Post by Sumi on Jan 11, 2012 10:56:36 GMT 5.5
Courtesy: Shri V Radhakrishnan
Site: www.periva.org
OM SRI GURUPYO NAMAHA: ANANDHA KOTI NAMASKARAM TO MAHA PERIYAVA
HARA HARA SANKARA,SIVA SIVA SANKARA
JAYA JAYA SANKARA ,SIVA SIVA SIVA SANKARA
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும்
இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை-பாடல் - 19
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள்: பலம் மிக்க யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபாலனின் மருமகளான நப்பின்னையே! வாசனை பொங்கும் கூந்தலை உடையவளே! உன் வீட்டுக் கதவைத் திற! எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி விட்டன. குருக்கத்தி கொடியில் அமர்ந்து குயில்கள் இன்னிசையைத் துவங்கி விட்டன. பூப்பந்து போல் பஞ்சு விரல்களைக் கொண்டவளே! உன் கணவன் கண்ணனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால், எங்கள் உள்ளம் மகிழும்.
விளக்கம்: பெருமாள் கோயில்களில் தாயாரை முதலில் வணங்குவது மரபு. தாயார் தான், நம் கோரிக்கைகளை சுவாமியிடம் எடுத்துச்சொல்லி நிறைவேற்றி வைப்பாள். அதனால் தான், கண்ணனை எழுப்பும் முன் நப்பின்னையை எழுப்புகிறார்கள் தோழியர்.
திருவெம்பாவை-பாடல் - 19
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்: சூரியக்கதிர்கள் பட்டதும் விண்ணில்உள்ள நட்சத்திரங்கள் மறைந்தது போல், அண்ணாமலையாரின் திருவடி பிரகாசத்தின் முன்னால், அவரைப் பணிந்த தேவர்களின் கிரீடங்களிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் திகழும் சிவன், வானமாகவும், பூமியாகவும், பிற உலகங்களாகவும் திகழ்கிறான். கண்ணுக்கு இனியதும், அமிர்தம் போல் அருள் தருவதுமான அவரது சிலம்புத் திருவடிகளைப் புகழ்ந்து பாடுங்கள். பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.
விளக்கம்: வாழ்வில் ஒருமுறையாவது, அண்ணாமலையாரை தரிசித்து வாருங்கள். ஏனெனில், அவரது திருவடி அமிர்தத்துக்கு சமமானது. அமிர்தம் சாகாவரம் தருவது. பிறந்தால் இறந்தாக வேண்டும். சாகாவரம் வேண்டுமானால் பிறப்பே கூடாது. பிறப்பு கூடாதென்றால், அண்ணாமலையாரின் திருவடிகளில் சரணடைய வேண்டும். அதன்பின் பரமானந்த நிலை சித்திக்கும்.
Site: www.periva.org
OM SRI GURUPYO NAMAHA: ANANDHA KOTI NAMASKARAM TO MAHA PERIYAVA
HARA HARA SANKARA,SIVA SIVA SANKARA
JAYA JAYA SANKARA ,SIVA SIVA SIVA SANKARA
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும்
இனிய குரலில் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை-பாடல் - 19
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள்: பலம் மிக்க யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபாலனின் மருமகளான நப்பின்னையே! வாசனை பொங்கும் கூந்தலை உடையவளே! உன் வீட்டுக் கதவைத் திற! எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி விட்டன. குருக்கத்தி கொடியில் அமர்ந்து குயில்கள் இன்னிசையைத் துவங்கி விட்டன. பூப்பந்து போல் பஞ்சு விரல்களைக் கொண்டவளே! உன் கணவன் கண்ணனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால், எங்கள் உள்ளம் மகிழும்.
விளக்கம்: பெருமாள் கோயில்களில் தாயாரை முதலில் வணங்குவது மரபு. தாயார் தான், நம் கோரிக்கைகளை சுவாமியிடம் எடுத்துச்சொல்லி நிறைவேற்றி வைப்பாள். அதனால் தான், கண்ணனை எழுப்பும் முன் நப்பின்னையை எழுப்புகிறார்கள் தோழியர்.
திருவெம்பாவை-பாடல் - 19
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்: சூரியக்கதிர்கள் பட்டதும் விண்ணில்உள்ள நட்சத்திரங்கள் மறைந்தது போல், அண்ணாமலையாரின் திருவடி பிரகாசத்தின் முன்னால், அவரைப் பணிந்த தேவர்களின் கிரீடங்களிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் திகழும் சிவன், வானமாகவும், பூமியாகவும், பிற உலகங்களாகவும் திகழ்கிறான். கண்ணுக்கு இனியதும், அமிர்தம் போல் அருள் தருவதுமான அவரது சிலம்புத் திருவடிகளைப் புகழ்ந்து பாடுங்கள். பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.
விளக்கம்: வாழ்வில் ஒருமுறையாவது, அண்ணாமலையாரை தரிசித்து வாருங்கள். ஏனெனில், அவரது திருவடி அமிர்தத்துக்கு சமமானது. அமிர்தம் சாகாவரம் தருவது. பிறந்தால் இறந்தாக வேண்டும். சாகாவரம் வேண்டுமானால் பிறப்பே கூடாது. பிறப்பு கூடாதென்றால், அண்ணாமலையாரின் திருவடிகளில் சரணடைய வேண்டும். அதன்பின் பரமானந்த நிலை சித்திக்கும்.