Post by radha on Apr 22, 2014 10:50:53 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்
------------------------------------------------------------
பண்டித மதன்மோகனமாளவியா அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஸ்வாமிகள் 1935-பிப்ரவரி மாதம்,ஒன்பதாம் தேதி காசி ஹிந்து ஸர்வ கலாசாலைக்கு விஜயமானார்கள்.
அன்று, ஸர்வ கலாசாலையின் கட்டிடமெல்லாம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஸ்வாமிகள் பிரதான வாயிலருகே வந்ததும் மாளவியா அவர்களும், அதிகாரிகளும், பேராசியர்களும், மாணவர்களும், ஸ்வாமிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஸர்வ கலாசாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஸ்வாமிகளை அழைத்துச் சென்று , ஆங்காங்கு நடைபெறும் கல்வி போதனைகளை எடுத்துக் கூறினார். பின்னர் பிரதான மண்டபத்தில் அமைக்கப் பெற்றிருந்த பிரத்யேகமான ஆசனத்தில் ஸ்வாமிகள் அமர்ந்தார்கள். யாவரும் ஸ்வாமிகளை வணங்கியவுடன், தாம் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் அடங்கிய ,வரவேற்புப் பத்திரத்தைப் பண்டித மாளவியா வாசித்து ஸ்வாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார்.
அவர் வாசித்தளித்த ஸ்லோகங்களின் கருத்து
“எவரது திருவடியை மனிதன் எண்ணியவுடன் எல்லாவித அஞ்ஞான இருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுமோ, எந்த மகானது திருவாக்கிலிருந்து வெளிப்படும் மொழிகள்,உலகத்தின் எல்லாச் திசைகளிலும் பரவி ஒலிக்கின்றனவோ, எவரிடம் எல்லாச் சாத்திரங்களின் உட்பொருளும் அடங்கிப் பிறர் அறியக் கண்ணாடியைப் போல் பிரதிபலித்து வருகின்றனவோ,அவ்வித மகிமைகள் வாய்ந்த ஸ்ரீ சங்கரரது காஞ்சீபீடத்தில்,விளங்கி வரும் அண்ணலே!
பாரத நாட்டின் தவப்பயனாய், தத்துவம், ஞானம், தவம்,கருணை,கொடை,அருள் முதலிய குணங்களின் உருவாகத் தோன்றியிருக்கும் தங்கள் கீர்த்தியும், கருணையும் நாடு முழுதும் பரவி மக்களைப் புனிதராக்கிப் பிரகாசித்து வருகின்றன.
பாரத நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல கலைகளைக் கற்க,இங்கு குழுமியுள்ள மாணவர்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும், வணக்கத்துடன் தங்களுக்கு நல்வரவளிக்கின்றோம்.
மிகவும் கொடிய இக்கலியில், தருமங்களுக்குக் குறைவு ஏற்பட்டு வரும் இத் தருணத்தில், என்றும் அழியாத நலனை மக்கள் அடைவதற்கு ஆதாரமாக உள்ளனவும்,தங்கள் திருவாக்கிலிருந்து வெளி வரப்போவதுமான, தேன் மயமான உபதேச மொழிகளைப் பருக நாங்கள் காத்து நிற்கின்றோம். தங்கள் உபதேசம் உலகத்தின் நன்மைக்கே அஸ்திவாரமாக விளங்கும்.
உலக வாழ்க்கைக்கும்,தெய்வத் தன்மையை அடையவும் பயன்படக் கூடியவாறு மேல்நாட்டு, கீழ்நாட்டு முறைகளில் எவை உயர்ந்தனவையாகக் கருதப்படுகின்றனவோ,அந்த முறைகளிலேயே கல்வி கற்பிக்கப்படும் இந்தக் கலாசாலையும் நமது நாடும், நம் மக்களும், தங்கள் விஜயத்தினாலும், கருணை மிக்க உபதேச மொழியினாலும் உயர் நிலையை அடையுமெனத் திண்ணமாய் நம்புகிறோம்.”
இவ்வாறு பண்டித மாளவியா இந்த வரவேற்பை ஸ்வாமிகளிடம் சமர்பித்தார்.
மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்
------------------------------------------------------------
பண்டித மதன்மோகனமாளவியா அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஸ்வாமிகள் 1935-பிப்ரவரி மாதம்,ஒன்பதாம் தேதி காசி ஹிந்து ஸர்வ கலாசாலைக்கு விஜயமானார்கள்.
அன்று, ஸர்வ கலாசாலையின் கட்டிடமெல்லாம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஸ்வாமிகள் பிரதான வாயிலருகே வந்ததும் மாளவியா அவர்களும், அதிகாரிகளும், பேராசியர்களும், மாணவர்களும், ஸ்வாமிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஸர்வ கலாசாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஸ்வாமிகளை அழைத்துச் சென்று , ஆங்காங்கு நடைபெறும் கல்வி போதனைகளை எடுத்துக் கூறினார். பின்னர் பிரதான மண்டபத்தில் அமைக்கப் பெற்றிருந்த பிரத்யேகமான ஆசனத்தில் ஸ்வாமிகள் அமர்ந்தார்கள். யாவரும் ஸ்வாமிகளை வணங்கியவுடன், தாம் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் அடங்கிய ,வரவேற்புப் பத்திரத்தைப் பண்டித மாளவியா வாசித்து ஸ்வாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார்.
அவர் வாசித்தளித்த ஸ்லோகங்களின் கருத்து
“எவரது திருவடியை மனிதன் எண்ணியவுடன் எல்லாவித அஞ்ஞான இருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுமோ, எந்த மகானது திருவாக்கிலிருந்து வெளிப்படும் மொழிகள்,உலகத்தின் எல்லாச் திசைகளிலும் பரவி ஒலிக்கின்றனவோ, எவரிடம் எல்லாச் சாத்திரங்களின் உட்பொருளும் அடங்கிப் பிறர் அறியக் கண்ணாடியைப் போல் பிரதிபலித்து வருகின்றனவோ,அவ்வித மகிமைகள் வாய்ந்த ஸ்ரீ சங்கரரது காஞ்சீபீடத்தில்,விளங்கி வரும் அண்ணலே!
பாரத நாட்டின் தவப்பயனாய், தத்துவம், ஞானம், தவம்,கருணை,கொடை,அருள் முதலிய குணங்களின் உருவாகத் தோன்றியிருக்கும் தங்கள் கீர்த்தியும், கருணையும் நாடு முழுதும் பரவி மக்களைப் புனிதராக்கிப் பிரகாசித்து வருகின்றன.
பாரத நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல கலைகளைக் கற்க,இங்கு குழுமியுள்ள மாணவர்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும், வணக்கத்துடன் தங்களுக்கு நல்வரவளிக்கின்றோம்.
மிகவும் கொடிய இக்கலியில், தருமங்களுக்குக் குறைவு ஏற்பட்டு வரும் இத் தருணத்தில், என்றும் அழியாத நலனை மக்கள் அடைவதற்கு ஆதாரமாக உள்ளனவும்,தங்கள் திருவாக்கிலிருந்து வெளி வரப்போவதுமான, தேன் மயமான உபதேச மொழிகளைப் பருக நாங்கள் காத்து நிற்கின்றோம். தங்கள் உபதேசம் உலகத்தின் நன்மைக்கே அஸ்திவாரமாக விளங்கும்.
உலக வாழ்க்கைக்கும்,தெய்வத் தன்மையை அடையவும் பயன்படக் கூடியவாறு மேல்நாட்டு, கீழ்நாட்டு முறைகளில் எவை உயர்ந்தனவையாகக் கருதப்படுகின்றனவோ,அந்த முறைகளிலேயே கல்வி கற்பிக்கப்படும் இந்தக் கலாசாலையும் நமது நாடும், நம் மக்களும், தங்கள் விஜயத்தினாலும், கருணை மிக்க உபதேச மொழியினாலும் உயர் நிலையை அடையுமெனத் திண்ணமாய் நம்புகிறோம்.”
