Post by Sumi on Apr 2, 2012 8:29:27 GMT 5.5
Source: Maha Periyava Dharisana Anubhavangal
Part - 7
பெரியவா, கருணையே உருவெடுத்து வந்தவர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அந்த கருணையை சுவைத்து பார்க்கும் பெரும்பேறு சிலருக்கே கிடைத்திருக்ககூடும்.
ஹாஸ்பெட்டில் முகாம் செய்திருந்தபோது, இரண்டுகெட்டான் வேளையில் சென்னையிலிருந்து இரண்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களுடன் சில நிமிஷங்கள் பேசிவிட்டு, பிரசாதம் கொடுத்தார்கள், பெரியவாள். கொடுத்துவிட்டு, ஓய்வெடுபதற்காக உள்ளே சென்றுவிட்டார்கள்.
அன்பர்கள் இருவரும் பிரசாதத்தை எடுத்து கொண்டு புறப்பட வேண்டியது தானே? ஊஹும்! அவர்கள் புறப்படவில்லை.
அணுக்க தொண்டர் கண்ணன் என்பவர் அருகில் வந்து, 'பெரியவா உத்திரவு கொடுத்துட்டாளே? நீங்க புறப்படலாமே?' என்று நாகரீகமாக நினைவுபடுத்தினார்.
'நாங்கள் எப்படி போகமுடியும்? நாங்கள் வந்த காரியம் ஆகவில்லை. காரியம் முடிந்தவுடன் போயிடுவோம்..' என்றார்கள்.
கண்ணனுக்கு கோபமே வந்துவிட்டது. 'இதோ பாருங்கோ... பெரியவா உங்க காரியத்துக்காக இல்லை. உங்களுக்கு பெரியவா தரிசனம் கொடுத்ததே பெரிய பாக்கியம். உடனே கிளம்பி போங்கோ..'
'நாங்க வந்த காரியம் ஆகவில்லையே? அதட்டி விரட்டினால் பயந்து போயிடுவோம்னு பார்த்தீர்களா?'
கண்ணன் எரிமலையாக நெருப்பை கக்குவதற்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால், கருணாமூர்த்தியே வெளியே வந்துவிட்டது!
"உங்களுக்கு என்ன காரியம் ஆகணும்?"
"பெரியவா பாததரிசனம் கிடைக்கணும். வஸ்திரம், பாதங்களை மூடி கொண்டிருகின்றது. அதனால் திருவடிகள் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த காரியம்தான் பாக்கி நிற்கிறது..'
பாதங்களை மறைத்து கொண்டிருந்த காஷாய வஸ்திரத்தை மெல்ல அகற்றினார்கள், பெரியவாள்.
அன்பர்கள், கன்னத்தில் போட்டுகொண்டு, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.
'ஆனந்தம் !.. மகாப் பிரபோ!.. ஆனந்தம் !.. இதற்காகத்தான் வந்தோம்!..
மறுபடியும் ஆசி வழங்கிவிட்டு பெரியவாள் உட்புறம் சென்றார்கள்.
அன்பர்கள் இருவரும் ஆனந்த கடலில் நீந்தியபடியே வெளிப்புறம் நோக்கி சென்றார்கள். கண்ணன், கண்களை துடைத்து கொள்கிறார். 'பெரியவாளுக்குதான் எவ்வளவு கருணை!'
ஆம், பாதாதி கேசம் (இல்லை! பாதாதி சஹஸ்ராமம் - கபாலம்) கருணை.
Part - 7
பெரியவா, கருணையே உருவெடுத்து வந்தவர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அந்த கருணையை சுவைத்து பார்க்கும் பெரும்பேறு சிலருக்கே கிடைத்திருக்ககூடும்.
ஹாஸ்பெட்டில் முகாம் செய்திருந்தபோது, இரண்டுகெட்டான் வேளையில் சென்னையிலிருந்து இரண்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களுடன் சில நிமிஷங்கள் பேசிவிட்டு, பிரசாதம் கொடுத்தார்கள், பெரியவாள். கொடுத்துவிட்டு, ஓய்வெடுபதற்காக உள்ளே சென்றுவிட்டார்கள்.
அன்பர்கள் இருவரும் பிரசாதத்தை எடுத்து கொண்டு புறப்பட வேண்டியது தானே? ஊஹும்! அவர்கள் புறப்படவில்லை.
அணுக்க தொண்டர் கண்ணன் என்பவர் அருகில் வந்து, 'பெரியவா உத்திரவு கொடுத்துட்டாளே? நீங்க புறப்படலாமே?' என்று நாகரீகமாக நினைவுபடுத்தினார்.
'நாங்கள் எப்படி போகமுடியும்? நாங்கள் வந்த காரியம் ஆகவில்லை. காரியம் முடிந்தவுடன் போயிடுவோம்..' என்றார்கள்.
கண்ணனுக்கு கோபமே வந்துவிட்டது. 'இதோ பாருங்கோ... பெரியவா உங்க காரியத்துக்காக இல்லை. உங்களுக்கு பெரியவா தரிசனம் கொடுத்ததே பெரிய பாக்கியம். உடனே கிளம்பி போங்கோ..'
'நாங்க வந்த காரியம் ஆகவில்லையே? அதட்டி விரட்டினால் பயந்து போயிடுவோம்னு பார்த்தீர்களா?'
கண்ணன் எரிமலையாக நெருப்பை கக்குவதற்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால், கருணாமூர்த்தியே வெளியே வந்துவிட்டது!
"உங்களுக்கு என்ன காரியம் ஆகணும்?"
"பெரியவா பாததரிசனம் கிடைக்கணும். வஸ்திரம், பாதங்களை மூடி கொண்டிருகின்றது. அதனால் திருவடிகள் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த காரியம்தான் பாக்கி நிற்கிறது..'
பாதங்களை மறைத்து கொண்டிருந்த காஷாய வஸ்திரத்தை மெல்ல அகற்றினார்கள், பெரியவாள்.
அன்பர்கள், கன்னத்தில் போட்டுகொண்டு, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.
'ஆனந்தம் !.. மகாப் பிரபோ!.. ஆனந்தம் !.. இதற்காகத்தான் வந்தோம்!..
மறுபடியும் ஆசி வழங்கிவிட்டு பெரியவாள் உட்புறம் சென்றார்கள்.
அன்பர்கள் இருவரும் ஆனந்த கடலில் நீந்தியபடியே வெளிப்புறம் நோக்கி சென்றார்கள். கண்ணன், கண்களை துடைத்து கொள்கிறார். 'பெரியவாளுக்குதான் எவ்வளவு கருணை!'
ஆம், பாதாதி கேசம் (இல்லை! பாதாதி சஹஸ்ராமம் - கபாலம்) கருணை.