|
Post by saidevo on Sept 17, 2013 9:07:51 GMT 5.5
64. ராமதர்மம் (அறுசீர் விருத்தம்: காய் விளம் காய் காய் விளம் காய்)
நாரணனின் மந்திர ரகரமுடன் .. நாயகனின் மந்திர மகரமதே* சேரவரும் ராமநின் திருநாமம் .. வேருடனே வினையெலாம் அழித்திடுமே நாரணனாம் ராமநின் வேரென்றால் .. ஆஞ்சனேயன் அத்தனின் அம்சமாவான் காரிருளை நீக்கிடும் ராமநாமம் .. தாரகமந் திரமெனக் கொள்வோமே.
ஒருவனுக்கு ஒருத்தியாம் தருமத்தை .. உறுதியுடன் வாழ்ந்துநீ காட்டினாயே குருமுதலாம் தந்தைசொல் மந்திரமாய் .. உறும்துயர்நீ தெரிந்துமே கொண்டாயே பரிவுடனே தமையனாய் வழிகாட்டி .. தருமங்கள் உலகினில் நிறுவினாயே சரணமென ஒருவனுன் தாள்பற்ற .. கனிவுடனே அவனைநீ காப்பாயே.
ராமநாமம் மனம்வர எச்செயலும் .. ரம்மியமாய் முடிவதைக் காண்போமே ராமஜயம் எழுதுதல் கூடினாலே .. பாவமெலாம் குறைந்திடக் காண்போமே ராமகதை படிப்பதும் கேட்பதுமே .. ஆன்மீக மலர்ச்சியைத் தந்திடுமே ராமராம மந்திரம் சொன்னாலே .. மராமரமாய்ப் பிறவிகள் சாய்ந்திடுமே.
--ரமணி, 15/09/2013, கலி.30/05/5114
முதலடி விளக்கம்: ’ஓம் நமோ நாராயணா’ என்னும் விஷ்ணு மந்திரத்தில் இருக்கும் ரா-வெனும் எழுத்தும் ’ஓம் நமச்சிவாய’ என்னும் சிவ மந்திரத்தில் இருக்கும் ம-வெனும் எழுத்தும் சேர்ந்து சிவாவிஷ்ணு அபேதத்தை உணர்த்தவே ராம நாமாயிற்று என்பது ஆன்றோர் வாக்கு.
*****
|
|
|
Post by kahanam on Dec 28, 2013 12:26:07 GMT 5.5
’ஓம் நமோ நாராயணா’ என்னும் விஷ்ணு மந்திரத்தில் இருக்கும் ரா-வெனும் எழுத்தும் ’ஓம் நமச்சிவாய’ என்னும் சிவ மந்திரத்தில் இருக்கும் ம-வெனும் எழுத்தும் சேர்ந்து சிவாவிஷ்ணு அபேதத்தை உணர்த்தவே ராம நாமாயிற்று என்பது ஆன்றோர் வாக்கு." Excellent poem by Sri Ramani. Sri Rama Jayam! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|
|
Post by radha on Dec 29, 2013 0:35:40 GMT 5.5
HARI OM !
SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA
THERE IS NO GREATER NAMA THAN RAMA NAMA
HARE RAMA HARE RAMA , RAMA RAMA HARE HARE
SRI RAMA RAMA RAAMETHI RAME RAAME MANORAME SAHASTRA NAMATHA THULYAM RAMA NAMA VARANANE.
நமக்குத் தேவையான விளக்கு---WHAT RAMAYANAM SAYS ? 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்'
* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள். * ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர். * பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை. * அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. * சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும். * உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது. - ராமாயணம் 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்' 'ஸ்ரீராம ஜெயம்'
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA !
|
|