இவ்வாறு பண்டித மாளவியா இந்த வரவேற்பை ஸ்வாமிகளிடம் சமர்பித்தார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்
------------------------------------------------------------
பண்டித மதன்மோகனமாளவியா அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஸ்வாமிகள் 1935-பிப்ரவரி மாதம்,ஒன்பதாம் தேதி காசி ஹிந்து ஸர்வ கலாசாலைக்கு விஜயமானார்கள்.
அன்று, ஸர்வ கலாசாலையின் கட்டிடமெல்லாம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஸ்வாமிகள் பிரதான வாயிலருகே வந்ததும் மாளவியா அவர்களும், அதிகாரிகளும், பேராசியர்களும், மாணவர்களும், ஸ்வாமிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஸர்வ கலாசாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஸ்வாமிகளை அழைத்துச் சென்று , ஆங்காங்கு நடைபெறும் கல்வி போதனைகளை எடுத்துக் கூறினார். பின்னர் பிரதான மண்டபத்தில் அமைக்கப் பெற்றிருந்த பிரத்யேகமான ஆசனத்தில் ஸ்வாமிகள் அமர்ந்தார்கள். யாவரும் ஸ்வாமிகளை வணங்கியவுடன், தாம் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் அடங்கிய ,வரவேற்புப் பத்திரத்தைப் பண்டித மாளவியா வாசித்து ஸ்வாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார்.
அவர் வாசித்தளித்த ஸ்லோகங்களின் கருத்து
“எவரது திருவடியை மனிதன் எண்ணியவுடன் எல்லாவித அஞ்ஞான இருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுமோ, எந்த மகானது திருவாக்கிலிருந்து வெளிப்படும் மொழிகள்,உலகத்தின் எல்லாச் திசைகளிலும் பரவி ஒலிக்கின்றனவோ, எவரிடம் எல்லாச் சாத்திரங்களின் உட்பொருளும் அடங்கிப் பிறர் அறியக் கண்ணாடியைப் போல் பிரதிபலித்து வருகின்றனவோ,அவ்வித மகிமைகள் வாய்ந்த ஸ்ரீ சங்கரரது காஞ்சீபீடத்தில்,விளங்கி வரும் அண்ணலே!
பாரத நாட்டின் தவப்பயனாய், தத்துவம், ஞானம், தவம்,கருணை,கொடை,அருள் முதலிய குணங்களின் உருவாகத் தோன்றியிருக்கும் தங்கள் கீர்த்தியும், கருணையும் நாடு முழுதும் பரவி மக்களைப் புனிதராக்கிப் பிரகாசித்து வருகின்றன.
பாரத நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல கலைகளைக் கற்க,இங்கு குழுமியுள்ள மாணவர்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும், வணக்கத்துடன் தங்களுக்கு நல்வரவளிக்கின்றோம்.
மிகவும் கொடிய இக்கலியில், தருமங்களுக்குக் குறைவு ஏற்பட்டு வரும் இத் தருணத்தில், என்றும் அழியாத நலனை மக்கள் அடைவதற்கு ஆதாரமாக உள்ளனவும்,தங்கள் திருவாக்கிலிருந்து வெளி வரப்போவதுமான, தேன் மயமான உபதேச மொழிகளைப் பருக நாங்கள் காத்து நிற்கின்றோம். தங்கள் உபதேசம் உலகத்தின் நன்மைக்கே அஸ்திவாரமாக விளங்கும்.
உலக வாழ்க்கைக்கும்,தெய்வத் தன்மையை அடையவும் பயன்படக் கூடியவாறு மேல்நாட்டு, கீழ்நாட்டு முறைகளில் எவை உயர்ந்தனவையாகக் கருதப்படுகின்றனவோ,அந்த முறைகளிலேயே கல்வி கற்பிக்கப்படும் இந்தக் கலாசாலையும் நமது நாடும், நம் மக்களும், தங்கள் விஜயத்தினாலும், கருணை மிக்க உபதேச மொழியினாலும் உயர் நிலையை அடையுமெனத் திண்ணமாய் நம்புகிறோம்.”
இவ்வாறு பண்டித மாளவியா இந்த வரவேற்பை ஸ்வாமிகளிடம் சமர்பித்தார்.
மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்
------------------------------------------------------------
பண்டித மதன்மோகனமாளவியா அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஸ்வாமிகள் 1935-பிப்ரவரி மாதம்,ஒன்பதாம் தேதி காசி ஹிந்து ஸர்வ கலாசாலைக்கு விஜயமானார்கள்.
அன்று, ஸர்வ கலாசாலையின் கட்டிடமெல்லாம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஸ்வாமிகள் பிரதான வாயிலருகே வந்ததும் மாளவியா அவர்களும், அதிகாரிகளும், பேராசியர்களும், மாணவர்களும், ஸ்வாமிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஸர்வ கலாசாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஸ்வாமிகளை அழைத்துச் சென்று , ஆங்காங்கு நடைபெறும் கல்வி போதனைகளை எடுத்துக் கூறினார். பின்னர் பிரதான மண்டபத்தில் அமைக்கப் பெற்றிருந்த பிரத்யேகமான ஆசனத்தில் ஸ்வாமிகள் அமர்ந்தார்கள். யாவரும் ஸ்வாமிகளை வணங்கியவுடன், தாம் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் அடங்கிய ,வரவேற்புப் பத்திரத்தைப் பண்டித மாளவியா வாசித்து ஸ்வாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார்.
அவர் வாசித்தளித்த ஸ்லோகங்களின் கருத்து
“எவரது திருவடியை மனிதன் எண்ணியவுடன் எல்லாவித அஞ்ஞான இருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுமோ, எந்த மகானது திருவாக்கிலிருந்து வெளிப்படும் மொழிகள்,உலகத்தின் எல்லாச் திசைகளிலும் பரவி ஒலிக்கின்றனவோ, எவரிடம் எல்லாச் சாத்திரங்களின் உட்பொருளும் அடங்கிப் பிறர் அறியக் கண்ணாடியைப் போல் பிரதிபலித்து வருகின்றனவோ,அவ்வித மகிமைகள் வாய்ந்த ஸ்ரீ சங்கரரது காஞ்சீபீடத்தில்,விளங்கி வரும் அண்ணலே!
பாரத நாட்டின் தவப்பயனாய், தத்துவம், ஞானம், தவம்,கருணை,கொடை,அருள் முதலிய குணங்களின் உருவாகத் தோன்றியிருக்கும் தங்கள் கீர்த்தியும், கருணையும் நாடு முழுதும் பரவி மக்களைப் புனிதராக்கிப் பிரகாசித்து வருகின்றன.
பாரத நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல கலைகளைக் கற்க,இங்கு குழுமியுள்ள மாணவர்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும், வணக்கத்துடன் தங்களுக்கு நல்வரவளிக்கின்றோம்.
மிகவும் கொடிய இக்கலியில், தருமங்களுக்குக் குறைவு ஏற்பட்டு வரும் இத் தருணத்தில், என்றும் அழியாத நலனை மக்கள் அடைவதற்கு ஆதாரமாக உள்ளனவும்,தங்கள் திருவாக்கிலிருந்து வெளி வரப்போவதுமான, தேன் மயமான உபதேச மொழிகளைப் பருக நாங்கள் காத்து நிற்கின்றோம். தங்கள் உபதேசம் உலகத்தின் நன்மைக்கே அஸ்திவாரமாக விளங்கும்.
உலக வாழ்க்கைக்கும்,தெய்வத் தன்மையை அடையவும் பயன்படக் கூடியவாறு மேல்நாட்டு, கீழ்நாட்டு முறைகளில் எவை உயர்ந்தனவையாகக் கருதப்படுகின்றனவோ,அந்த முறைகளிலேயே கல்வி கற்பிக்கப்படும் இந்தக் கலாசாலையும் நமது நாடும், நம் மக்களும், தங்கள் விஜயத்தினாலும், கருணை மிக்க உபதேச மொழியினாலும் உயர் நிலையை அடையுமெனத் திண்ணமாய் நம்புகிறோம்.”
இவ்வாறு பண்டித மாளவியா இந்த வரவேற்பை ஸ்வாமிகளிடம் சமர்பித்தார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM