலி யுடனுருத்தே - நரசிம்மா! ... [ஆளி = சிங்கம்] வந்துநீயென் இருமையெனும் மாயைகீறிக் காத்தருள்வாய் - நரசிம்மா! ... 3 --ரமணி, 13/05/2014 *****
|
|
|
Post by kahanam on Sept 12, 2014 17:06:52 GMT 5.5
Lakshmi Nrisimham Bhaje! Kamoo Kaarshith Manyura aarshith Namoo Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|